Sunday, February 22, 2009

முப்பரிமாணம்!

அடிப்பேன்! உதைப்பேன்!
கைகளால்! கால்களால்!
கற்களால்!கனத்த
நெடுந்தடிகளால்!
அதிகாரம் இருக்கு
எமக்கு!

சொற்களால் தாக்கும்
கருஞ்சட்டைக்காரன்!
உமக்கென்ன கற்கள்!
கழிகள்!வண்டிகள்!
கெளரவம்!

துப்பாக்கி உம்மிடம்
உண்டா?
அனைத்தும் எம்மிடம்!

வழக்கு போடுவேன்!
வரிசையாய் நிறுத்துவேன்!
அதையும் தாண்டி
கதையை முடிப்பேன்!

எவன் என்னை கேட்பது!
நானே சகலமும்!

Friday, February 20, 2009

இல்லையா?

நீதி மன்றமா?
வீதி மன்றமா?

விதியைக் காக்கும்
மதி!
பதவியை மறக்கலாமா?
பழியை ஏற்கலாமா?

ஒரு மனிதன் பாதுகாப்புக்கு
ஓராயிரம் கவசமா?
அதிரடியா?

ஓட்டாண்டிகள் உரிமை
மீறலுக்கு!
இந்தளவு ஒத்தாசை!
'காக்கி'
அளிக்குமா?

"சட்டம் ஓர் இருட்டறை
வக்கீலின் வாதம்
ஒரு விளக்கு"

விளக்கை அணைத்தவர்
யார்?
எங்களுக்கு
வெளிச்சம் தேவையில்லை!

இருட்டறையே போதும்!
நாங்கள்
திராவிடர் இல்லையா?

Wednesday, February 18, 2009

சிலம்பொலி வேண்டும்!

ஓயவில்லை இன்னும்
இரத்த வெறி!
இனத்தை துடைத்தொழிக்கும்
'புத்த வெறி'!

தமிழ் இன உணர்வு
வெறியாயின்!
சிங்கள உணர்வு
என்னவாம்?

அமர்க்களம் நிகழ்த்திடும்
சிங்களம்!
அன்றாடம் வீழ்ந்திடும்
எம் சனம்!

மனிதன் இல்லையா?
மானிடமே
சொல்லைய்யா?

காகிதத்தில் பேசியே
கழிந்த காலங்கள்!
ஆயுதத்தில் பேச வைத்தவன்
யார்?

எதிரியின் தீர்மானத்தை
இறுதியாக்கியவன்
எவன்?

உன்னுள்ளிருந்தே உருவான
எதிர்ப்புணர்வு தீயை
மூட்டியவன்
நீ இல்லையா?

போடு இப்போது
என்கிறாய்!
என்ன தருவாய்?
யாது அளித்தாய்?
இதுவரை?
பட்டியல் தருவாயா?

சுடுகாட்டைக் கூட
சொந்தமாக்காதவன்!
இடுகாட்டைக்கூட
இடித்து நிரப்பியவன்!

'பிரிக்காத நாடு வேண்டும்'!
பேரம் பேச!
சோரம் போக!

ஒற்றைத் துருவ உலக
அரசியலில்!
ஓயாதா அவலம்!

ஈழத்து மக்கள்!
படும் துயரம்!
சொற்கள் இல்லை
கூடிடும் சோகம்!

'அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்'!
சிலம்பொலி கேட்க வேண்டும்!
எம் மக்கள் புலம்பொலி
போக்க வேண்டும்!

Saturday, February 14, 2009

தொலைவில் இல்லை!

ஈழம் எரிகிறது!
எம் இனமும்!
தினம்! தினம்!

கொத்து! கொத்தாக!
செத்து மடியும்!
சேதி!

உம் செவிகளில்
விழவில்லையா!

உலக மனசாட்சி
இருக்கட்டும்!
உம் மனம்
கல்லா?

ஏளனம் செய்யும்
ஏவல் நாய்!
எம் தமிழ்த் தலமையை!

கேவலம்!
உம் குட்டு வெளிப்பட்டும்!
முகத்திரை கிழிந்தும்!

முகமம் கலைந்தும்!
உள் மன வன்மம்
குறையவில்லை!

சூத்திரதாரி!

சூழ்ச்சி அறிந்த
எம் மக்கள்!
அன்றாடம்
தன்னுயிரை மாய்த்து!

மன்னுயிரை காத்திடும்
மக்கள் பெருமை!
நிறுவி சென்றார்!

தம்மம்!

உன் வழித்தோன்றல்
என்பதால்!

சூது கொண்டு
கொன்று குவிக்கிறாய்!

நிகழ் கால வரலாறும்!
எதிர்கால வரலாறும்!
உம்மை மன்னிக்காது!

விதைத்த
உம் வெறுப்பு!
மூட்டிய எம் தியாகிகள்
நெருப்பு!
அணையாத சோதி!

ஆசியாவின்
புது விதியை
உருவாக்கும்!

அரசியல்
சேதியாகும்!
நாள்!

தொலைவில் இல்லை!

Friday, February 13, 2009

காந்தி?

காந்தியின் தேசமே!
கருணை இல்லையா!
ஆமாம்,
எந்த காந்தி?