கவிஞர்.டெல்மிட்ரா அகஸ்ட்டினி
நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன்,
நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்
கடுங்குளிர், சிலுசிலுப்பைத் தாங்குகிறேன்
வாழ்க்கை மிக மென்மையாக,மிக வன்மையாக
வலி தொல்லை, இன்பங்களில் சங்கமித்து,
நான்.
எதிர்பாரா நகையில், அதே வேளை அழுகையில்
பிரியத்தில், பல துயரங்கள் சகிப்பேன்
என் மகிழ்ச்சி தேயும், எனினும் அது மாறாமல் நீடிக்கும்
ஒரே தருணம் நான் முழுமையாய் உலர்வேன்,
பசுமையாய் வளர்வேன்
இவ்வாறு, அன்பின் நிலையற்றவைகளில்
பாடாய்ப் படுகிறேன்
மிகக் கடுமையான வலி என,
நான் எண்ணும் சமயம்
அறியாது அது கடந்து விட்டிருக்கும்,
மீண்டும்.
பிறகு , என் மகிழ்ச்சி நிச்சயம்
எனது பெருமகிழ்ச்சி நேரம் வாய்த்தது
என உணரும்சமயம்
காண்கிறேன் நான், எனது வலி திரும்பிடும்
மறுபடியும்.
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment