Tuesday, December 18, 2018

இந்திய சுதந்திரப் போரில் சிங்காரவேலரின் பங்கு

 மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம், தோழர். சிங்காரவேலர் அவர்களின், 159 ஆம் பிறந்த நாள் விழாவை 16.12.2018ல், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடியது. 
அதில் முதல் பரிசு பெற்ற கவிதை.


அடிமை வாழ்வை வெறுத்தாய்!
ஆதிக்க உணர்வை வெறுத்தாய்!
சந்தர்ப்ப சூழல் உடைத்தாய்!
சாதிக்கும் மனம் படைத்தாய்!
விதியில் பயனில்லை என்றாய்!
வீதியில் இறங்கி நின்றாய்!
வேங்கை குணம் கொண்டாய்!
விடுதலை வேள்வியில் குதித்தாய்!

நூற்றாண்டுகள் தலை நொறுக்கும் போரின்
நெடிய போர்ப் பரணி நிரல் இசைத்தாய்!
எக்காலத் தமிழரிடை வக்காலத்துஏற்று
ஏக்கழுத்து தமிழனாய் பகுத்தறிவேற்றினாய்!
சமதர்ம கதிரொளியில் சமூக நீதி நாட்டினாய்!

காட்சி மாறிட, விவசாய, தொழிலாளர் கட்சி
அமைத்தாய்!
அடிப்படை ஆதாரம் இணைத்துப் பார்த்தாய்!
தேரோட்டமே தேசிய நீரோட்டம் எனும்
காந்திய அணுகுமுறை மறுத்து,
போராட்ட களம் அமைத்தாய்!
'ரெளலட் சட்டம்' எதிர்த்து நின்றாய்!
பேச்சுரிமை, எழுத்துரிமை எம் பிறப்புரிமை
என்றாய்!
புறக்கணிப்பு அரசியல் ஏற்றி வழக்குரைஞர்
அங்கி துறந்தாய்!
'ஜாலியன் வாலா பாக்'' படுகொலை எதிர்த்தாய்!


துடிப்புடன் மிடுக்காய்!
ஒத்துழையாமை இயக்கம் ஒருங்கிணைத்தாய்!
சுதந்திரப் போரின் விசை முடுக்கினாய்!
நீடு துயில் நீக்க நீள் கிளர்ச்சி கொண்டாய்!
நிலாச் சோறு  உண்டாய்!



No comments: