Thursday, December 20, 2018

டிசம்பர் வாழ்த்து


கவிஞர்.லியோ யான்கிவிச்

அட்டைகளின் தொலை ஒலி நீ கேட்கிறாய்.
ஒளிஉமிழ் விளக்குகள், காக்காய்பொன்,
இலவங்கம், கிராம்பு,
பனி குன்றிற்கு அப்பால் விண்மீன்,
காண்கிறாய்.

கிறிஸ்துமஸ் மரங்களின் அடுக்குகள்
நீ காணலாம்,
உலர் பழங்கள், திராட்சை
தோப்பின் கனிகள்அருகில் ,
வாங்கலாம்
பொன் நிறத்தில் பொறிக்கப்பட்ட வாழ்த்து மடல்:
"மகிழ்ச்சி, அன்பு, அமைதி"

நீ !
தற்காலிக அடுப்பின் வெப்பத்தில்
ஒலியுடன் கொட்டிடும்''கில்பசா '( கொத்துக்கறி) கொழுப்பை
 உமிழ்நீரால் சுவைத்திடு
பணப்பரிவர்த்தனை செய்து
சிகெரட் கொளுத்தப்படுகிறது.

வரிசையில் இடிபட்டு,
மெய் விருப்பத்துட்டன்
இருப்பது போல் பாவனை செய்து
நீ !
பருமனான பெண்கள் மீன் வெட்டுவதைக்
காண இயலும்.

சில கணம்  கண்களை மூடிக்கொள்ள 
முடியும்,
கையுறைகளை த் தாண்டி குத்திடும் குளிர்ச்சியை
மறந்திட இயலும்,
வானத்தில் உள்ள வைர கழுத்தணியை காண முடியும்,
அல்லது நகரத்தின் புறாக்களிடையே
யேசுவைக் காண இயலும்..

(மொழியாக்கம்)

No comments: