Thursday, February 28, 2019

போரும் அமைதியும்


டாக்டர்.மதன் காந்தி

போர், 
மனிதனின் படைப்பு
கலவரம், போர்......
 யாவும்
மனிதன் ஊன்றிய விதைகள்
அறுவடை ?
இறப்பு

இக் காலம்,
அமைதி பாலங்கள்
கட்டி எழுப்பும்
முதலீட்டுக் காலம்!
போர் ஆயுதங்கள் வடிக்க
 அன்று !
அமைதிப் புன்னகை 
பரவல் 
ஆக்கும் காலமே!


போர், 
மனித இரத்த வெள்ளத்தை
கட்டவிழ்க்கும்
அமைதி, பாரிய
 நன்றாற்றல்
வெளிக் கொணரும்

போர், மனதில் தோன்றும்,
 நிலத்தில் முடியும்

அமைதி, 
நெஞ்சத்தில் தோன்றும்,
சுற்றிலும் அன்பை 
விதைத்திடும்

போர், 
வெறுப்பு நெடி விளை
மரண நஞ்சாம்
அமைதி, 
உமது தலைவிதி மாற்றும்
சஞ்சீவி
போர், மனிதனின் மிகப் பெரிய
முட்டாள்தனம்
அமைதி, மனிதனின் மிக உயர்
 வாழ்நலம்,

ஆம்.

(மொழியாக்கம்)

No comments: