கவிஞர். நசீர் அக்பராபடி
பேராசை , தூண்டுதல் விட்டொழி,
உமது அண்மை, தொலைவு சுற்றுச் செலவு
மறந்துவிடு;
மரண கொள்ளையன் தமது எக்காள இசை நிகழ்த்துகிறான்
பகல் இரவை கொள்ளையிட்டு;
இடம் விட்டு இடம், உமது பரிவாரங்களுடன் ஏன் சுற்றித்திரிகிறாய்;
சுள்ளியும் கூட இறுதியாக உம்முடன் சேரா மரணம் நேர்கையில்;
உமது வளங்கள், பெருமைமிகு வாழ்க்கை யாவும்
உமக்கு பின்னால் நின்று போகும்;
உமது போர்வாள், கேடயங்கள் கண்டு தற்பெருமை அடையாதே;
மரணத்தின் ஈட்டியை கண்ணுற்று
அவை உம்மை விட்டு அகன்று விடும்;
தனியாக, பாலைவனத்தில் புதைகுழியின் தூசு
உமக்கு உணவாகும்;
அந்த பாலையில், மெய்யாக, நசீர்,
ஓர் ஊருயிரியும் உம்மிடம் வருகை தராது;
உமது செல்வங்களும், செழிப்பான வாழ்க்கை முறையும்
அகன்று போகும்;
மரண தேவதை தனது முதுகில் உம்மைச் சுமக்கும்
தருணம்.
(மொழியாக்கத்தில்)
No comments:
Post a Comment