Monday, January 21, 2019

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்!

இலக்கியச் சோலை கவியரங்கம், 19.01.2019, "செகா கலை"க் கூடத்தில்.

உழவின் வாழ்வே வாழ்வு
உழவற்ற வாழ்வு தாழ்வே
அச்சாணி உலகு அதுவே
அரசாட்சி இருப்பும் உழவே
அகலாது நிற்பின் அழகே.


வாழ்வார் உழுதுண்போரே
வீழ்வார் தொழுதுண்போரே
வள்ளுவம் பகர்வது மேலும் கேட்பாய்
கைம் மடங்கின் துறவும் நிற்காதே
கழனி விலகிடும் சமூகம் வெல்லாதே


சுழலும் ஏர்ப்பின் எட்டி நிற்காதே
சுறு சுறுப்பேற்றிட தயங்காதே
உறுபசி ஒழியும் கலங்காதே
ஓவாப் பிணி குறையும் உணர்வாயே
செறுபகை விலகும் அறிவாயே

தொல் தமிழர் பண்பாண்மை தேக்குவாயே
தொல்லறிவு இது ஏற்பாயே!

No comments: