Tuesday, February 1, 2011

யாத்திரை

தரிசனம் நோக்கிய மக்கள்
நெரிசலில்
இரண்டாம் முறை இழப்பு
நூற்றுக்கு மேல்

ஊர்க்காரர் எவரும் இல்லை
பிறர் மரணித்தார்
ஓலத்துடன்
ஒடுங்கிய கோலத்துடன்

சிதறி ஓடி பதறிய மனிதர்
பஞ்சடிப்பதைப்போல்
நெரிசல் எந்திரம்
கரிசனம் காட்டவில்லை
தரிசனம் ஏற்கவில்லை

மருத்துவ உதவியும்
மக்களை நெருங்கவில்லை
நிவாரண நடவடிக்கை
நிர்வாண வேடிக்கை

நிமையங்கள் கழிந்தும்
நிம்மதி சேர்க்கவில்லை
மணித்தியானம் மறைந்தும்
நீளவில்லை

தடுப்பு நடவடிக்கை
செய்தியாக ஆவணங்களில்
ஆளுமை

"புல்மேடு யாத்திரை
தந்த நித்திரை"