கவிஞர்.கெவன் ஆர்வுட்
உலகின் ஒழுங்கைக் காட்டு,
அனைத்து பட்டறிவுக்கும் முன்னர்
இது இப்படி, கடு-விளிம்பின்
வெளிச்சம் என்று,
உலகிற்கும், சிந்தனைக்கும் பொதுவான,
மாதிரி இல்லை,
உண்மையைத் தவிர.
மொழி சரியான விளையாட்டன்று,
அவ்வாறாயின்,
எவ்வாறு நாம்
விளையாடியிருக்க இயலும்?
பொருட்களின் கூட்டல்ல உலகம்
அதை விட மேலானது.
நிலா , வான் போன்று, நடுவம் போன்று
உடல், படுக்கை போன்று,
பாடிடும் மேதாவிகள் அறிவர்.
காதலர் இருவர் படங்கள்
அருகருகே, துயின்று
கனவு கண்டு, விழித்து
மெய்யுலகை, கனவுலகைத்
தாங்கி நிற்பர்
உடல், உடலாக;
சொல், சொல்லாக
சிந்தனை வன,
ஒளி வட்டத்தில்
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment