ஒத்துப்போவது
உணர்வு செத்துப் போவது
கற்றது போதாது
கல்லாதது ஏறாது
உற்றுப் போவது
அற்றுப் போவது
அருகில்
விட்டுப் போவது
ஒத்துப்போவது
உணர்வு செத்துப் போவது
கற்றது போதாது
கல்லாதது ஏறாது
உற்றுப் போவது
அற்றுப் போவது
அருகில்
விட்டுப் போவது
வேலை வாங்குவார்
வேண்டிய போது
கெடு விதிப்பார்
தொடு திரை கணினியாய்
தொழில் சேர்ப்பார்
கலை இலக்கிய உலாவில்
அணி சேர்வார்
தனிப் பெருமை
நாட்ட
தாளம் போடுவார்
பிறர் உழைப்பும்
உரிமம் சேர்த்து
ஊடக பெருமை
வே ட்டகம் தோ ற்கும்
பூட்ட க மனிதர்
குளிர் கால குளுமை
சுழியம் செல்ல
கும்மிருட்டு
விசும்பின்
விக்கல்
குடை விரிக்கும் முன்
தாகத்தில் தாளம் போட
போர்த்திய ஆடை
நேர்த்தி போ தாயாம்
பனித் துளிகள்
வாழ்த்தில்
'பாலி கிளினிக் '
படியில்
"மைலா" வரவை
தரிசிக்க
"புளுவா "மாலை
வெறுப்பே ற்க
விரையும் மனம்
பொறு ப் பே ற்க
கரையும்
உரைப்பது ஒன்று
நடப்பது ஒன்று
உரைக்கும் விதமா !
நடக்கும் விதம் ?
முதுமை வரமா? சாபமா?
குடும்ப அமைப்பில்
இது வழக்கமாக எழும் கேள்வி. உருவாக்கிய, உதவிய தாயும், தந்தையும் தம் கடமை முடித்து அகவை கூடும் காலம் ,துணையாக நிற்கும் வாரிசுகள் மெல்ல, மெல்ல விலகிப் போக , தனி மரமமாய் தள்ளாடும் கோலம். தாங்க முடியாத துயரம்!
தனிக் குடும்ப ஏ ற்பாட்டில், தன் கடமை நிலை மறந்து ,தடுமாறும் உறவு. கடந்த காலத்தை எளிதில் புறந்தள்ளி, விட்டு விலகி, விக்கி, நிற்கும் !
பொருளாதார தற் சார்பு முதுமையில் பேருதவி என்றாலும், தள்ளாத நிலையில் உணவு சமைப்பது, வீட்டு பராமரிப்பு,ஓய்வாக வெளியே காலாற செல்வது போன்ற, தங்கள் அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்திட , ஓடி, ஆடி பணி மேற்கொள்ள, உணர்வு பூர்வமான ,உதவிக் கரங்கள் அவசியம்.
தமிழ்ச் சமூக த்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடும்பம் தழைத்த விளங்கும் இன்றைய நிலையில் இப் பிரச்சினை கூடுதல் அக்கறை மற்றும்
கவனம் பெறுகிறது.
ஓடிக் கொண்டே இரு
ஓட்டிக் கொண்டே இரு
உருண்டு கொண்டே இரு
உருட்டிக் கொண்டே இரு
இருத்தல் தேவையில்
இருள் என்ன ?
பகல் என்ன ?
முதல் என்ன ?
முடிவு என்ன ?
அடை மழை ஐப்பசி
கழிந்தது
கார் கால கார்த்திகை
புலர்ந்தது
உறவு அழைக்க
வானூர்தி பயணம்
இலையுதிர் காலம்
வரவேற்பில்
இனிமை சேர்ந்த்திட்
குளுமை கூடிட
சிந்தும் குருதி-
சிவப்புதான்
எவருக்கும் !
குழந்தைகளை கொல்வது
உயிர்த்திடும் குழவிகளை
மருத்துவ
மனைகளில்
சிதைப்பது
காக்கும் மருத்துவன் -
பொதுவானவன்
புரிபவனுக்கும்
படுபவனுக்கும்
அவனையும்
ஒழிப்பது சரியா ?
நெறியா?
அறம் -
மனிதத்தின் அடிப்படை ப்
பண்பு
மார்க்கத்திற்கு மார்க்கம்
மாறும் விழுமியமன்று !
" மற த்திற்கும்
அன்பே துணை"
கொல்லும் சினம்
கொள்கையாக
கோலோச் சும்
அதிகாரம் !
சகிப்பின்மை சக்கரத்தில்
திசை திருப்பும்
ஆயுத பலத்தில்
நியாயம் பேசும்
உலகம்
பேச்சளவில்
உதட்டளவில்
உண்மை தடுமாறும்
மன்றங்களில்
மல்லாடும்
அடுக்கடுக்காய்
உயிர்கள்
பலியாகும்
வறண்ட தேசம்
நிறம் மாறும்
செம்புலம் சேர்க்கும்
நொடி தோறும்
வெறி
வெடியில்
நெறி பிறழும்.........
நியதி, நீதி
எ வருக்கு ?
அடிப்பவனுக்கு
இல்லை
பட்டவனுக்கே
சொந்தம்
வலியும், கிலியும்
துன்பமும், துயரமும்
இருந்த இடம் இழந்த போதும்
இருக்கும் இடம் போதும் போதும்
மறைந்த இடம் மறந்த போதும்
மக்கள் வாழ்வில் இருந்தால் போதும்
காலியான வாழ்க்கையில் கூலியாக
குண் டி நனைந்தால் போதும் போதும்
துரத்தும் துயரம் நூறாண்டு சந்ததிகள்
சகதியில் சதி வலையில் ஆதிக்க சக்திகள்
அடிமைப்படுத்தும் வாழ்க்கை எம்மிடம்
இல்லை
ஒருக்களித்தே ஒண்டி வாழும்
புலமும் புழுதியாயிற்றே!
போரின் பிடியில்
ஊரும் உறவும் சிதைந்து
இயற்கையின் இறக்கமும்
எட்டிப் போக
வன்மம் கோ லோ ச்ச
வக்கிரம் உக்கிரம் அடைய
வாய்மூடிடும் உலகம்
வாய்க்கரிசி வண்டி, வண்டியாய்
நிவாரண பதாகை ஏ ந்தி
நித்தில ஊர்வலம்
முன்னங் கால்
இரண்டு தூக்கி
கங்காரு போல்
இரு கைகள் சேர்த்து
விழிகள்
முன் நிறுத்தி
வால் ஆட்டி,
அசைத்து
விசில் ஒலி
எழுப்பி
விசை ஒலி
மாந்தர்
சிந்திய, சிதறிய
பருக்கைகள்
சேகரித்து
உண்ணும் பிள்ளை
உன்னால் இல்லை
தொல்லை
ஒடுக்குவது , ஒழிப்பது
செல்வம் கொழிப்பது
வே லிக்குள் அடைப்பது
கூலியாக காலியாக்குவது
குடி நீர், மின்சாரம்
தன் அதிகாரத்தில்
வழியும், பாதையும்
கண்காணிப்பில்
நொடியும் துடிமத்தில்
நோஞ்சான் சமூகமாக
நுண்ணறிவு தொழில்நுட்பம்
ஓங்கியவன் ஆயுதமாய்
நியாயம் பேசுவார்
வாழ்விடத் தை விட்டு போ
நிவாரண வண்டிகள் அணி
ஆராதிக்கும் உம்மை
சவப்பெட்டி தொடக்கமாக
சன நாயக கோமான்
சமரசம் ஆயுத முனையில்
சந்ததி அழித்து
நீ சுட்டால் பாதுகாப்பு
உனக்கு விடுதலை
அவன் தடுத்தால்
தறுதலை
தீவிரவாதி
அளவுகோல் அளிப் பான்
ஆயுத முனையில்
வியாபாரி
அமைதி கெடுப்பேன்
அடுத்த வீட்டு
கொள்ளி யாய்
அடுத்து கெ டுப்பே ன்
கடனில் தருவேன்
உடன் அளிப்பேன்
உன் நிலம் எனக்கு
உன் வளம் எனக்கு
ஆயுதம் கொடுப்பேன்
அழகாய் விளக்கம்
அளிப்பேன்
பகை சேர்ப்பேன்
புகை மூட்டுவேன்
அடித்து சாக
சவப்பெட்டி தருவேன்
கடனில்
அமைதி எமக்கு
அமை தீ
உனக்கு
பஞ்சாயத்து
எம் பார்வையில்
பஞ்ச தாயத்து
உம் கழுத்தில்
'பஞ்ச தந்திர
நாயகன்'
உன்னை அடித்தால்
அவனுக்கு வலிக்கும்!
நீ அடித்தால்
பிறருக்கு
வலிக்காதா?
அடிபட்ட வன், மிதி பட்டவன்
அடிமையாய்
ஆயிரம் ஆண்டுகளாய்
நிலம் இழந்து , நீர் இழந்து
ஏதிலியாய்
உரிமை வேட்கை
உனக்கு மட்டும்
சொந்தமா?
பூர்வீக குடிகளை
கொன்று குவித்த
மென்று தின்ற
வல்லதிகாரம்
உலகைச் சுற்றி
வலம்
இரத்த வாடையில்
ஆயுதம் தரித்து
எல்லை தாண்டி
கொள்ளிவாய்
சனநாயக
' நரிதாரத்தில் '
கருடனை மிஞ்சும்
திருடன்
நீர் அணிந்தால்
என்ன?
ஊர் அலைந்தால்
என்ன?
சீர் நின்றாள் !
சரி
சீறி நின்றாள் !
வெறி
உணர்ச்சிவய ஊர்வலம்
உள்ளது காணார்
உண்மை உணரார்
உள்ளத்தில் உள்ளதை
அறியோம்
ஊரில் உள்ளதை
அறிவோம்
நேரில் பேச
நெருடும்
மறைவில் மணிக்கணக்கில்
சனநாயக பாடம்
பெற்றது நீயா?
பிறந்தது நானா?
உற்றது நீயா ?
உணர்ந்தது
நானா?
கற்றது நானா?
கற்பித்தது
நீயா?
விட்டது நீயா?
பிடித்தது
நானா?
தென்னை இருந்தது
திண்ணை இருந்தது
கிணறு இருந்தது
மழை நீர் சேர்ந்தது
மரம் இருந்தது
நிழல் சேர்ந்தது
தொட்டி கழிவறை
அடுப்பு எரிக்கும்
சாம்பலில் நிறைந்தது
பருவ முறையில்
விளை நில
எருவுக்கு சென்றது
சாலவம் தவளைகள்
இருப்பிடம் ஆனாது
கொசு என்பதே
அறியாமல்
ஈக்கள் மட்டும்
வீடுகளில், வீதிகளில்
உலா வந்தது
தெருவெங்கும்
குழந்தைகள்
விளையாட்டு
குதூகலம் சேர்த்தது
மின் வசதி ,
எங்கோ ஒன்று
புழுக்கம்
இரைச்சல்
அருகி நின்றது
சாணம் மெழுகிய
இல்லம்
சந்ததி சேர்த்தது.
யார் குற்றம்
போர் குற்றம்
ஊர் குற்றமா?
உன் குற்றமா?
அனைத்தும் செய்வாய்
அக்கிரம அரவணைப்பில்
வெல்வாய்
அன்றும் , இன்றும்
அணி சேர்ப்பாய்
உலகின் மன சாட்சி
உண்மையின் காட்சி
சப்பான், கொரியா,
வியட்நாம், ஆப்கான்
ஈராக், லிபியா,
யூகோஸ்லாவிய..........
சுத்தம் செய்வோம்
சத்தம் செய்யோ ம்
மொட் டை மாடியிலும்
காற்றோடு
பே ரிரைச் சல்
இசையாயினும்
வசையாயினும்
அளவே
நம்பிக்கை பேரில்
செவிப்பறை
கெஞ்சும்
அலப்பறை
ஆதிக்கத்தில்
மின்சார மேளம்
ஆலய மணி
ஓய்வில்
நில நடுக்கம்
குலை நடுக்கம்
உயிர் எடுக்கும்
உடமை அழிக்கும்
தகடுகள் நகர்வில்
நாடுகள் நகரும்
நகரங்கள் தகரும்
ஊர்கள் உள்வாங்கும்
உடைவுகள் அடவு காட்டும்
செப்பனிடும் பூமி
சேதம் விளைவிக்கும்
சாமி
நீர் வளம், உறிஞ்சும்
கனிம வளம் சுரண்டும்
அளவற்ற ஆசையில்
ஆளை க் கொல்லும்
போதையில்
வியாபாரத்தின் எல்லை
பூமிக்குள்ளும்
ஆழம் பார்க்கும்
அகல, நீள ம்
நோக்கும்
ஆறாவது இழந்து.
மொரோக்கோ
துயரம்
பேரழிவின்
உயரம்
ஒன்று கூடும்
இருபதும்
ஓயாமல்
முதலீடு சேர்க்கும்
ஓட்டை, உடைசல்
வணிகம் சேர்க்கும்
ஓயாமல் சிண்டு முடியும்
கருவிகள் விற்று
உயிர்கள் உருவும்
ஒழியும் மனிதம்
கொழிக்கும் செல்வம்
வெறி ஆள் கையில்
விருப்பமில்லை
நெறி ஆள் கையில்
நின்றேன்
சரி ஆள் கை கருத்தில்
சறுக்கல் இல்லை
கலைந்த பின்
கலந்தாடல்
கருத்தாடல்
விளைந்த பின்
விதைக்கும்
முயற்சியே
அகதிகளில் கூட
நிறம், நிலம்
இனம்,
இவர்,
அவர்
வேண்டியவர்,
வேண்டாத வர்
இந்த அணி
அந்த அணி
வாழ்விடத்தை
வதையிடமாய்
வளங்களை
வசப்படுத்தி
ஆயுதங்களை
விதைகளாய்
மனங்களில்
ஊன்றி
போர்ப் பயிர்
வளர்த்து
சக மனிதரிடம்
சகிப்பை பறித்து
சந்ததி அழிக்கும்
சதுரங்க வேட்டை
"மனிதம் "
எல்லைக்
கோடுகளை
தாண்டி
அல்லாடும், தள்ளாடும்
அனாதையாய்
ஓடு, ஓடு
உறவைத் தேடு
ஓடு, ஓடு
உரிமை நாடு
பீடு, பீடு
பிற பெருமைக் கேடு
மூடு, மூடு
மூடத்தனம் பேடு
நாடு, நாடு
நன்னெறி கோடு
வீடு, வீடு
விண்ணவர் மேடு
கேடு, கேடு
கண்டிலர்
அகக் கூடு
உள் நோக்க ஊர்வலம்
உலா வரும் தலைகள்
உண்மை பிரச்சினை
என்று அணு க
பின் வாங்கிச் செல்வார்
காரணம் பல கூறி
கழன்று விடுவார்
கழனி சேர்ப்பார்
பழனி உயரத்தில்
கொள்கை க் குன்றம்
தாண்டி
நிறைந்த உண்டி
வண்டிகள் அணி வகுப்பில்
வகை வகையாய்
வள மனை
கள முனை கண்டவர்!
ஓராயிரம் உணவுக் கடைகள்
ஒளி உமிழ் விளக்கொளியில்
ஒய்யாரமாய் வியாபாரம்
உள்ளேயும் வெளியேயும்
மிளகாய் பொடி நெடியில்
எண்ணெய் வாசத்தில்
பொரிப்பதும்
வறுப் பதும்
பையில் அடைத்து
தட்டில் இட்டு
இர ப்பைக்கு இலக்கு வைக்கும்
இழப்பிற்கு உலை வைக்கும்
நலம் நசிந்து உல்லாசம்
பயணிகள் ஊர் தாண்டி
காசு கொடுத்து சூன்யம்
கொள்ளை அடி
கொழிக்கும் பணத்தை
வெள்ளை அடி
கருப்பு என்ன?
வெள்ளை என்ன?
ஏன் இந்த வேறுபாடு?
ஏக்கம் தீர
கூறு போடு
விளை ந்தது
என்னால்
விழைவில்லை
செருக்கில்
உழைத்தே ன்
களித் தேன்
உழைப்பில்
நாளும்
திளை த்தேன்
திண்ணம்
ஒருங் கி ணை ப்பில்
உணர்ந்தே!
விலகிய உறவு
வீங்கிய கனவு
தேங்கிய எண்ணம்
தேடிய வண்ணம்
தாங்கிய பழக்கம்
தடுமாறிய முழக்கம்
தன்னாலே
வெளிச்சம்
ஒதுக்கிய நட்பு
ஓ ங்கிய உணர்வு
மாறிய வேடம்
ஏ றிய ஓடம்
எப்படியும் வியாபாரம்
இப்படியும் அப்படியும்
தப்படியும் தம்பிடி யும்
தனி அடியில்
உரிமைக் கள த்தில்
நுகர்வோர் பக்கம்
நூல் பிடிப்பேன்
நுழைபுலத் தில்
தேவை என்றால்
அழைப்பாய்
செழிப்பாய்
தேவை நின்றால்
இளிப்பாய்
களிப்பாய்
சேவை என்று
ஒலிப்பாய்
ஒளிப்பாய்
உன்னைப் போல் நானும்
ஒரு நாள்
உருமாற்றம் கொள்வேன்
அந்நாள்
இந்நாள் போல்
உன் இருத் தலில்
உண்மை உணர்த்தும்
உலகியல்
சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்
சோதனையில்
நிற்கிறாய்
சாதனை மனிதர் தான்
வேதனை
சேர்க் கிறாய்
வெற்று உறுதி
கோர்க்கிறாய்
நிலவரம் மோசமாயின்
கலவரம்
கையில் எடு
அரசியல் இருப்பை
உறுதி செய்ய
கலவரம்
உமக்கு
கை கண்ட
ஆயுதம்
கண் கண்ட
தெய்வம்
கடந்த கால
வரலாறு
கை கொடுக்காமல்
போகுமா?
இப்படியே கழியுமா?
பொழுது
அப்படியே ஒழியுமா?
உணர்வு
எப்படியே இருந்த மனசு
இப்படி ஆனதென்ன?
புதுசு
எப்படியும் வாழ்வது ஒரு
தினுசு
எண்ணற்ற நூல்கள்
எண்ணத்தின் கால்கள்
ஏற்றிடும் கருத்துகள்
மாற்றி டும் மருந்துகள்
மண நலத்தின் வேர்கள்
மனிதத்தின் மாண்பு கள்
குண்டுகள்
வண்டுகள் அல்ல
மகரந்தம் சேர்க்க
உயிரினங்கள் தழைக்க
அமைதிக்காக
அளிப்பவர் அர்த்தம்
இலாபத் தில்
கெத் தில்
கொத்து
எவர் அளித்தாலும்
எவர் பாவித்தாலும்
உயிர் வதை
வியாபாரிக்கு அல்ல
உனக்கும், எனக்கும் தான்
உண்மை அறிவாய்
"ஆயுத எழுத்தை"
கொடுத்தவன் நீ
எடுத்தவன் நீ
முடிவை
பிறர் மீது
திணிப்பு
உமது தீனிப் பை
உள்ளீடு உலகத்தில்
உம் பயணம்
உள் நோக்கில்
பச்சைக் குதிரை
உம் இச்சை
குதிரை
காயும் இல்லை
கறியும் இல்லை
கவலை இல்லை
உனக்கு
கவலை இல்லை
காசும் இல்லை
பணமும் இல்லை
கவனம் இல்லை
உனக்கு
கவனம் இல்லை
கவளம் தொல்லை
உனக்கு விசனம் இல்லை
உன்னிடம் ஒன்று!
அவனிடம் ஒன்று!
இதில் எது
நன்று ?
அவரவருக்கு ஏற்றாற்போல்
ஆக்கினை சேர்த்திட
புளுகும்
கெட்டியாகும்
இதில் என்ன ?
பகுத்தறிவு !
மார்க்சிய அறிவு !
நம்பி கை வைப்பான்
நடக்கும் காலத்தில்
ஓடினேன்
ஓடும் காலத்தில்
நடக்கிறேன்
ஓடும் காலத்தில்
நடந்தேன்
நடக்கும் காலத்தில்
ஓடுகிறேன்
இப்படியா?
அப்படியா?
எப்படி
தெரியவில்லை?
செப்படி
என்றேன்
அவள் யோசித்தாள்!
எங்கே ?
உம்மை காணவில்லை
கண்டபோது கேட்டார் ,
காணாத போது !
தற்பெருமை
ஓயவில்லை
தனிப்பெருமை
சாயவில்லை
வசதியான சூழலுக்கு அழைப்பில் செல்லும் போது ,உனக்கும் அது போன்ற நிலைக்கு செல்ல ,ஆர்வம் கூடும்.
ஆர, அமர யோசித்தால் புரியும்.உள்ள நிலையே , நல்ல நிலை, உணரும் நிலை. வாய்த்த வசதியை வசப்படுத்தி, இருக்கும் நிலையை செப்பம் செய்தாலே போதும் என்ற வெளிச்சம் கிடைக்கும் .ஆழ்ந்து யோசனை செய்தால் அதனதன் அருமை, பெருமை விளங்கும்.
நண்பர் ஒருவர், அவருக்கு வேண்டிய மனை வணிகர் குறித்து, " அவன் எல்லாம் அலசிப் பார்த்து, ஆய்ந்து பார்த்து செய்வான் " என்று பெருமைாகச் சொல்லியிருந்தார். அளவற்ற நம்பிக்கை உடையவராக இருந்தார்.
ஆவணத்தில் பிழை உள்ளது என்பதை சுட்டியும் ஏற்க மனம் இல்லை. பிற தரப்பின் கருத்தினை உள் வாங்கிட ஊக்கம் இல்லை.ஒரு அமைப்பின் தலைவராகவும் இருக்கும் அவர் நடுநிலை நோக்கில் நிற்க தடுமாற்றம்.
எது காரணம்?
சொத்து மீ தான பற்றா?
அதிகார ஆளுமையா?
அலசிப் பார்ப்பான்
ஆய்ந்து பார்ப்பான்
நுழைந்து வருவான்
மீண்டு வருவான்
பணத்தை போட்டு
பணத்தை எடுப்பான்
கொடுப்பவரும் எடுப்பார்
கணிசமாக
வாங்கியவர்
கண் வீங்கியவராய்
காலம் கடக்கும்
அணி சேர்க்கையில்
'ஆயுதக் கூட்டம்'
அறிவிழக்கும்
அடி பணி கோட்டம்
வளமிக்க பூமி
வாழ்வளிக்கும்
சாமி
அண்டை வீட்டார்
சண்டை
அகலப் படுத்தும் சந்தை
இவர், அவர் ,
பேதம் அதற்கில்லை
'சமம் யாவரும் '
அதன் வேதம்
சந்தை நிதி பெருகிட
யாவும் -
நீரும், ஊரும்
மண்ணும் , மலையும்
மரஞ்செடி, கொடியும்
விண்ணும் .......
அங்கேயும் இருப்பான்
இங்கேயும் இருப்பான்
எங்கே யும் இருப்பான்
எதிலும் பார்ப்பான்
எப்படியும் சேர்ப்பான்
கொள்கை முழங்கி
கோட்பாடு வழங்கி
எவன் செத்தால் என்ன?
எவை அழிந்தால் என்ன?
எங்கள் வியாபாரம்
செழித்தால் போதும்
எங்கள் கருவூலம்
நிறை ந்தால் போதும்
கொல்லும் வணிகம்
வன்மம் கொண்டு
வெறி யாட்டு
ஒற்றைத் துருவ அதிகாரம்
சுரண்டிய தேசங்களின் கூட்டில்
வளங்களை கொள்ளை கொள்ளும்
அறியாமையில் அடுத்த வீட்டுக்காரன்
எதிரியாய், பகைவனாய்
வீ ழ்ந்திடும்
ஆயுதங்களின் அரசியலில்
அமைதியும் அச்சத்தில்
அச்சு கழன்று
மச்சி நாடுகளின்
எடு பிடியாய்
ஏதிலியாய்
பிறந்தகம் துறந்து
எ வரை மதித்தான்
உம்மை மதிக்க
எவரையும் மிதித்தான்
விருப்பப்படி
தொட்டால்
தோ ண்டுவான்
விட்டால்
சீண்டுவான்
பட்டால்
வாடுவான்
பட்டாம் பூச்சியாய்
உணர்ந்தேன்
உழைத்தேன்
நலிவிலும்
சோர்ந்தே ன்
அல்லன்
சன்மானம் பெரிதென்று
எண்ணவில்லை
தன் மான உயரத்தில்
நின்றதால்
ஏமாற்ற தெரியாது
ஏமாற்றம் தெரியாது
உன் மாற்றம் அறியாது
உள் மாற்றம் புரியாது
புறம் அறிந்தேன்
அகமும் அப்படியே
என்றிருந்தேன்
இரு வேறு உலகம்
வாசித்தேன்
யோசித்தேன் அல்ல
அல்லல் நீக்கும்
எல்லப்பன் அன்று
வெள்ளையப்பன்
குவிக்கும்
எல்லையப்பன்
குறுகிய சிந்தனை
குவலய நிந்தனை
பிடித்ததே பெரிசு
அடுத்தது
அக்கறையில்லை
எல்லாம் சொல்லிட்டார்
அன்றே
எந்நாளும்
அது நன்றே
புதுசா ஏதும்
சொல்ல வேண்டாம்
பெரிசா எதுவும்
கேட்க வேண்டாம்
போர் இல்லாத நாள் உண்டா? நாடு உண்டா?
எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். வணிக வரையறைக்குள் வந்திறங்கிய போர், வளம் கொழிக்கும் பண்டமாக, மனித உயிர்களை கொஞ்சம் கூட மதிப்பு மிக்கதாக கருதாத, பண்டத்திலு ம் பண்டமாக , நுகர்வு பொருளாய் பாவிக்கும்.
சோறு இல்லா நாள் உண்டு
நாடு உண்டு
போர் இல்லா நாள் இல்லை
நாடு இல்லை
சரிவில் பிற வணிகம்
சரியா வணிகம் ஆயுதம்
அடிக்கடி பூசை
காயலாங்கடைச் சரக்கும்
நடை சேரும்
நாசம் கோரும்
உதவி வரிசையில்
உலா வரும்
எல்லைகள் இல்லை
கொள்ளையில்
மனிதம்
செத்து பிழைக்கும்
நொடி தோறும்
நுடங்கி , முடங்கி
குடி நீர் இல்லையடி!
குழாய் நீர்
தொல்லையடி!
வரி உண்மையடி !
வாய்தா இல்லையடி !
சுத்திகரிப்பு நீரடி
சுத்தம் அதன்
பே ரடி!
சுகம் தொலை
ஊரடி!
சமமற்ற வாழ்வு
சமத்துவம் கேட்க
தனி மனித முயற்சி
தணி யா அயர்ச்சி
சந்தை சுழற்சி
கந்தை கழலும்
சிந்தை விலகி
விந்தை
உலகமயம்
ஒரே பாதையில், சுற்று வட்டத்தில் தினசரி வாழ்க்கை! பல எண்ண ஓட்டங்கள். மைதானத்தின் பந்தாக ஓய்வின்றி கால் விசையில் , கை விசையில் , இந்த பக்கம், அந்த பக்கம். ஆட்ட வே ளை முடிவில் அக்கறை பார்வையில் பந்து, கழித்து கட்டப்படுமா? கதி மோட்சம் கிடைக்குமா?
என்னவோ சொல்கிறார்
எப்படியோ செல்கிறார்
தப்படி யாவும்
தனி அடியாய்
செப்படி சிறப்பில்
உப்படி
உயர்வடி
உடைப்பின்றி
உருவாக்கம்
இல்லை
உருவாக்கமும்
உடைப்பிற்கே
உடைப்பில்
இல்லை
உருமாற்ற
எல்லை
உருமாற்றமும்
முடிவில்லை
மரண அச்சம்
மனிதரை ச் சேர்க்கும்
விலகிய யாவும்
கூட்டும்
விருப்பம் கேட்கும்
சேர்த் தவை கன க்கும்
பார்த்தவை சலிக்கும்
பாதை உணர்த்தும்
வெம்ம்பிய நிலை அறியும்
பூக்கும் காய்க்கும்
பழுக்க ஏங்கும்
அறிந்தது போதும்
அறிந்தவை யாவும்
அரி ந்தது போதும்
அரிந்தவை யாவும்
சமையலில் சேரும்
உரித் தது போதும்
உள்ளதில் கூடும்
உணர் த் தியவை யாவும்
உருப்படி சேரும்
என்னை
ஏன் அழைக்கவில்லை ?
என்ன நான்
உழைக்கவில்லை ?
உன்னை உயர்த்திக்கொள்
தாழ்வில்லை.
பிறரை தாழ்த்துவதில்
உயர்வில்லை
பெருமை அதில்
சேர்வதில்லை
குற்றம் இழைத்தார்
தளை செய்தார்
தண்டனை பெற்றார்
தனிமையில் உள்ளார்
பல் உடைப்பு
ஏன்?
சொல் உடைப்பு
சோர் ந்ததா ?
கல் உடைப்பு
கழன்றதா?
சீர் திருத்த க் கூடமா?
சித்திரவதை மாடமா?
குத்தினான் இங்கே!
குத்தவில்லை அங்கே !
குத்தமெ ல்லாம் எங்கே ?
இயலாமை உளவியல்
இருவர் அறிவர்
அறிவான் அவன்
தவறிய இலக்கை
அறிவாள் அவள்
தகு இலக்கை
பட்ட வள் மனம் விட்டவள்
அறி வாள்
படுத்தியவன் குணம் கெட்டவன்
அறிவான்
பாடு!
உன் சுமை
உள் சுமை
முள் சுமை
கல் சுமை கன க்கும்
கன த்துடன் கவனம்
கேட்கும்
காயம் சேர்க்கும்
பின் சுமை
இறக்கி வைக்க
இடமா இல்லை
இயலாதது என்று
எதுவும் இல்லை
சுருக்கி நின்று
வாழும் எல்லை
சுடர் முகம் தந்தால்
விலகாதது இல்லை
உன்னை நான் வாசித்தேன்
ஓராயிரம் யோசித்தேன்
என்னை நான் வாசித்தேன்
இப்போதே யோசித்தேன்
தப் பேதும் ஏற்றாமல்
எப்போதும் உன் மேல்
ஒரு நூல் வாசிப்பில் உள் வாங்கி வெளிப்பட்ட வரிகள்
இவ்வாறு,
விருப்பமில்லா விருப்பங்கள்
திருப்பமில்லா திருப்பங்கள்
அழுத்தமில்லா ஆசை கள்
பிடித்த மில்லா பிணக்குகள்
எதை நீ கே ட்டாய்
இதை நீ கேட்பாய்
கருத்து கேட்பாய்
காதில் சேர்க்காய்
விருப்பத்தில் வாழ்வாய்
விரும்பியதை சேர்ப்பாய்
எந்த பொறுப்பும் வேண்டாம்
சொந்த பொறுப்பு போதும்
வந்த பொறுப்பு ஏ தும்
சொந்த பொறுப்பு ஆகா
வெறுப்பை உமிழும் அதிகாரம்
பொறுப்பில் அரங்கேறும்
அடையாளம்
ஒதுங்கி நில் ஓயும்
விலகி நில் வீ ழும்
பத்தாசையுடன் ஒத்தாசை
கோருவாய்
பணிவுடன் சே ருவாய்
பணி முடிந்ததும்
உதறிச் செவ்வாய்
உளறி வெல்வாய்
கிட்ட இருந்தேன்
தள்ளி நின்றாய்
தனியாய் சென்றாய்
தன்னதிகாரத்தில் நன்றாய்
எட்டினேன்
முட்டி நிற்க ஆசையில்லை
'மட்டிக் கள் ' மனிதர்
மனம் ஒப்பவில்லை
உன்னை அறியார்
உண்மை புரியார்
தன்னை அறிந்தாரா?
தரவு இல்லை
வரவில் மட்டும் நாட்டம்
மற்றவர் மீது காட்டம்
அச்சத்தில் ஆட்டம்
அரவணைப்பில் கூட்டம்
ஆளுமை என்று ஊட்டம்
நிழலில் வில்லன்
நிசத் தில் நாயகன்
நிழலில் நாயகன்
நிசத்தில் வில்லன்
திரைக்கு மட்டுமா?
இல்லை! இல்லை!
தரைக்கும் தான்
அடுத்தவன் ,உழைப்பை
உன தாக்காதே
கொடுத்தவன்
பொதுவிற்காய்
உள்ளது யாவும்
ஊரு க் காய்
உனக்கோ
எனக்கோ
அன்று
உணர்வாய்
உளறல்
விட்டொழிப்பாய்
உள்ளதில் நில்
செழிப் பாய்
ஆய்வு செய்ய பணியா இல்லை ?
"மறந்த கடை", பல இருக்க
மருந்து கடை
விருந்து கடையாய்
காட்சி ஊர்வலம்
செய்தி சாளரம்
கைதி மனப்பான்மை
கை தட்டல் பெருமை கூட்டி
அடிக்கடி வருவார்
அடுக்களை மே ய்வார்.
பருக்கையும் பழுதின்றி.
செருக்கின் சரக்கே ற்றி
சேம முற. வாழ்வார்
ஆணவமே ஆவணமாய்
அவிழ் கோவணமாய்
பேணவும்
பெருமை வெறி
நெறி யாய்
காணவும் கூசும்
கசடாய்
பகட்டாய்
பரிமாணம்
"சின்னம் கெட்டுடும் "
சீற்றத்தின் குரல்
சிறு வயதின்
கேள்வி ச் செல்வம்
பாரம்பரிய சின்னம்
எ துவாகும் ?
மனித சின்னமா?
வசிக்கும் கட்டட மா?
பாதுகாப்பு எதற்கு?
அங்கீகாரம்
யாருக்கு?
புறமா?
அகமா?
புதுக்கிடும் புகழ் மாலை
பதுக்கிடும் பண்பலை
"ஒன்னு இருந்தா ஒன்னு இல்ல"
அம்மா சொல்லுவாங்க!
எது இருந்தா, எது இல்ல ?
நேற்றி ருந்தா, இன்றில்லை!
இன்றிருந்தா, நாளை இல்லை!
இப்படி இருக்குமா?
மண்ணிருக்கு, மரமில்லை
குளம் இருக்கு நீரில்லை
ஏரி இருக்கு
மாரி இல்லை
வயல் இருக்கு
பயிர் இல்லை
மனிதன் இருக்கு
மனிதம் இல்லை
பிளந்த நிலம்
குலைந்த கட்டடங்கள்
தவித்த உயிர்கள்
நொடியில் பொடியாகி
வெடிப்பில் புதைந்தன
அரசும் அதிகாரமும்
ஆளாய்ப் பறக்க
ஆ க்கினை செய்திட
அணுகவும் அச்ச த்தில்
திகைப்பில்,
திகிலின் பிடியில்
ஆயிரக்கணக்கில்
" தாயின் மடியில்"
குழந்தையாய்.
நிலத்தாய் கரம் நீட்டி
தன்னுடல் சேர்த்தது
குற்றுயிரும் , குலை உயிருமாய்
சிரியாவில், துருக்கியில்
மனித சோகம்
மலை உயரமாய்
நினைவும் , கன வாய்
கை நழுவி
இதுவும் செய்தியாய்
வழக்கமான
ஏற்பாடுகளில்
கற்ற பாடம்
கற்கும் பாடம்
கால வெளியில்
கானல் வரியாய் ........
ஓடாத சாக்கடை
கூட்டாத குப்பை
கூட்டல் பெருக்கல்
குலவிடும்
கொசுக்கள்
ஒடுக்கு வீழ்ந்த
பாத்திரமும்
ஓரம் ஒதுங்கிடும்
குறுக்கு ,நெடுக்கு
சாலைகள்
புழுதி ஆ லைகள்
சுவாசக் குழாயை
சூ டாக்கிடும் தினம்
நுகர்ச்சி நரம்புகள்
சுரம் இழக்கும்
தந்திக் கம்பி அறு ந்த
தாள மாய்
"தடுப்பு சமூக மருத்துவம்"
தனியாரிடம்
சந்தை விரிக்கும்
பொறுப்பு எனக்கில்லை
"தகுதியான வை பிழைத்திருக்கட்டும்"
முட்டுக் கொடுத்தேன்
முட்டி தே ய்ந்தே ன்
முடக்கு கட்டை யல்ல
இடக்கு கட்டையுமல்ல
ஆட்டம்
அடக்கு கட்டை
விழுந்தாய் விழுந்தேன்
தடுக்கினாய் தளர்ந்தேன்
சறுக் கினாய் இறுக்கமானே ன்
குளிக்க வைத்தேன்
களிக்க நடந்தேன்
சிறு நடை லயிப்பில்
பிஞ்சு கைப் பிடித்து
பள்ளிக்குச் செல்லும் பாதை
நெடு கில்
பல கதை பேசி
இணையாய்
எம் பாலப் பருவ நினைவுகளில்
கரைந்து
பல பழைய விளையாட்டுகள்
நானும், அவளும்
நாள் தோறும்
மொட்டை மாடிக்கும்
சிறகு முளைத்து
ஓடியாடி காலம்
கழித்தோம்
நினைவில் நிறுத்தி தொலைவில்
சென்றாய்
தேங்கிய நினைவுகள் மனதில்
எம்மைத்தேட
விலகிய வெளி நீண்டு
ஏக்கம் சேர்த்து
தூக்கம் கலைத்து
எண்ணம் ஆயிரம்
ஓட்டத்தில்
எழுத்தில் விலகி
தோன்றும், மறையும்
சுழல்
தொடங்கிய இடத்திலே
மீண்டும்
நாள், பகல், இரவு
நகரும், விரையும்
வேட்கையில்
எதற்கோ அச்சம்
என்ன அதில்
மிச்சம்
தொடர்பில்லை
அதற்கும்
இதற்கும்
என்றாலும்
நிற்கும்
என்னவாகும், ஏ தாகும்
என்கின்ற கிறக்கம்
இப்படியே காலம்
சிறக்கும்
தாளிட்ட கதவு
இருக்கிறேன் உள்ளே
அறிந்தும் அவசரம்
தட்டினாய்
தவித்தாய்
ஆட்டினாய் தாழ்ப்பாள்
அவசரம் கூட்டினாய்
இருந்தும் இருக்காமல்
அழுத்தம் எம்மீது
ஏற்றினாய்
தட்ப வெப்ப வீழ் ச்சி
மூடணி, குளிராடை
பூட்டி
கையுறை சேர்த்து
குல்லா மனிதராய்
இன்னியங்கிகளில்
இளி முகத்துடன்
வாழ்க்கை ப் பயணம்
நீளும்
நாளும்
சுருதி சேர்
இலயத்துடன்
மாறிய சூழல்
தேறிய நலம்
கோரிய பலம்
கூடிடும் வளம்
அயலகச் செலவில்
ஆனந்தம்
ஆண்டுகள் மூன்று
கழிந்த பின்
வேண்டிய வரம்
உன்னை சுமந்தேன்
அவளை சுமந்தேன்
திண் தோ ள் வசமாய்
உன் மகளை சுமந்தே ன்
அவள் மகனையும்
' திணை த்தோ ள் '
சுகமாய்
படித்தேன் ஆயினும்
பிடித்தேன் இல்லை
பிடித்தேன் ஆயினும்
வைத்தேன் இல்லை
வைத்தேன் ஆயினும்
உணர்ந்தேன் இல்லை
அங்கிருந் தால் இங்கிருக்கும்
இங்கிருந் தால் அங்கிருக்கும்
இருண்ட அகம்
இரண்டகம்
மிரண்ட அகம்
மிரண்டகம்
கொடுப்பது அரிது
எடுப்பது எளி து
எவர் கொடுப்பார் ?
எவர் பெறுவார் ?
உடுப்பது, உண்பது
இருப்பது , இயல்வது
தடுப்பது எவர்?
தடந்தோள் செய்
சமர்
விடுப்பது, வீழ்வ து
மடுப்பது யார்?
கடுப்பெது, கன வெது?
கனவின் பொருள்
எது?
உரக்கப் பேசினால்
ஓய்வு கேட்கும்
ஒ துங்கிப் போகும்
தாழ் குரல் பேச்சு
தாழ்ப்பாள் அருகே
மூச்சு
ஈ ண் டிய செ வியாய்
தாண்டிடும் கேட்பில்
ஈர்த்திடும் ஆர்வம்
சில்லென்ற காற்று
சிந்தை குளிர்
மாற்று
வைகறை துயில் எழுப்ப
நீண்டிடும் கரை இருள்
கதிரவன் காலங் கடத்தும்
விசும்பின் துளிகள்
விக்கும் விளா சும்
குளிர் காற்று
கூடிடும்
மாறா நடைமுறை
ஏற்பேன்
கூடா வர்க்கம்
என்பேன்
குலவிட சொர்க்கம்
காண்பேன்
எதற்கும் விளக்கம்
சேர்ப்பேன்
விலக்கில் விதி
கோர் ப் பேன்
தருக்கினேன்
சறுக்கினேன்
நறுக்கினேன்
துண்டானேன்
பெருக்கினேன்
கூட்டினேன்
கழித்தேன்
வகுத்த
வழியான்
எண்ண எழுதுவது?
எண்ணியதை
ஏ ந்தியதை
பண்ணியதை
பழகியதை
உள்ளபடி வைப்பது
உண்மையை உடைப்பது
உருப்படி காண் பது.
நிற்பது நிற்கும்
நிற்காதது நிற்காது
இழுத் தாலும் இடித் தாலு ம்
கற்றது நிற்கும்
அதன் வழி நிற்றலும்
பெற்றது பெருகும்
உற்றது உயரும்
உள்ளது நிலைக்கும்
உண்மை அது மிளிரும்.
அன்பெனும் பிடியில்
அகப்படும் மனமே
ஆ சையெனும் வெளியில்
பறந்திடும் குணமே
இன்பம் எனும் முடிவில்
ஈடிலா முனைப்பில்
உழைத்திடும் தினமே
ஊக்கம் இழப்பினும்
எக்கிப் பார்த்திடும்
ஏக்கழுத்து துணிவுடன்
ஐயமின்றி ஆற்றல்
ஒழுகிடும்
ஓகம் சேர்த்திடும்
ஒ ள டதம் துணிவே
அதே கனி வே
பணிவே.
அடிக்கடி நின்று போகும் சுவர்க் கடிகாரம்.வட்ட வடிவில், தரை தளத்தில். மின் கலம் தன் கவனத்தை ஈர்த்தது. அதன் ' இனக் குழுவை த் தேட ' , நொடி முள் நொடிப்பு நீங்கி, இயல் நிலைக்கு இறங்கியது.
அடுத்தது என்ன?
நொடி துடித்திட, துர த்திட, மணி காட்டி - பெரியதும், சிறியதும், இணை பிரியா இயக்கத்தில்/ ஏக்கத்தில் நகர்ந்திட. விசையில் தடுமாற்றம், தேக்கம். பின் தங்கிய பொழுதுகள் . " அடிக்கடி, இது இப்படித்தான்!"," "மாற்றி விடுங்கள்".'மனை மாட்சியின் ', உத்தரவு.
நண்பர் ஒருவர் அளித்த பரிசில். ஒதுக்க, எறிய விருப்பமில்லை." பழுது பார்க்கலாம்", ஒழுங்கு படுத்தலாம்". என் எண்ணம் இப்படியாக இழுவையில், வரிகளில் வடிகால் தேடியது.
ஓடா த கடிகாரம்
காட்டும் பொழுது
ஓரிரண்டு
சரியாக
பழுது என்று
ஏதுமில்லை
முழுமையாய்
விழுதுண்டு
விரு ப்பில்
கூர்மையாய்
முக்காடு இட்டவர்
தொழுகை
மூண்ட கூட்டம்
முற்றியது
தொற்று
என்பார்
முழு நாளும்
முக்கொம்பு
ஊதி
பரவலின் ஊற்றுக்கண்
படுபாதகம் , பயங் கரம்
வாதம் செய்வார்
இடை வெளி இல்லை
கவசம் இல்லை
தண்டல் விதிப்பார்
தண்டல் நாயகம்
முச்சந்தி களில்
சிலை வைப்பார்
உத்தர விடுவார்
ஊர் வலம்
தருவார்
கவசம் எங்கே ?
இடைவெளி
எங்கே?
தண்டம்
எவர் விதிப்பார்?
மாளி கை நாயக
மானிட நியாயம்.
கொடுப்பார்
என்று எண்ணினேன்
கொடுப்பார் இல்லை
அறிவார்
என்று எண்ணினேன்
அறிவார் இல்லை
தொடர்வார்
என்று எண்ணினேன்
தொடர்பில்லை
முடிப்பார்
என்று எண்ணினேன்
முடிப்பார் இல்லை
விடுவார்
என்று எண்ணினேன்
விடவில்லை
விடியல் வந்தும்
வெளிச்சம் இல்லை
நன்றாய் எழுது வோரும், நாட்டு நடப்பு, உலக நடப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும் எண்ணங்கள், சரியான கண்ணோட்டத்தில் அமைவதில்லை.
படைப்பிலக்கியம் குறித்த புது உத்திகள், புனைவுகள் புதுக்கிடும் பேனா முனைகளும் சறுக்கி சாளர காட்சி களாய்.
அறிவியல் பார்வை ,சமூக இயக்க நிகழ்வுகள் அலசலுக்கு அந்நி யமில்லை, அயன்மை இல்லை என்று அறியாதவர்கள் அல்ல.
ஆயினும், நாட்டிடை அரசியல் நகர்வுகள், பூகோள போக்குகள் குறித்த ஆய்வுணர்வு, ஆழமற்ற அங்கலா ய்ப்புடன், ஒரு சார்பில் வெளியேற்றம் .
வெகு மக்கள் ஊடக காட்சியிலும், கருத் திலும் உள் நோக்கில், தீர்மானிக்கப்பட்ட நிரல் ஏற்பாட்டில் .நிமிட ந் தோறும் நிகழ்ச்சிகள் அலைவரிசை யாய்.
ஆட்சியதிகார ஆதரவு பிரச்சார பீ ரங்கிகளாய், மென் குண்டுகள் கருத் தேற்ற மாய் ;சமூகத்தின் உளவியல் கட்டமைப்பில்; ஓய்வின்றி கடிகார முள் போன்று, இயங்கும்.
புற நிலை செல்வாக்கில் பொழுதுகள் புலரும்.பொய் , புனைவுகள் பிடியில் பிரியத்துடன் கடந்திடும் காலம்.
அக நிலை ஆய்வு ஒத்தி வைத்து, அர்த்தம் தேடும் வெளியில், செல்வாக்கில் சாய்ந்து .
இறங்கி ஏறி
ஏறி இறங்கி
ஏமாற்றி ஏமாந்து
ஏமாந்து ஏமாற்றி
பிரிந்து சேர்ந்து
சேர்ந்து பிரிந்து
சோர்ந்து எழுந்து
வாழ்ந்து கெட்டு
கெட்டு வாழ்ந்து ..........
அவன் சரியில்லை
இவன் சரியில்லை
எவனும் சரியில்லை
அவனை விட
இவன் மேல்
இவனை விட
அவன் மேல்
எவனை விட
எவன் மேல்
ஒப்பீட்டில்
உனை மறந்தாய்
செப்பேட்டில்
தனை பதிந்தாய்
புரிந்தது போல் இருக்கிறது
புரியாதது போலும்
அறிந்தது போல் இருக்கிறது
அறியாதது போலும்
தெரிந்தது போல் இருக்கிறது
தெரியாதது போலும்
பரந்த சிந்தனை
திரண்ட எண்ணங்கள்
வரலாற்று ஆர்வம்
வகை வகையாய்ச் சேர
உருண்ட உலகின் உன்னதம்
உணர்ந்திட ஓடிய செலவு
தரை மீது கடந்த நாள்கள்
சலிப்பில்
விண்ணில் கடக்கும் வாய்ப்பு
பகல் இரவு கலந்து
நாடுகளைக் கடந்து
உறவிடம் சேர்ந்து
ஓய்வு கொள்ளும்
மனம்
இரைச்சல் குறைந்து
இறுக்கம் தளர்ந்து
விளக்கம் சேர்க்கும்
பொழுதுகள் போக்கு அறியும்
காலச் சக்கர சுழற்சியின்
திசை வேகம்
நிதான நிலையில்
நின்றிலங்க
மரம் , செடி , கொடிகள்
மாண் பறியும்
பறவைகள் பக்குவ ஒலி
கேட்கும்
மழை, இருட்டு,வெய்யில் மாறிடும்
வாடை கூடிடும்
சில்லிடும் சூழல், சிவந்திடும் மேனி
உண்பதற்கு ஓரு நூறு வகைகள்
அடுக்களையில்
அடுக்கம் காணும்
முடுக்காய் உண்ணும் வேளை
அணி அணியாய் பணியாற்ற
விரைந்திடும்
வாகன மனிதர்
அதிகாலை தொடங்கி
நடுநிசி வரை
அக்கறை உழைப்பில்
ஆற்றலுடன் அன்றாடம்
கிழமை நாள் ஒன்றிரண்டு
ஒழிவில்
துப்புரவு பணி சேர்த்திடுவர்
ஒப்புரவில்