Wednesday, July 31, 2024

வயநாடு

 

வய நாடு உயரம் 

சந்தித்த துயரம் 

சரிந்த முகடுகள்

புதைந்த சுவடுகள் 

சூழல் அழிவை

மெல்ல மெல்ல 

நகர்த்திய வளர்ச்சி

மேற்கு தொடர் மலையை

குடைந்து 

வணிகப் பெரும்பசியில் 

உல்லாசம், கட்டடங்கள்

காடுகள் அழித்து 

கான் உயிர்கள்

மாய்த்து 

பேரழிவுக்கு வாசல் வைத்த 

பேராசை 

காவு கொண்டது 

மாந்த உயிர்களை 

இதுவே பாடம் 

தேசத்திற்கு 

கற்குமா?

நிவாரணத்துடன் 

நிரல்களில் வழக்கமாய்

முழக்கத்தில் 

அஞ்சலியுடன் 

அடுத்த 

தேர்தலில் 

கவனம் 

செல்லுமா?

உண்டு!

 

கோடையில் தவிக்கும் வாய்

தகிக்கும் மெய்

வரிசைக் கட்டும் 

நீர்க் குடங்கள்

நெருக்கித் தள்ளும் 

கூட்டம் 

விசும்பின் பொழிவில் 

விக்கி நிற்கும்  

சிக்கி தவிக்கும்

உபரி நீர் உருப்படியாய் 

தேக்கி வைக்க 

ஆறு இல்லை

ஏரி இல்லை

குளம் இல்லை

வாய்க்கால் வரப்பு இல்லை

தார்ச் சாலைகள் உண்டு 

பாலங்கள் உண்டு

கழிவு நீர் கால்வாய் உண்டு


Sunday, July 28, 2024

முதுமை

 

உனக்கென இடம் உண்டு 

உணர்ந்து கொள் 

ஒதுக்கி நில் 

 அடுத்த வருக்கே 

முன்னுரிமை காட்டி  நீ 

 தனியேயாயினும்

தவிக்காதே, தவிர்க்காதே 

சோர்ந்து போகாதே. 

சார்ந்து

 செல்லாதே 

தூர்ந்து போகாதே 

துயரம்   பொல்லா தே 

Monday, July 22, 2024

நிலை

 


கரை சேர்க்கும் கலம்

கறை கூட்டும் புலம்

நுரை சேர்க்கும் அலை 

நூல் சேர்க்கும் கலை

புகை கோர்க்கும் பகை 

அ னல் தணிக்கும் வகை 

புனல் விளக்கும் நிலை

கூடாது

 உயர்த்திச் செல்ல முடியாது 

உருட்டி ச் செல்ல முடியும் 


துரத்திச் செல்ல முடியாது 

தொடர்ந்து செல்ல முடியும் 


விரட்டிச் செல்ல இயலாது 

விலகிச் செல்ல இயலும் 


தடுத்து நிறுத்தக் கூடாது 

தாங்கி ச் செல்லக் கூடாது


படித்துக் கெடுக் க கூடாது 

படியாமல் வாழக் கூடாது 

Sunday, July 21, 2024

சொல்லாதே

ஒன்றும் சொல்லாதே !

அவரிடம்

நன்றும் செல்லாதே !


மறுத்து ப் பேசுவதே 

வளர்ச்சி !

அவ்விடம்

ம டக்கிப் பேசுவதே 

முதிர்ச்சி !


அடக்கிப் பேசி 

அடங்கிப் போ 

இவ்விடம்

அமைதி யாய் 

அகன்று போ 


Friday, July 19, 2024

அரிப்பு

 

அரிப்பு சுகமே 

அளவுக்குள் தினமே 

கரிப்பும் இதுவே 

செரிப்பு முறையே 

உணவுக்கு அளவே 

சேர்ந்திடும் அறிவே 

செப்பிடு உணர் வே 

Monday, July 15, 2024

மனம்

 


இங்கு இருக்கும் 

அங்கு இருக்கும் 

எங்கும் இருக்கும்

தங்கும் இறுக்கம் 

தளர்வில் நெருக்கம் 

உணர்வில் உருக்கம் 

உண்மை பிறக்கும் 

Tuesday, July 9, 2024

"அறு த்துகிச்சாம் கழுதை எடுத்துகிச்சாம் ஓட்டம்"

 


"அறுத்துகிச்சாம். கழுதை, எடுத்துகிச்சாம் ஓட்டம்"

வெய்யில் காலங்களில் அப்போதெல்லாம் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம். 

பெரும்பாலும் தார்சாலைகள் போடாத வீதிகள். இருபுறமும் வீடுகள் அமைந்த அமைப்பு. திண்ணைகள் கொண்ட இல்லங்கள்.புறக்கடையில் கிணறு, தொட்டி கக்கூஸ், வேப்ப மரம், செடி செட்டுகள் கிணற்று நீரே குடிக்க, கொப்பளிக்க என அனைத்து உபயோகமும்.. மின்சார இணைப்பு ஒன்றிரண்டு வீடுகளில்தான்.பெரும்பாலான இல்லங்கள் கா விளக்கு, அரி க்கன்             விள க்குகளில்  இராப் பொழுதைக் கழிக்கும்.

தெரு சாக்கடைகள் தேக்கம் இல்லாது ஓட்டத்தில், தவளைகள் வாழும் இடமாகவும் விளங்கியது.கொசுத் தொல்லைகள் அற்ற ஊராகவம் இருந்தது.மணற்பாங்கான இடங்களில் வீட்டுக்கு வீடு, முன் கட்டில் முருங்கை மரங்களை பார்க்கலாம். தெரு முனையில் இருந்த கோவில் மதிற் சுவர் ஒட்டிய பகுதியில் தென்னை மரங்கள் அலங்கரிக்கும். அடுத்து, தண்ணீர்  குழாய்.  பொதுமக்கள் தேவைக்கு இருக்கும். பக்கத்தில் பன்னீர் பூ  மரம்  வெள்ளை பூக்களுடன் வாசனை பரப்பும்.

வீதிக்கு வடக்கில் விட்டு ,விட்டு பூவரச மரங்கள் அணி வகுக்கும். வரிசையாய் கூரை வீடுகள் நேர்க்கோட்டில் தெற்கு பார்த்த அமைப்பில். புறக்கடை இறக்கம் தனுசு பிள்ளை தோப்பு. மிகப்பெரிய தென்னந்தோப்பு பெருவாரியான மக்களுக்கு இயற்கை உபாதை கழிக்கும் வாய்ப்பாக அமைந்தது.

இத்தகைய புற சூழலில், கோடைக்கால சிறார்கள் மாணவப் பருவம் விளையாடி, பொழுது போக உகந்ததாக இருந்தது.வீட்டில் உள்ள பாட்டிகள் கதை சொல்ல, விடுகதை போட ,ஒரே ஆரவாரமாக , ஆரோக்கியமாய் பொழுதுகள் புலரும்.

வீட்டில் கொழுக்கட்டை, கடலை அவித்து தருவது. எள் அடை, வெள்ளை முறுக்கு, கடல்பாசி, கமர்கட்டு, கசகசா மிட்டாய் என பலவகை தின்பண்டங்கள் தெருவில் விற்கும், வாட்ச் மிட்டாய் பாட்டுப்பாடி, பிள்ளைகள் கையில் கட்டி, தாடையில் கொசிரு ஒட்டி செல்லும் வியாபாரி.இவையாவும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

நுங்கு, பலாச் சுளை, மாம்பழம், மல்லாக்  கொட்டை, கொண்டைக் கடலை போன்ற பண்டங்களும் நாவின் சுவை தணிக்க பட்டியலில்.இல்லங்களில் சுட்டு அளிக்கும் முறுக்கு, கொழுக்கட்டை வகைகள் கூடுதல் தீனி என்றால் மிகையாகாது.

சொந்த, பந்தங்கள் வீட்டிற்கு விடுமுறை காலப் பயணம் செல்வதும் உண்டு.அதில் வீட்டு சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பல நிகழ்ச்சிகள் இணைவது உண்டு.

சலிக்க வெய்யிலில் ஆடுவது, பம்பு செட்டுகளி ல் குளிப்பது, உண்டி வில் அடிப்பது, மீன் பிடிப்பது, நீச்சல் பழகுவது ஆகியவை களும் அடங்கும்.வீட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, ஆட்டம் போட்டு அலு த்து , திரும்பி கண்டிப்பும், தண்டனையும் அடைவதும் உண்டு.

அம்மை நோய் வாரி கொட்டி அவதி படுவது, கை கால்களில் சிரங்கு வந்து, நீல மருந்து, மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் எஸ் பவுடர் தேங்காய் எண்ணெய் குழைத்து, பூசுவதும்  வழக்கம்.

கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகள் எப்போது பள்ளிகளுக்கு ச் செல்லும் என்று பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்டு. அத்தகைய சூழல் குறித்து அண்டை வீட்டாருடன் வாடிக்கையாக பேசும்போது உதிர்க்கும் சொற்றொடர், " அறுத்துகிச்சான் கழுதை, எடுத்த்துகிச்சாம் ஓட்டம்", என்பது.

அம்மா எங்களிடமும் , நாங்கள் அடங்காமல் ஆட்டம் போடும்போது, இவ்வாறு கூறியது உண்டு.

உண்மையில் , குதிரையைக் கண்டதை விட  கழுதையைப் பார்த்ததே அதிகம். அதிலும் அதன் குட்டி ,அவிழ்த்து விட்ட சமயத்தில் அதம் பறக்கும் விதமாய் அயராது ஓடி, புழுதி கிளப்பும். அவ்வளவு எளிதில் அதை மடக்கி பிடித்து விட முடியாது.



Wednesday, July 3, 2024

குழந்தாய்

 


கதை தந்தேன்     

கனிவுடன் 

உதை தந்தாய்.

விதை பந்தாய் 

விளையாட்டு 

பருவ 

விருந்தாய்

அன்பின் கொழு ந்தாய் 

அரு மருந்தாய்