கவிஞர்.சார்லஸ் புகோவஸ்கி
எங்கள் வசம் தங்க மீன் இருந்தது,
சுற்றி, சுற்றி வந்தது.
மேசை மீது ,
மீன் கலயத்தில் பலகணி அருகில்,
திடமான திரைச் சீலை,
தாயின் படம் மறைத்து,
எப்போதும் புன்னகை பூத்து,
அனைவரையும் மகிழ்ச்சியாக
இருங்கள் என்று கூறினார்,
'என்ரி மகிழ்ச்சியாக இரு!'
என்றார்.
அவள் சரியே: உம்மால் இயன்றால்
மகிழ்ச்சியாக இருப்பது
மிக நன்று,
எனது தந்தை தொடர்ந்து
அவளை துன்புறுத்தி வந்தார்
என்னையும் சேர்த்து,
வாரத்தில் பலமுறை.
6.2 அடியில் நெடிய தோற்றம்
உள்ளார்ந்த சினத்துடன்,
அவருள்
என்ன தாக்கிக் கொண்டிருந்ததோ.
என் தாய், பரிதாபத்திற்குரிய மீன்,
மகிழ்ச்சியாக வாழ்ந்திட விழைந்து,
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள்
அடிபட்டு,
என்னிடம் 'மகிழ்ச்சியாய் இரு என்ரி!
ஏன் புன்னகைக்கவில்லை?' என்பார்.
பின் புன் முறுவல் இடுவார்,
எப்படி என்று,
நான் அதுவரை
கண்டிராத மிகவும் துக்கமான புன்னகை
அதுவாக,
ஒரு நாள் தங்கமீன் இறந்தது,
ஐந்து மீன்களும் இறந்து மிதந்தன.
அதன் கண்கள் திறந்தபடியே,
ஒருக்கலித்து மிதந்தன.
தந்தை இல்லம் வந்தபின்,
அவைகளை வீசி எறிந்தார்
பூனையிடம்,
சமையலறை தரை மீது.
நாங்கள் பார்த்திட,
எங்கள் தாய்
புன்னகைத்தார்.
(மொழியாக்கத்தில்)
No comments:
Post a Comment