என்னை
ஏன் அழைக்கவில்லை ?
என்ன நான்
உழைக்கவில்லை ?
உன்னை உயர்த்திக்கொள்
தாழ்வில்லை.
பிறரை தாழ்த்துவதில்
உயர்வில்லை
பெருமை அதில்
சேர்வதில்லை
என்னை
ஏன் அழைக்கவில்லை ?
என்ன நான்
உழைக்கவில்லை ?
உன்னை உயர்த்திக்கொள்
தாழ்வில்லை.
பிறரை தாழ்த்துவதில்
உயர்வில்லை
பெருமை அதில்
சேர்வதில்லை
குற்றம் இழைத்தார்
தளை செய்தார்
தண்டனை பெற்றார்
தனிமையில் உள்ளார்
பல் உடைப்பு
ஏன்?
சொல் உடைப்பு
சோர் ந்ததா ?
கல் உடைப்பு
கழன்றதா?
சீர் திருத்த க் கூடமா?
சித்திரவதை மாடமா?
குத்தினான் இங்கே!
குத்தவில்லை அங்கே !
குத்தமெ ல்லாம் எங்கே ?
இயலாமை உளவியல்
இருவர் அறிவர்
அறிவான் அவன்
தவறிய இலக்கை
அறிவாள் அவள்
தகு இலக்கை
பட்ட வள் மனம் விட்டவள்
அறி வாள்
படுத்தியவன் குணம் கெட்டவன்
அறிவான்
பாடு!
உன் சுமை
உள் சுமை
முள் சுமை
கல் சுமை கன க்கும்
கன த்துடன் கவனம்
கேட்கும்
காயம் சேர்க்கும்
பின் சுமை
இறக்கி வைக்க
இடமா இல்லை
இயலாதது என்று
எதுவும் இல்லை
சுருக்கி நின்று
வாழும் எல்லை
சுடர் முகம் தந்தால்
விலகாதது இல்லை
உன்னை நான் வாசித்தேன்
ஓராயிரம் யோசித்தேன்
என்னை நான் வாசித்தேன்
இப்போதே யோசித்தேன்
தப் பேதும் ஏற்றாமல்
எப்போதும் உன் மேல்
ஒரு நூல் வாசிப்பில் உள் வாங்கி வெளிப்பட்ட வரிகள்
இவ்வாறு,
விருப்பமில்லா விருப்பங்கள்
திருப்பமில்லா திருப்பங்கள்
அழுத்தமில்லா ஆசை கள்
பிடித்த மில்லா பிணக்குகள்
எதை நீ கே ட்டாய்
இதை நீ கேட்பாய்
கருத்து கேட்பாய்
காதில் சேர்க்காய்
விருப்பத்தில் வாழ்வாய்
விரும்பியதை சேர்ப்பாய்
எந்த பொறுப்பும் வேண்டாம்
சொந்த பொறுப்பு போதும்
வந்த பொறுப்பு ஏ தும்
சொந்த பொறுப்பு ஆகா
வெறுப்பை உமிழும் அதிகாரம்
பொறுப்பில் அரங்கேறும்
அடையாளம்
ஒதுங்கி நில் ஓயும்
விலகி நில் வீ ழும்
பத்தாசையுடன் ஒத்தாசை
கோருவாய்
பணிவுடன் சே ருவாய்
பணி முடிந்ததும்
உதறிச் செவ்வாய்
உளறி வெல்வாய்
கிட்ட இருந்தேன்
தள்ளி நின்றாய்
தனியாய் சென்றாய்
தன்னதிகாரத்தில் நன்றாய்
எட்டினேன்
முட்டி நிற்க ஆசையில்லை
'மட்டிக் கள் ' மனிதர்
மனம் ஒப்பவில்லை
உன்னை அறியார்
உண்மை புரியார்
தன்னை அறிந்தாரா?
தரவு இல்லை
வரவில் மட்டும் நாட்டம்
மற்றவர் மீது காட்டம்
அச்சத்தில் ஆட்டம்
அரவணைப்பில் கூட்டம்
ஆளுமை என்று ஊட்டம்
நிழலில் வில்லன்
நிசத் தில் நாயகன்
நிழலில் நாயகன்
நிசத்தில் வில்லன்
திரைக்கு மட்டுமா?
இல்லை! இல்லை!
தரைக்கும் தான்
அடுத்தவன் ,உழைப்பை
உன தாக்காதே
கொடுத்தவன்
பொதுவிற்காய்
உள்ளது யாவும்
ஊரு க் காய்
உனக்கோ
எனக்கோ
அன்று
உணர்வாய்
உளறல்
விட்டொழிப்பாய்
உள்ளதில் நில்
செழிப் பாய்
ஆய்வு செய்ய பணியா இல்லை ?
"மறந்த கடை", பல இருக்க
மருந்து கடை
விருந்து கடையாய்
காட்சி ஊர்வலம்
செய்தி சாளரம்
கைதி மனப்பான்மை
கை தட்டல் பெருமை கூட்டி
அடிக்கடி வருவார்
அடுக்களை மே ய்வார்.
பருக்கையும் பழுதின்றி.
செருக்கின் சரக்கே ற்றி
சேம முற. வாழ்வார்
ஆணவமே ஆவணமாய்
அவிழ் கோவணமாய்
பேணவும்
பெருமை வெறி
நெறி யாய்
காணவும் கூசும்
கசடாய்
பகட்டாய்
பரிமாணம்
"சின்னம் கெட்டுடும் "
சீற்றத்தின் குரல்
சிறு வயதின்
கேள்வி ச் செல்வம்
பாரம்பரிய சின்னம்
எ துவாகும் ?
மனித சின்னமா?
வசிக்கும் கட்டட மா?
பாதுகாப்பு எதற்கு?
அங்கீகாரம்
யாருக்கு?
புறமா?
அகமா?
புதுக்கிடும் புகழ் மாலை
பதுக்கிடும் பண்பலை
"ஒன்னு இருந்தா ஒன்னு இல்ல"
அம்மா சொல்லுவாங்க!
எது இருந்தா, எது இல்ல ?
நேற்றி ருந்தா, இன்றில்லை!
இன்றிருந்தா, நாளை இல்லை!
இப்படி இருக்குமா?
மண்ணிருக்கு, மரமில்லை
குளம் இருக்கு நீரில்லை
ஏரி இருக்கு
மாரி இல்லை
வயல் இருக்கு
பயிர் இல்லை
மனிதன் இருக்கு
மனிதம் இல்லை