கவிஞர்.ஜான் எக்லெ
கதவுகள் திறந்திருக்க
அனவரும் வெளியில்,
வான வேடிக்கைக்காக
அணியமாக,
'எட்டி'- நாய் தவிர,
அது கொட்டில் அடைக்கப்பட்டு.
வெளியில் இருந்தாலும், உள் அரங்கில்
பட்டாசு வேடிக்கை நிகழ்ந்தது.
இறப்பதை விட, பாதுகாப்பான வேடிக்கை
மிக நல்லது என்கிறார் தந்தை.
அண்டை அயலார் வான வேடிக்கையில்
காற்று முழுமையும் பட்டாசு வாசம்.
.
அம்மா கூறுகிறார், இவ்வாண்டு
அவர்கள் நல்லவராக
நடந்து கொள்கிறார்.
கிறித்தோபர் இவ்வாண்டு
அவனுடைய தந்தைக்கு உதவியாக,
வெடிகள் கொளுத்திட,
அனுமதிக்கப்பட்டான்
அவன் பெருமிதத்தில்
அவனுக்கு வயது 28 .
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment