Saturday, November 10, 2018

கனவுகள்



நான்காண்டுகளுக்கு பதிலாக ஆறாண்டுகள் கழிந்தன
பேரச்ச அனுபவங்களில்
பேரச்சம் தவிர்த்து ஏதும் இல்லை எம் நிலத்தில்
நான் வாழ்ந்தேன்
குடும்பத்தை விட்டு நீங்கி
தியாகங்கள் சேர்த்தேன்
இன்றைய வெளிச்ச, ஒளிர் நாட்கள்
வசப்பட: கனவுகள்
மீப்பெருமை முந்தியிருக்க காண்கிறேன்
நெடிய பாதையாயினும்
அங்கு சேர்வேன் என்பதறிவேன், மனிதர் பேராழியைக்
கடந்துள்ளார்
சிலர் கலத்தில்
வேறு சிலர் உள்ளத்தில்
வெகு சிலரே முட்படுகைப் பாதையில் நீந்திக் கடந்தார்;
நான் அறிவேன்
புன் சிரிப்புடன் இறுதியில்
பேராழி பெரும் பரப்பாயினும்
எம்மால் கடந்திட இயலும் என்றறிவேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

No comments: