Saturday, March 23, 2019

உண்ட பின்



கவிஞர்.பை ஜீயி

உண்ட பின் உறக்க உணர்வு எமக்குக் கூடிடும்,
காலம் கடந்து விழித்து இரு குவளைத் தேநீர் பருகி,

பின் அறிவேன் சாய் நிழல்கள், சூரியன்
தென்மேற்கில்  கீழ் மீண்டும் செல்ல.

மகிழ்வுறு மக்கள் கடந்திடும் நாட்கள் எண்ணி சினத்தில்.
துயருறுவர் மெல்லக் கடந்திடும் ஆண்டுகள் பொறுத்திலர்.


துன்பமும் மகிழ்ச்சியும் கொள்ளாத எவரும்
எதையும் அளித்திடும்   இவ் வாழ்க்கையை நம்பி.

(மொழியாக்கம்)

No comments: