Wednesday, March 13, 2019

செல், காதலே


கவிஞர்.ராபர்ட் செளதே

செல், காதலே,
அந்த அழகிய பணிப்பெண்ணிடம் கூறு,
அவள் அழகின் நயம் என் பார்வையில்
இன்னும் சித்தரிக்கும் படமாய்,
சோக நிழலில் நான் நீடித்து இங்கே, எப்படி?,
மந்த துறவு- இரவின் இந்த இருண்ட
மனச்சோர்வு;
சொல்,வாழ்வின் மகிழ்ச்சி யாவும்
தொலைவில் விலகி
வீழும் மாலைப் பொழுதில் நான்,
கூட்டத்தை விட்டுச் செல்ல,
மோதிர-குவிமாட பாடல்
தனிமையில் கேட்டு,
என்னைப் போல் அவள்
தனிமைப் பா பொழிந்து;
சொல்,அவள் இன்மை ,
துயரக்காட்சி அழைப்பில்;
சொல்,அவள் வசீகரிப்பு அனைத்தும் பேசிட,
நான் விழைகிறேன்,
நயத்தில், அவள் மந்திரக்கண் உணர்வேன்
நயத்தில், நகை ஒளியூட்டும்
அவள் கன்னத்தை காண்பேன்,
மெளனம் அசைவற்ற நிலைப்பாய்
தோப்பில் தனித்தியானத்தில்,
காதல், நினைவின் பெருமூச்சு பிளவில்

(மொழியாக்கம்)

No comments: