Saturday, January 12, 2019

பேரார்வம் ஈர்த்திடும் உண்ணி


கவிஞர்.பாப்லோ நெருடா

என் பேரார்வம் ஈர்த்திடும் உண்ணி
மணிக்கணக்கில் என்னைக் கடிக்கட்டும்,
அவை நிறைவான, தொன்மையான, 
சமஸ்கிருதம் போன்றவை,
அவை முறையீடு ஏற்கா பொறிகள்.
உண்பதற்காக கடிப்பவை அன்று,
துள்ளலுக்கு மட்டும் குதிப்பவை ;
விண்கோள நடனமாடிகள் அவை,
நுண்ணிய கழைக் கூத்தாடிகள்,
மிக மென்மையான,
மிகவும் ஆழமான ஆட்ட வட்டரங்கில்;
என் தோல் மீதில் பாய்ச்சலோட்டம்,
உளக் கிளர்ச்சியை வெளிப்படுத்தட்டும்,
பொழுது போக்கட்டும் என் குருதியில்,
எவராகிலும் அவற்றை அறிமுகம்
எனக்கு செய்திட வேண்டும்.
உன்னிப்பாக, அவற்றை நான் 
அறிந்திட விழைவேன் ,
எதைச் சார்ந்திருக்க நான் அறிந்திடட்டும்.

(மொழியாக்கம்)

No comments: