Saturday, December 1, 2018

வாழ்க்கையின் பாதி


(கவிஞர்.பிரடரிக் ஓல்டர்லின், செர்மானியக் கவிஞர்.
வசந்த கால செழிப்பும், குளிர்காலச் சிரமும் குறித்து, இப்படி .......)

மஞ்சள் பேரிக்கள்
காட்டு முளரிகள் பூத்துக் குலுங்கும்
எங்கெங்கும்
ஏரியை நோக்கி நீண்டிடும் கரை
ஓ! கருணை மிகு அன்னப் பறவைகளே,
முத்தங்களை மொண்டு
தலைக் கவிழ்ந்து
தெளிந்த தூய நீரில்.

ஆ, எங்கு காண்பேன்
மலர்களே,
குளிர்கால வருகையில்
சூரியக் கதிர்கள் எங்கே?
பூமி நிழல்கள் எங்கே?
சுவர்கள் குளிர்ந்திருக்க
பேச்சற்று காற்றில்
வானிலை திசைக் காட்டி
கிரீச்சொலியில்

(மொழியாக்கம்)

No comments: