ஒரு நூறு தடவைக்கு மேல் கண்டேன்,
சிலர் உரிமை கோரிய இசைக் காட்சி
நெடிய திரை முடிவுக்கு வந்தது,
தொலைக்காட்சி செய்தியில்,
அதன் இறுதி திரை இறக்கம் அறிந்தேன்.
பூக்கள் சொரிய, குதூகல குரல்கள் ஒலிக்க,
அழுகை சேர, இடி முழக்க இறுதி காட்சி.
குறிப்பிட்ட இக்காட்சியை நான் காணவில்லை
ஆனால் நான் அறிவேன்,
நான் கண்டிருந்தால் என்னால் பொறுத்திருக்க முடியாது,
என்னை நோயில் தள்ளியிருக்கும்.
என்னை நம்புவீர்,
உலகம் அதன் மக்களும், கலாபூர்வ பொழுதுபோக்கு
எனக்கு எதையும் அளிக்கவில்லை.
ஆனாலும், அவர்கள் மகிழட்டும்,
அவர் என்னை விட்டு அகன்றிருப்பர்,
என்னுடைய இடிமுழக்க பாராட்டுகள்,
அவர்களுக்கு.
('கர்டைன்' தலைப்பில் ஆங்கிலத்தில்" சார்லஸ் புகோவ்ஸ்கி" இயற்றியது. தமிழில்)
No comments:
Post a Comment