Thursday, January 3, 2019

கடந்திடும் ஆண்டு கனிவானதே


கவிஞர்.வால்டர் சேவேஜ் லாண்டர்.

விடைபெறும் ஆண்டு கனிவாய்,சுவையாய்
விழும் தெளிப்பின் நறுமணம்;
வாழ்க்கை கடந்திடும் இன்னும்
மோசமான படை நடப்பில்,
களிம்பற்ற அதன் இறுதி நாளில்.

அதன் முடிவுக்கு நான் காத்திருக்கிறேன்,
அதன் துயரம் வழி நடத்துகிறேன்,
ஆனால்,
அதன் துக்கம் என் நெஞ்சத்திலோ,
அன்றி
என் கல்லறையிலோ விழவேண்டாம்.
வீழும் கண்ணீர்,
அனைத்திற்கும் ஆறுதல் அளித்திருக்கும்.

(மொழியாக்கம்)

No comments: