கவிஞர். பியோடர் இவனாவிச் டையூட்சர்
ஓ!
நலிவடையும் நாட்களில்
மிக இதமாக,
ஆழ்ந்த பிரியத்துடன்
நாம் அன்பு செலுத்துவோம்......
மேற்கில் இன்னும் நாடோடியாக
கழிந்திடும் பொழுதே,
மின்னவும், மின்னவும்
இறுதி நேய வீழ் ஞாயிற்றின்,
விலகும் ஒளிக் ஒளிக் கீற்றுகளே,
நிழல் விண்ணுலகைத் தழுவிடும்,
மேற்கில் வெளிச்சம் இன்னும் நாடோடியாக,,-
பொறுத்திடு, பொறுத்திடு
வீழ்ந்திடும் பகலே,
நீட்டிடு, நீட்டிடு உமது வசியத்தை
நமது நாளங்களில் இரத்தம் இலகலாம்,
ஆயினும்,
நமது இதயத்தில் இத உணர்ச்சி
ஆட்சியில்.......
ஓ, நீ!
எமது இறுதி நேயமே!
நீயே எமது சொர்க்கம்,
நீயே எமது சாபம்.
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment