Wednesday, March 27, 2019

இரவின் அமைதி






கவிஞர்..ஆர்தர் பேல்டன்

அமைதி தாரகைகள் பெரிதாக, தெளிவாக மின்னிடும்,
பிறை நிலா, கவிழ் கிண்ணம் போல் தொங்கி;
அலைவற்று, அசைவற்று,
என்னால்  கேட்டிட இயலும்
கிளர்ந்திடும் சிந்தனைகளை
என் ஆன்ம அறைகளில்.

(மொழியாக்கம்)

No comments: