Sunday, December 30, 2018

அனைத்தும்

சூடான் நாட்டுக் கவிஞர். அல் சாதிக் அல் ராடி

மீனவன் வாயிலிருந்து வீசட்டும் காற்று,
பாய்மர படர்விலிருந்து படகு கூட்டிற்கு,
வாய்திறந்திடும் ஆறு-
ஆக கூச்சலிடு, மூழ்கும் மனிதனே
துரோக நீரில் மூழ்கிடும்  சமயம்

வகைறையில், அமைதியில்
பயணத்திடும் ஆறு
இறந்த மீனின் செதில்களில் 
ஆற்றங்கரை சூரியன்களை திரட்டிச்
சேர்த்திடும்
எதிர்ச் சுழிப்புகள் நெருக்கித் தள்ள
சக்திகளுடன், எறி பளு நறுமணத்தில்
மனங்கவர் நுண்ணிய பண்பில்
நிழல் அடுமனையில்

சாந்தமாகி, தென்றல் சரக்கேறி அசைவின்மையில்
பாய்மரம் சோம்பலில் ஏறிட,

தொலைவிலிருந்து இரவு முழுவதும்/முழுதும் அவர் பயணம்
ஆற்றில் உழுது சடங்கு நிலை பேற்றில்,
எதிர்ப்படும் இருண்மை உற்று நோக்கி

வைகறை பயணம் தொடங்கு
இதயக் கரைசலில் ஊறித்திளைத்த,
உமது முழு வாழ்க்கை கடற்கரையில்

ஆயினும், அவள் பார்வையில் 
பூமி மீதில் சுவர்க்கம், விருப்பமானவன் அளிப்பில்
கவிதையின் செப்பத்தில்
கோருகிறது- அனைத்தும்

(மொழியாக்கம்)

Wednesday, December 26, 2018

இப்படியும் சொல்வார்



இப்படியும் சொல்வார்
"உணர்ச்சி வசப்படாதே,"
உற்சாக செயல்பாட்டிற்கு,
அப்படியும் அறிவுரை.

எப்படியும் உயராமல்
தாழ்படியில்,
தளர்ச்சியின் பிடியில்.

அசைந்து போ,
இசைந்து வா,
உள்ள சமூகம்
அப்படி.

உயர்வேது இதில் 
உருப்படி,
வரும்படி பார்த்து
 ஏறு,
வளர்படி சேர்த்து
ஊறு.........

வேதம் ஓதுவார்


உச்சத்தில் போடுவார்
சொச்சத்தில் குறைப்பார்,
மச்சிவீட்டு உணர்வில்.

எதிர்ப்புக் குரல் புரிந்திட,
ஆண்டுக்கு மேல்
எடுப்பார்.
குறைப்பை பெருமை
என்பார்,
அரசுக்கு இழப்பென்பார்.

மக்களுக்கு இழப்பே 
இழப்பு,
மற்றது இழப்பல்ல, என்பது
ஏற்கார்.

சரக்கு சேவை எவருக்கென்று
அறியார்,
எதிர்வரும் தேர்தல் கவனத்தில்
கொள்வார்,
ஏதிலிகள் துயரம் எள்ளளவும் 
நோக்கார்.

ஏற்றமே மாற்றம்
வேதம் ஓதுவார்.

ஆண்டை சாதி

தற்கொலை என்பார்
சந்தேகமென்பார்,
சந்துகள் வைத்து ஓட்டையாக்கி
ஆய்வென்பார்,
ஆலோசனை என்பார்.

விசாரணை என்பார்
விரிவாக புலன் என்பார்,
தடயங்கள் எடுப்பார்.

தவறவிட்டு தொடுப்பார்,
சிபாரிசுக்கு ஏற்ப
சிதறவிடுவார்.

இழந்தவர் சோகம்
இமியும் உணரார்.

அதிகார சேனை,
அலுவல் சூழ்ச்சி,
அரசியல் குறுக்கீட்டில் ,
அடிமறப்பார்.

பெண்தானே,
பெற்றுத்தரும் கருவிதானே
உனக்கென்ன உரிமை தனியாக!
ஆணாதிக்க சமூகத்தில்!

உன் மீது வன்மம் 
உன் உடல் மீது வன்மம்
உயிர் மீதும்.

நாங்கள் ஆண்சாதி
மேலுக்கும் மேல்சாதி
ஆண்டை சாதி!

Saturday, December 22, 2018

பேதமை நெஞ்சம்




கவிஞர். மிர்சா காலிப்

பேதமை நெஞ்சே, என்னவாயிற்று உமக்கு?
 அந்தோ. இந்நோய்க்கு குணமென்ன?
நாங்கள் ஆர்வத்துடன் அவர்கள் மன வருத்தத்தில்
ஓ, ஆண்டவனே, இது என்ன செய்கை?
எனக்கும் நா உண்டு சற்று என்னிடம் கேள்
நான் என்ன சொல்ல
நீயன்றி யாரும் தற்போது இல்லை
பின், ஓ ஆண்டவனே எது குறித்து இரைச்சல்
பற்றுறுதி என்னவென்று கூட தெரியாதவரிடம்
நம்பிக்கையை நான் எதிர்பார்த்தேன்.

(மொழியாக்கம்)

"ஜெயச்சந்திரன்"


இவர் துணிக்கடை அல்ல,
வியாபாரம் செல்ல,
71ல் தொடங்கி
 மருத்துவ சேவை
71 அகவை வரை.

விவசாயத்தில் தோன்றி,
நலவழியில் கால் ஊன்றி
5ரூபாய்க்கு அசராமல்,
துணைவியருடன்,
ராயபுரத்தில் மருத்துவமனை,
மக்கள் மருத்துவர்.
வழிகாட்டினார்.

கலங்கரை ஒளி வீச்சாக,
பெருவணிக மருத்துவ
அந்நியமாதலில்,
மக்களை அண்டி,
பிணி தீர்த்தவர்.

பணந்தின்னும் வல்லூறு
மருத்துவ சுழலில்,
மணிமுத்தாக பணி முடித்தார்.

தடங்கெட்ட சமூகத்தில்
தனித்தடம் பதித்து,
நலவழி தரம் உயர்த்தினார்.

ஆள் அரவம் ,கூட்டம்,
குதூகலம் தவிர்த்து,
ஒற்றைச் சேண குதிரையாய்
மானிட நலம் பேணி.


Friday, December 21, 2018

தனிமை இரவு

கவிஞர். எர்மன் கெசெ

உடன்பிறந்தோரே, நீங்கள் எம்மவர்,
நெருக்கத்தில் உள்ளோரே
தொலைவில் உள்ளோரே
வறியவரே,

விண்மீனுக்கு விழைவோரே,
வலியிலிருந்து நிவாரணக் கனவில்
தடுக்கி விழும்
பேச்சற்றவரே,

இரவில் மின்னிடும் வெளிர் விண் மீன் ஒத்தவரே,
ஒடுங்கிய உமது கரங்களை உயர்த்திடு
சில நம்பிக்கைக்கு,

துயருறு, விழித்திடு
குழப்பமான பொது வறியவரே,

கடலாடிகளே நீங்கள் வாழவேண்டும்
நட்சத்திரமற்ற நம்பிக்கையின்மையில்,

நாம் ஒரே முகம் உடையவர்.
எனது நல் வருகையைத் திருப்பிடு.
(மொழியாக்கம்)

நெருப்பு இரவு


கவிஞர்.ஜான் எக்லெ

கதவுகள் திறந்திருக்க
அனவரும் வெளியில்,
வான வேடிக்கைக்காக
அணியமாக,
'எட்டி'- நாய் தவிர,
அது கொட்டில் அடைக்கப்பட்டு.

வெளியில் இருந்தாலும், உள் அரங்கில்
பட்டாசு  வேடிக்கை நிகழ்ந்தது.
இறப்பதை விட, பாதுகாப்பான வேடிக்கை
மிக நல்லது என்கிறார் தந்தை.
அண்டை அயலார் வான வேடிக்கையில்
காற்று முழுமையும் பட்டாசு வாசம்.
.
அம்மா கூறுகிறார், இவ்வாண்டு 
அவர்கள் நல்லவராக
நடந்து கொள்கிறார்.
கிறித்தோபர்  இவ்வாண்டு
அவனுடைய தந்தைக்கு உதவியாக,
வெடிகள் கொளுத்திட,
அனுமதிக்கப்பட்டான்

அவன் உற்சாகமாக,
அவன் பெருமிதத்தில்
 அவனுக்கு வயது 28 . 

(மொழியாக்கம்)

Thursday, December 20, 2018

டிசம்பர் வாழ்த்து


கவிஞர்.லியோ யான்கிவிச்

அட்டைகளின் தொலை ஒலி நீ கேட்கிறாய்.
ஒளிஉமிழ் விளக்குகள், காக்காய்பொன்,
இலவங்கம், கிராம்பு,
பனி குன்றிற்கு அப்பால் விண்மீன்,
காண்கிறாய்.

கிறிஸ்துமஸ் மரங்களின் அடுக்குகள்
நீ காணலாம்,
உலர் பழங்கள், திராட்சை
தோப்பின் கனிகள்அருகில் ,
வாங்கலாம்
பொன் நிறத்தில் பொறிக்கப்பட்ட வாழ்த்து மடல்:
"மகிழ்ச்சி, அன்பு, அமைதி"

நீ !
தற்காலிக அடுப்பின் வெப்பத்தில்
ஒலியுடன் கொட்டிடும்''கில்பசா '( கொத்துக்கறி) கொழுப்பை
 உமிழ்நீரால் சுவைத்திடு
பணப்பரிவர்த்தனை செய்து
சிகெரட் கொளுத்தப்படுகிறது.

வரிசையில் இடிபட்டு,
மெய் விருப்பத்துட்டன்
இருப்பது போல் பாவனை செய்து
நீ !
பருமனான பெண்கள் மீன் வெட்டுவதைக்
காண இயலும்.

சில கணம்  கண்களை மூடிக்கொள்ள 
முடியும்,
கையுறைகளை த் தாண்டி குத்திடும் குளிர்ச்சியை
மறந்திட இயலும்,
வானத்தில் உள்ள வைர கழுத்தணியை காண முடியும்,
அல்லது நகரத்தின் புறாக்களிடையே
யேசுவைக் காண இயலும்..

(மொழியாக்கம்)

Tuesday, December 18, 2018

ஒரு காலக் கண்ணோட்டம்





கவிஞர்.ராபர்ட் லாரன்ஸ் பின்யோன்

உடைவுற்ற ஒரு வீட்டின் நிழலில்,
வெறிச்சோடிய ஒரு தெருவின் கீழ்,
மதிற் சுவர்களில், குளிர்ந்த கரடுமுடான, மறைமுக படிக்கட்டுகளில்,
இறந்த காலங்களின் அமைதியில்.
ஒருவர் கரங்களில் இன்னொருவர் முரட்டுப் பிணைப்பில்
இரு காதலர்கள் சந்திப்பை நான் கண்டேன்.


இதயமற்ற அவ்வீட்டின்  மீதில்
மன ஆழத்தில் திகில் எழுந்தது
இழந்த நட்சத்திரங்கள், சிதலம் அடைந்த, பெரு நிலவுகள்,
இவைகளிடையே மேலோங்கிய உலகங்கள்,-
காலத்தின் கல் மாளிகை நொறுங்கி உடைந்தது,
அந்த உடன் முத்தத்தின் முன்.

மொழியாக்கம்

இந்திய சுதந்திரப் போரில் சிங்காரவேலரின் பங்கு

 மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம், தோழர். சிங்காரவேலர் அவர்களின், 159 ஆம் பிறந்த நாள் விழாவை 16.12.2018ல், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடியது. 
அதில் முதல் பரிசு பெற்ற கவிதை.


அடிமை வாழ்வை வெறுத்தாய்!
ஆதிக்க உணர்வை வெறுத்தாய்!
சந்தர்ப்ப சூழல் உடைத்தாய்!
சாதிக்கும் மனம் படைத்தாய்!
விதியில் பயனில்லை என்றாய்!
வீதியில் இறங்கி நின்றாய்!
வேங்கை குணம் கொண்டாய்!
விடுதலை வேள்வியில் குதித்தாய்!

நூற்றாண்டுகள் தலை நொறுக்கும் போரின்
நெடிய போர்ப் பரணி நிரல் இசைத்தாய்!
எக்காலத் தமிழரிடை வக்காலத்துஏற்று
ஏக்கழுத்து தமிழனாய் பகுத்தறிவேற்றினாய்!
சமதர்ம கதிரொளியில் சமூக நீதி நாட்டினாய்!

காட்சி மாறிட, விவசாய, தொழிலாளர் கட்சி
அமைத்தாய்!
அடிப்படை ஆதாரம் இணைத்துப் பார்த்தாய்!
தேரோட்டமே தேசிய நீரோட்டம் எனும்
காந்திய அணுகுமுறை மறுத்து,
போராட்ட களம் அமைத்தாய்!
'ரெளலட் சட்டம்' எதிர்த்து நின்றாய்!
பேச்சுரிமை, எழுத்துரிமை எம் பிறப்புரிமை
என்றாய்!
புறக்கணிப்பு அரசியல் ஏற்றி வழக்குரைஞர்
அங்கி துறந்தாய்!
'ஜாலியன் வாலா பாக்'' படுகொலை எதிர்த்தாய்!


துடிப்புடன் மிடுக்காய்!
ஒத்துழையாமை இயக்கம் ஒருங்கிணைத்தாய்!
சுதந்திரப் போரின் விசை முடுக்கினாய்!
நீடு துயில் நீக்க நீள் கிளர்ச்சி கொண்டாய்!
நிலாச் சோறு  உண்டாய்!



Sunday, December 16, 2018

இறுதி நேயம்


கவிஞர். பியோடர் இவனாவிச் டையூட்சர்

ஓ!
நலிவடையும் நாட்களில்
மிக இதமாக,

ஆழ்ந்த பிரியத்துடன்
நாம் அன்பு செலுத்துவோம்......

மேற்கில் இன்னும் நாடோடியாக
கழிந்திடும் பொழுதே,

மின்னவும், மின்னவும்
இறுதி நேய வீழ் ஞாயிற்றின்,

விலகும் ஒளிக் ஒளிக் கீற்றுகளே,
நிழல் விண்ணுலகைத் தழுவிடும்,

மேற்கில் வெளிச்சம்  இன்னும் நாடோடியாக,,-

பொறுத்திடு, பொறுத்திடு
வீழ்ந்திடும் பகலே,

நீட்டிடு, நீட்டிடு  உமது வசியத்தை
நமது நாளங்களில் இரத்தம் இலகலாம்,
ஆயினும்,

நமது இதயத்தில்  இத உணர்ச்சி
ஆட்சியில்.......
ஓ, நீ!
எமது இறுதி நேயமே!

நீயே எமது சொர்க்கம்,
நீயே எமது சாபம்.

(மொழியாக்கம்)

அன்பென்று கொட்டு முரசே

15.12.2018ல் "இலக்கியச்சோலை கவியரங்கத்தில்" வாசித்த கவிதை


எண்ணத் திரைகள் ஏழு விலக்கிட
ஏற்றத் தாழ்வு பழுது நீக்கிட,

ஊருக்கும்,உலகுக்கும் உள்ளொளி ஏற்றி
அன்பே வாழ்வின் அடிப்படை என்று,

வெண் முரசம் கொட்டினான் நாட்டுக்கவி
அன்று.

நால் வகுப்பும் தொழில் வகுப்பே
தோல் வகுப்பல்ல என்றான்.

தொண்டர் என்றோர் வகுப்பில்லை,
தொழில் செய்யா சோம்பலுக்கு விடிவில்லை
என்றான்.

பெண்ணுரிமையே, மண்ணுரிமை என்றான்
பேதமை அகற்றும் கல்வியே மனித உரிமை
என்றான்.

சுரண்டல் ஒழித்திடும் மண் விடுதலை வேண்டினான்,
அறிவும், நல் ஆன்மீகமும் நாட்டினான்,

நானில சமத்துவம் நாட்டின் முன்னேற்றம்
கூட்டினான்.

அன்பின் வழியது சாத்தியம் வேறில்லை
உணர்த்தினான்.

Thursday, December 13, 2018

நெல் ஜெயராமன்


 சொல் ஜெயராமன்களுக்கிடையில்,
 செயல் ஜெயராமன்.
காணாத ராமனுக்கிடையில்  காணும் ராமன்,
காவிய ராமன் அல்ல காவிரி ராமன்.

மக்களை பிரிப்பவன் இல்லை,
மனங்களை இணைத்தவன்.

பாசாங்கு செய்தவன் அல்ல,
பசி போக்கியவன்

 காணா நெல் ரகங்களை
கண்டு பிடித்தவன்,
கொண்டு சேர்த்தவன்,
கழனியின் மைந்தன்.

நம்மாழ்வார் வரிசையில்
வேளான்மை பலம் சேர்த்தவன்,
187 நெல் ரகங்களை
தொம்பையில் சேர்த்தவன்,
நலம் புதுக்கியவன்.

ஓடியாடி உழைத்து,
ஒப்பு நோக்கி
ஊருக்கு, உலகுக்கு அளித்தவன்,
உழவுக்கு உறுதி சேர்த்தவன்.

அருகியே சென்றிட்ட அரும் பயிர்களை
அரவம் இழந்திட்ட வேளாண்மையை,
மீட்டெடுத்தவன்.

ஒற்றை அணி படையாய், டெல்டாவின்
பண்பை மீட்டவன்.
ஆழ்வார் வரிசையில், நெல்லேருழவராக
நானிலம் உயர,
மாநிலம் காத்தவன்.

நோயுற்ற போதும், நுடங்கிடாமல்
நோக்கம் சேர்த்தவன்,
விட்டுச் செல்லும் பணி
விசனம் தூர்த்தவன்.

Tuesday, December 11, 2018

ஊடகம்











உள்ளதை மறைக்கும்
 நல்லதை சிதைக்கும்
வெட்டிப் பேச்சில் வேள்வி நடத்தும்
நடப்பியல் நாசம்
திசை திருப்பும்
தீராவினைக்கு
தீர்வு கேட்கும்
திரைக் காட்சி தினந்தினம்
தீனி சேர்க்கும்
சிந்தனை மழுங்கடிக்கும்
மணித்துளிகள் மாய்த்து
"மாய சாலம்"

மனித உரிமைகள்

கவிஞர்.ழிபா தாகீர்

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்
மனித உரிமைகள்
மெக்கானிக் கடையிலிருந்து சிறுவனின் அழுகுரல்,
எனது உரிமைகள் என்ன?,
"கல்வியா அன்றி மெக்கானிக்கா"!

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்
மனித உரிமைகள்
ஒரு வீட்டிலிருந்து  சிறுமியின் குரல்
எனது உரிமைகள் என்ன?,
"அடிமைபோல் வீட்டு வேலை செய்வதா
அன்றி கற்பதா"!

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்
மனித உரிமைகள்
வீட்டிலிருந்து பெண்ணின் குரல் கேட்டது
எனது உரிமைகள் என்ன?
"அடிமையாகக் காலம் கழிப்பதா
அன்றி உரிமை குடிமகளா"!

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்.

(மொழியாக்கம்)

Friday, December 7, 2018

சென்டினலிஸ் பழங்குடிகள்



ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்
கட்டும் வேண்டாம், கரவும் வேண்டாம்
காசும் வேண்டாம், மாசும் வேண்டாம்
ஆத்திகம் வேண்டாம், நாத்திகம் வேண்டாம்
அடிமை வேண்டாம், மிடிமை வேண்டாம்
கொஞ்ச வேண்டாம், கொடுமையும் வேண்டாம்
எஞ்சியே நிற்கிறோம்!
இயற்கைத் தாயிடம் கொஞ்சியே வாழ்கிறோம்!

இருப்பவர் கொஞ்சமானாலும்
இனிமையில் வாழ்கிறோம்,
இடம் பெயர்ந்து நிற்கிறோம்.

காட்சிப் பொருளல்ல நாங்கள்,
மனிதத்தின் மாட்சிப் பொருள்
அழித்த ஆதிக்கத்தின் ,
அடி தாளாமல்
இயற்கையின் இடி தாங்கி,
செடி கொடிகளுடன்
கடல் அலை தாலாட்டில்,
 காட்டின் அரவணைப்பில்
விலங்குகளின் உறவில்,
பூச்சிகளின் புரிதலில்.

காட்சி அரசியல்,
போலிமைச் சமூகத்தின்
அதிகாரம் நீங்கி,
ஆன்ம விடுதலையில்
வாழ்வை நேசித்து.


அழிவொன்றே அலுவல் பணியான
மனித விலங்கை கண்டஞ்சி!
காணாத தொலைவில் ,
கையடக்க வாழ்க்கையில்.

உம்மிடம் நிலவும் ஓராயிராம் கோளாறுகள்
 ஏற்றிட
சுற்றுலாவில் எம்மை வேட்டையாடாதே!
போடாதே திட்டம்!

நோய்களின் தொகையான மனித சமூகமே!
 உளவியல், உடலியல் தொற்றுகளை
 உம்மிடமே வைத்துக் கொள்,
நிரந்தர வைப்பாக!

 கயமையின் கருவூலமே!,
சகிப்பின்மையின் மத்திய வங்கியே!
சாகசமே!,
வெறுப்புணர்வின் வேள்வியே,
எட்டி நில்!.

எம் விடுதலையை குலைத்து விடாதே!
 காட்சியகம் இல்லை!
 எம் வாழ்க்கை,
 அந்தரங்கத்தை புரிந்து கொள்!

 உமக்குத்தான் அடிப்படை உரிமையா?,
மனித உரிமையா?
இயற்கையை அழித்து வரும்
சர்வதேசக் குற்றவாளியே!
எண்ணற்ற குற்றங்கள்,
கணினியும் கொள்ளாது
கழிசடை சரக்கு நீ!

தரவுகளில் எம்மை காவு கொடுக்கிறாய்!
தள்ளிப்போ!
நாகரிகம் நடத்திய நாசகர போரில்
அடையாளம் காத்திட ,
தற்காப்பு யுத்தத்தில் ,
கலைவரிகள், கலாச்சார நெறிகள்,
தலைமுறைகள் இழந்து.

அறிவியல்  ஆதிக்க சமூகத்தின்
 அடாவடி செய்கையில்
 சிதைந்து, சின்னாபின்னமாய்
 ஓடி, ஓடி, ஒடுங்கி
 மொழி இழந்து,
விழி இழந்து,
 பண்பாட்டு கூறுகள் பறிகொடுத்து
 அமைதி இழந்து,
 அணுக்கம் அகன்று.


இயற்கைப் பேரழிவுகளும் இம்சை சேர்த்து,
இடித்து நொறுக்கியும்,
இழந்த உறவுகள் போக ,
நைந்த இழையின் மிச்சம்
நம்பிகையுடன் ஒதுங்கி வாழும் .
உள்ளதை உயர்வாய்க் கொண்டு!

Thursday, December 6, 2018

முறுக்கும்






திசை திருப்பும் அரசியல்
தசை முறுக்கும்
பசை சேர்க்கும்
பதவி சுகத்தில்.

பக்தி கூட்டும்
பல வண்ணம் ஏற்றும்
பகை மூட்டும்
படம் காட்டும்.

பாசங்கு தேசத்தில்
திரிசங்கு ஊதி
தெரு சங்கம் நிறுத்தும்,
வரி சங்கம்.

வாணலியில் தாளிதம்
நாள்தோறும்,
வன்மம் ஏற்றும்.

விவசாயி போராட்டம்














கோவணம் கேவலம்!
அம்மணம் அவமானம்!

நிறைவேற்ற வாக்குறுதிகள்..............?
நிலையற்ற காப்பு/உறுதிகள்..............?

'பைன் காடு'



கவிஞர்.கப்ரியிலா மிஸ்ட்ரல்

காட்டிற்குச் செல்வோம்
இக்கணம் நாம்,
விரைந்திடும் மரங்களின்
காட்சி உம் முன்,
தங்கி  அவற்றிடம் உம்மை அளிப்பேன்
ஆனால்,
அவை குனிந்து வர
இயலா.

ஊருயிரிகளை கண்காணித்திடும்
இரவு,
பைன் மரங்கள் தவிர்த்து  பொறுப்பேற்கா:
பழைய புண்ணுற்ற வசந்தங்கள்,
போற்றிடும் பிசின்
ஊற்றேடுக்கும்,
இறவா பிற்பொழுதுகளில்.

இயலுமெனின்,
அம் மரங்கள் உம்மைச்
சுமந்திடும்,
பள்ளத் தாக்கிலிருந்து
பள்ளத் தாக்கிற்கு,
ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு,
நீ,
தந்தையிடமிருந்து, தந்தையிடம்
தாவிச்சென்றிடும்,
குழந்தையைப் போன்று.

மொழியாக்கம்

Monday, December 3, 2018

டிசம்பர் இரவு



விஞர்.வில்லியம் ஸ்டான்லி மெர்வின்

இருளில் நின்றிடும் பனிச் சரிவு
ஆயினும்,
மரங்களின் தென் பகுதி வறண்டு தொட்ட பொழுதில்.

உறுதி கிளைகள் ஊர்ந்திடும் நிலவைத் தேடி
தோகை சுமந்து,
வந்தேன் இக்காட்சியைத் தேடி,
முதிர் வெண் செடிகள் காண,
மிக முதிர்வுற்றது முதலில் பாழாகி உலர்ந்தது.

நிலாவில் விழித்திருக்கும் காக்கையின் ஒலி,
நான் கேட்கிறேன்
நீர், அதன் விரல்களில்/ன் ஊடாக,
முடிவற்று ஓடிக் கொண்டிருக்கும்.

இன்றிரவு, மீண்டுமொருமுறை
 நான் கண்டேன் ஒரு ஒற்றை வழிபாடு,
 அது எனக்கானது அன்று.

(மொழியாக்கம்)

Saturday, December 1, 2018

'அந்தமான் காய்'

'அந்தமான் காய்' தருவேன்
அதை நடுவேன்
சொந்த மண் அழிவிற்குப் பின்
ஆறுதல்
அடுத்த மாநில' மான்'
கடுக்காயோ!
துடுக்காய் கேட்டேன்!

தென்னைக்கும்
இடதுசாரி ஆகாதோ?
தமிழ்நாட்டில், 'டெல்டாவில்'.

15 கழிந்தது பார்வையிட ,
16ல் பல்லுறுதிகள்.
பகடை உருட்டும் சகடை அதிகாரம் ,
வாடிக்கையாக.
சமதளம் இழந்து,
சம்பிரதாயப் பவனியில்.
' சாதனை சுமந்து' ,
வேதனை சேர்க்கும்.

இழந்தவர் சூழலில், தம்மை வைத்து
தவிப்புணரார்!

சிந்தனைச் சூழ் ஒளி வட்டம்


கவிஞர்.கெவன் ஆர்வுட்

உலகின் ஒழுங்கைக் காட்டு,
அனைத்து பட்டறிவுக்கும் முன்னர்
இது இப்படி, கடு-விளிம்பின்
வெளிச்சம் என்று,
உலகிற்கும், சிந்தனைக்கும் பொதுவான,
மாதிரி இல்லை,
உண்மையைத் தவிர.

மொழி சரியான விளையாட்டன்று,
அவ்வாறாயின்,
எவ்வாறு நாம்
விளையாடியிருக்க இயலும்?
பொருட்களின் கூட்டல்ல  உலகம்
அதை விட மேலானது.
நிலா , வான் போன்று, நடுவம் போன்று
உடல், படுக்கை போன்று,
பாடிடும் மேதாவிகள் அறிவர்.

காதலர் இருவர் படங்கள்
அருகருகே, துயின்று
கனவு கண்டு, விழித்து
மெய்யுலகை, கனவுலகைத்
தாங்கி நிற்பர்
உடல், உடலாக;
சொல், சொல்லாக
சிந்தனை வன,
ஒளி வட்டத்தில்


(மொழியாக்கம்)

வாழ்க்கையின் பாதி


(கவிஞர்.பிரடரிக் ஓல்டர்லின், செர்மானியக் கவிஞர்.
வசந்த கால செழிப்பும், குளிர்காலச் சிரமும் குறித்து, இப்படி .......)

மஞ்சள் பேரிக்கள்
காட்டு முளரிகள் பூத்துக் குலுங்கும்
எங்கெங்கும்
ஏரியை நோக்கி நீண்டிடும் கரை
ஓ! கருணை மிகு அன்னப் பறவைகளே,
முத்தங்களை மொண்டு
தலைக் கவிழ்ந்து
தெளிந்த தூய நீரில்.

ஆ, எங்கு காண்பேன்
மலர்களே,
குளிர்கால வருகையில்
சூரியக் கதிர்கள் எங்கே?
பூமி நிழல்கள் எங்கே?
சுவர்கள் குளிர்ந்திருக்க
பேச்சற்று காற்றில்
வானிலை திசைக் காட்டி
கிரீச்சொலியில்

(மொழியாக்கம்)

சாய்க்கடை சாதனை



உடைந்த சிமெண்ட் கட்டை,
 ஒடுங்கிய மட்டை
ஓட்டம் இல்லா,
ஒப்புக் கட்டை
சப்புக் கொட்டி செல்வார் சாரிகள்,
பாதையில்.

மூக்கைப் பிடித்து, மூச்சுத் திணறி
வெளியே கொட்டுவார் ,
வெறுங்கைகளால்!
ஒப்பந்தம் இதற்கும்,
மழைக் காலம் சில்லறை சேர்க்கும்.

சேறும், சகதியும் சேர்ந்து
 உள்வாங்கும் உலகமாய்!

நொதிந்து நோய்க் கிருமி பெருக்கி
ஆய்வகமாய்!
மூடியதால் முடுக்க வினை
 நொதிப்பில்.

உயர் அதிகார செழிப்பில்,
ஒப்பந்தகர் உயர்வில்!
ஒருங்கிணையும் பொது நலம்.

இவர், அவர், பேதமின்றி
சாலைகள்
சமரச சோலைகள்!
துப்புரவு ஆலைகள்!