Friday, December 21, 2018

தனிமை இரவு

கவிஞர். எர்மன் கெசெ

உடன்பிறந்தோரே, நீங்கள் எம்மவர்,
நெருக்கத்தில் உள்ளோரே
தொலைவில் உள்ளோரே
வறியவரே,

விண்மீனுக்கு விழைவோரே,
வலியிலிருந்து நிவாரணக் கனவில்
தடுக்கி விழும்
பேச்சற்றவரே,

இரவில் மின்னிடும் வெளிர் விண் மீன் ஒத்தவரே,
ஒடுங்கிய உமது கரங்களை உயர்த்திடு
சில நம்பிக்கைக்கு,

துயருறு, விழித்திடு
குழப்பமான பொது வறியவரே,

கடலாடிகளே நீங்கள் வாழவேண்டும்
நட்சத்திரமற்ற நம்பிக்கையின்மையில்,

நாம் ஒரே முகம் உடையவர்.
எனது நல் வருகையைத் திருப்பிடு.
(மொழியாக்கம்)

No comments: