Sunday, December 30, 2018

அனைத்தும்

சூடான் நாட்டுக் கவிஞர். அல் சாதிக் அல் ராடி

மீனவன் வாயிலிருந்து வீசட்டும் காற்று,
பாய்மர படர்விலிருந்து படகு கூட்டிற்கு,
வாய்திறந்திடும் ஆறு-
ஆக கூச்சலிடு, மூழ்கும் மனிதனே
துரோக நீரில் மூழ்கிடும்  சமயம்

வகைறையில், அமைதியில்
பயணத்திடும் ஆறு
இறந்த மீனின் செதில்களில் 
ஆற்றங்கரை சூரியன்களை திரட்டிச்
சேர்த்திடும்
எதிர்ச் சுழிப்புகள் நெருக்கித் தள்ள
சக்திகளுடன், எறி பளு நறுமணத்தில்
மனங்கவர் நுண்ணிய பண்பில்
நிழல் அடுமனையில்

சாந்தமாகி, தென்றல் சரக்கேறி அசைவின்மையில்
பாய்மரம் சோம்பலில் ஏறிட,

தொலைவிலிருந்து இரவு முழுவதும்/முழுதும் அவர் பயணம்
ஆற்றில் உழுது சடங்கு நிலை பேற்றில்,
எதிர்ப்படும் இருண்மை உற்று நோக்கி

வைகறை பயணம் தொடங்கு
இதயக் கரைசலில் ஊறித்திளைத்த,
உமது முழு வாழ்க்கை கடற்கரையில்

ஆயினும், அவள் பார்வையில் 
பூமி மீதில் சுவர்க்கம், விருப்பமானவன் அளிப்பில்
கவிதையின் செப்பத்தில்
கோருகிறது- அனைத்தும்

(மொழியாக்கம்)

No comments: