கவிஞர்.ராபர்ட் ப்ரோஸ்ட்
சிலர் கூறுகிறார்
இவ்வுலகம் நெருப்பில் அழியும் என்று,
சிலர் கூறுகிறார்
பனியில் என்று.
என் விருப்ப அனுபவிப்பில்
நெருப்பு என்பவர்களுக்குஆதரவாய்
நிற்கிறேன்.
ஆயினும், இருமுறை அழியுமாயின்,
நான் எண்ணுகிறேன்
வெறுப்பின் போதிய புரிதல்
எனக்குண்டு,
அழிவிற்கு பனியும்
மிகப்பெரிய ஆற்றலே,
போதுமானதாகும்.
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment