Monday, February 25, 2008

"வழக்கறிஞர்"

கறுப்பு அங்கி மாட்டியதால்!
வெறுப்பும் கூடியதோ!
கொன்ற மதிப்புடன்!
சென்றது!
மன்ற மதிப்பும்!
நின்ற பெருமையும்!

தொழிலுக்கும்!

வழக்குத் தொழிலுக்கு
இழுக்கு சேர்த்தாய்!
செல்லும் போக்கு
வெளிப்படுத்தினாய்!

சட்டத்தை மீறும்
சக்திகளுடன் கூடினாய்!
குலவினாய்!
சகதிகள் வாழ்க்கையாய்!
கைதிகளுடன் !
கை கோர்த்து!

வீதி மன்றம் தொடங்கி
நீதி மன்றம் வரை!
நீட்டி நடந்தாய்!
அறிவை இழந்து!
வாளுடன் கோலுடன்!

வம்பு வழக்கு
செய்பவர் கூடி!
தெம்பு வழக்காடினாய்!
அன்பு இழந்தாய்!
அடிமை புத்தியாய்!
அய்ந்தாம் படையுடன்!

ஆயுதம் சுமந்தாய்!
ஆக்கம் சேர்த்தாய்!
போக்கை மாற்றி!
போய் விழுந்தாய்!

மாண்பு இழந்து!
மரியாதை தொலைத்து!
கூன் முதுகுடன்
கூண்டில் நின்றாய்!

வான் பழிக்கும்
வீண் பழி ஏற்றாய்!
வீதியில் நின்றாய்!
சாதி சனங்களை
தொலைத்து!

பாதை மாறி
பாதியானாய்!
பாழ்பட்டு நின்றாய்!

உம் தொழிலுக்கும்!
ஊறு விளைவித்தாய்!
நேயம் மறந்து!
தேய்ந்தாய்!

Sunday, February 17, 2008

அமைதியாக அழிந்து வரும் மொழிகள்

சான் நோபல் வில்போர்ட்

மொழியாக்கம்.மு.முத்துக்கண்ணு

தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.

சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இவ்வாய்வு, தேசிய நிலநூல் கழகம் மற்றும் அழியும் நிலையில் உள்ள வாழும் மொழிகள் ஆய்வு நிறுவனத்தின், கள ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கண்டுபிடிப்புகள், தேசிய நிலம் மற்றும் மொழி குறித்த வலைப் பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது.

ஒழுங்காகுமோ?

இனம் அழிகிறது!
இன்றும் அன்றும்!
இலங்கையில்!

ஏன்? என்று கேட்பார்
இல்லை!
இங்கே!

நீ யார்?
உமக்கு அவர்
சொந்தம் இல்லையா?
பந்தம் தொல்லையா?

அடுத்தவர் உரிமைக்கு
விழா எடுக்கும்!
உம் முகம்!
பார்த்துக் கொள்
பளிங்கில்!

உலகத்திற்கு
உன் ஆதரவு!
உன் உறவுக்கு!
முகம் காட்ட,
தயக்கம் ஏன்?

தடை ஆயிரமாயிரம்!
சமாதானம்
ஆகாது!

உன் தடை!
உள் தடை!
உணர்ந்து கொள்!

நாம் அடித்தால் அநியாயம்!
அவன் அடித்தால் நியாயம் !
எப்படி?

உம்மவர் குழந்தைகள் உயர்ந்தவர்!
எம்மவர் குழந்தைகள் தாழ்ந்தவர்!
சமமற்ற போராட்டம்!
யார் பக்கம் நீ?

மனசாட்சியே!
உலக சாட்சியே!
உறங்கலாமா?

ஒரு கண் பார்வை
ஒழுங்காகுமோ?

Wednesday, February 13, 2008

"யானையைக் காப்போம்"

எலிகளாய் இருந்திருந்தால்
வலைகளில் தங்கியிருப்போம்!
நாய்களாய் இருந்திருந்தால்
தெருக்களில் திரிந்திருப்போம் !
பருக்கைகள் கிடைத்திருக்கும் !

எச்ச உணவு நிலைத்திருக்கும்
வாழ்க்கை ஓடியிருக்கும் !
கோவிலில் இருந்திருந்தால்
கோரம் நிகழ்ந்திருக்காது !

இயற்கையை நேசித்தோம் !
சூழலை சுவாசித்தோம் !
எம் இருப்பிடம்
எம்மை விட்டு
நீங்கியது !
தண்ணீரும் இல்லை!
உணவும் இல்லை !

தேடித் திரிந்தோம்!
விரட்டி அடித்தார்!
வேறு கதியில்லை!
குழவியைச் சுமந்தேன்!

சூழ்ந்த கதி!
தொடர்ந்த வாழ்க்கையை!
முற்றுப் புள்ளி வைத்தது !
தொடர் வண்டி!

எம்மைச் சிதைத்தது கூட
எமக்கு வலியில்லை!
எம் சந்ததியை,
கருவறையிலிருந்து
பிய்த்து எடுத்து ,
எம் கண் முன்னே ,
வெடித்து சிதைத்த,
உம் வெறி!
வெடிகுண்டும் தோற்கும்!

Friday, February 8, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை: தொடர்ச்சி

மூர்க்கத்தனமான கொலை பாதக செயல் அரங்கேறிய போது 4, 5 மணி நேரத்திற்கு, மாநிலத்தின் அரசியல் நிர்வாக அதிகார மையத்தின் பகுதியான கவுகாத்தியில், அரசாங்கத்தின் அதிகாரிகள், குறிப்பிடத்தக்க அளவில் வருகையில் இல்லை.

மாநில அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கொடூரமான 'கொலை பாதகச் சடங்கு' மலைவாழ் மக்கள் மீது நிறைவேற இடமளித்தது.வாக்கு வாங்கி அரசியலின் மிக மோசமான நிகழ்வாக இது அமைந்தது.

கோரிக்கை ஊர்வலம் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் ஏதும் இன்றி சென்றதாகவும், உறுப்பினர்கள் சிலரால் நிகழ்ந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

அரசாங்கம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறைக்கு துணை போனது பின்வருமாறு :

1. மலைவாழ் மக்கள் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டது அரசங்கத்தால் மறுக்கப்பட்டது.

2. கூட்டம் நடத்தும் போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை

3. ஆர்ப்பாட்டம் செய்து ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, காவல்துறை அதனை கட்டுப்படுத்த, அனுப்பி வைக்கப்படவில்லை.

4. பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையை குறைத்து காண்பித்து, வன்முறையாளர்களை அரசாங்கம் காப்பாற்றியது.

5. காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட, சரியான மருத்துவம் செய்திடாமல், அவர்களை மருதுவமனைகளில் இருந்து வெளியேற்றியது.

6. ஆரம்பத்தில் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.சி.பி.ஐ விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

7.அதிக எண்ணிக்கையிலான வழக்குகள், ஆர்ப்பாட்டக்காரர்களான, மலைவாழ் மக்கள் மீது மட்டும் போடப்பட்டது. உள்ளூர்வாசிகள் மீது குறைவான வழக்குகளே போடப்பட்டன.

Thursday, February 7, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை:

24, நவம்பர், 2007- கவுகாத்தியில் கற்பழிக்கப்பட்ட மனித சமுதாயம்

20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ஒரு பெண் பலவந்தமாக நெடுஞ்சாலையில் ஆடை அவிழ்க்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார். சுமார் முன்னூறு பேர் காயம் அடைந்தனர். அதில் 10பேர் நிலை கவலைக்கு இடமாக உள்ளது.45 போராட்டக்காரர்கள் காணாமல் போயினர்.
இவை யாவும் குல், சந்தால், முண்டா ஆகிய பழங்குடியினர்-அசாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வரும் ஆதிவாசிகள் சமுதாயம் ஆகும்.

இவர்கள் 24, நவம்பர், 2007ல் திச்பூர், கவுகாத்தி பகுதியில் அரசு செயலகத்தை நோக்கி தமது நீண்ட நாள் கோரிக்கையான, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை ஊர்வலம் சென்றனர்.வழியில் ஊர்வலத்தினர் சிலர் வன்முறையில் ஈடுபட்டு, சட்டமன்ற விடுதியின் கடைசி வாயில் அருகே உள்ள கடைகள், வாகனங்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.பாத சாரிகள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

சில உள்ளூர்வாசிகள் பழிக்கு பழியாக, ஆதிவாசிகளுக்கு பாடம் புகட்டும் முறையிலே, மனிதாபிமானம் மறந்து, வெறி கொண்டு, உள்ளே உறையும் மிருகம் , மிருகத்தனமாக, அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், அவர்கள் உடல்களை எட்டி உதைத்து மகிழ்ந்தனர்.

Monday, February 4, 2008

பொதிகளை மாற்றி!

கழட்டினேன் ,
கடினமாயினும்
மீண்டும்!
சுழலவில்லை!
சுழல் விதி
புரியவில்லை!

சுட்டினேன்,
சுறு சுறுப்பும்
கூடவில்லை!

சீர் செய் என்றேன்!
சீராக்கிட!
மீண்டும் நிறுத்திட!
நிலை மாற்றம்
இல்லை!

விலை கேட்கிறார்!
விடியாது!
முடியாது!

விதிகளை மாற்று!
சுதிகளை ஏற்று!
பொதிகளை மாற்றி!

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெற்றி - 2

தண்டனை அடைந்தவர்களில், மோதல் கொலை சிறப்பு தேர்ச்சியாளார் என்றழைக்கப்படும், சட்டிசுகர் பிரிசேழ் திவாரி மற்றும் நாசர் சித்திக் ஆகிய இருவரும், குடியரசுத் தலைவர் விருதும், சிறப்பு பதவி உயர்வும் அளிக்கப்பட்டவர்கள், என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம், சட்டிசுகார் கிளை அமைத்த, இந்த உண்மை அறியும் குழுவிற்கு, டாக்டர்.பினாய்க் சென் மற்றும் வழக்கறிஞர் அமர்நாத் பாண்டே உறுபினர்களாக இருந்தனர்.சர்குசா மாவட்டத்தில் முதல் போலி மோதல் வழக்கில், உண்மை அறியும் குழு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் பலியானவர்கள் சாதரண கிராமவாசிகள், தமது கைகளை மேலே தூக்கிய பிறகு, கொடூரமாக திவாரி மற்றும் சித்திக் தலைமையிலான காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதை, தெளிவாக எண்பித்தது.

அமர்நாத் பாண்டே , மூத்த வழக்கறிஞரும் இந்திய கம்யூனிசுடு கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். இவர், மோதல் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுத்திட அரசாங்கத்திடம் முறையிட்டு பலன் ஏதும் இல்லாத காரணத்தினால், சம்பந்தப்பட்ட வழக்கு மன்றத்தில் புகார் பதிவு செய்தார். எதிர் நிலையாக அரசாங்கம் ஆனது, குற்றவாளிகளான காவல் துறையினருக்கு பதக்கங்கள் அளித்து, மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வு இழப்பு ஏற்படுத்தியது.

Saturday, February 2, 2008

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்கு வெற்றி -1

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சட்டிசுகார் கிளை, தார்மீக சட்டரீதியிலான வெற்றியை, இன்று அம்பிகாபூர், முதல் குற்றவியல் நீதி மன்ற தீர்ப்பின் வழியாக பெற்றது. 5 அப்பாவி கிராமவாசிகள் "நக்சலைட்கள்" என்ற பேரில், கோத்தாரி காவல் நிலைய வரம்பில், சங்கெர்கர்க் பகுதியில், 05.03.2004ல் போலி மோதல் போர்வையில் கொல்லப்பட்டனர். இவ் வழக்கில் எட்டு காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 201 மற்றும் 34ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.