(ஒரு புதுமனை புகுவிழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட பட்டறிவு)
கழட்டி விட்டேன்,
மீண்டும் பூட்டிக் கொள்ள
திரும்பினேன்.
விட்ட இடம் தேடினேன்,
இடம் மாறியிருந்தாய்
நிறம் மாறவில்லை,
விரிந்திருந்தாய்.
நெரிசலில்
தேடலில்,
இங்கிருந்து அங்கு சென்றாய்
என்றெண்ணி,
தயக்கத்துடன்
செலுத்திய பாதம்,
நெருக்கடியின்றி
தளர்ந்திருந்த பாதுகை,
எமதா?
அய்யத்துடன்,
ஒப்ப முடியாமல்
தவித்து திரும்பினேன்,
எம் பாதங்களை அலங்கரித்த
நீ!
எவர் பாதங்களை
அலங்கரிக்கிறாய்?
கழட்டி விட்டேன்,
மீண்டும் பூட்டிக் கொள்ள
திரும்பினேன்.
விட்ட இடம் தேடினேன்,
இடம் மாறியிருந்தாய்
நிறம் மாறவில்லை,
விரிந்திருந்தாய்.
நெரிசலில்
தேடலில்,
இங்கிருந்து அங்கு சென்றாய்
என்றெண்ணி,
தயக்கத்துடன்
செலுத்திய பாதம்,
நெருக்கடியின்றி
தளர்ந்திருந்த பாதுகை,
எமதா?
அய்யத்துடன்,
ஒப்ப முடியாமல்
தவித்து திரும்பினேன்,
எம் பாதங்களை அலங்கரித்த
நீ!
எவர் பாதங்களை
அலங்கரிக்கிறாய்?
No comments:
Post a Comment