Thursday, July 31, 2008

"சகிப்புத் தன்மை"

உண்ணா நிலை!
ஊரெங்கும்!
வெள்ளிக்கிழமை விரதம்
போல்!

உழைக்கும் மீனவர்!
தொடரும் துயரம்!
துண்டில் மீன் போல்!
துமிக்கியின் பிடியில்!

இலங்கைக் கடற்படை!
இடைவிடாது!
இழைக்கும் இன்னல்!
சொல்லி மாளாது!

என்றும் ஏந்தும்
கை!
இன்றும்
ஏந்தும்!
ஏதிலி போல்!

சுரந்த சோகம்!
பறந்து சென்றது!
பந்தலின் கீழ்!

காந்திய வழி!

"ஆசிய சோதி"

வேட்டை! நல்ல வேட்டை!
நாட்டில்! நம் காட்டில்!
நல்ல மழை!

பேரம்! நல்ல பேரம்!
நேரம்! நல்ல நேரம்!
"குதிரை பேரம்"

அரேபியாவை விஞ்சும்!
வேகம்!
எம்மிடம்! தாழ்வாரத்தை
தாண்டி!

உள் அரங்கில்!
ஓயாத வேட்டை!
சாயாது பொழுது!

ஆற்றல்! அணு தேவை!
எமக்கு! அட நமக்கு!

யார் சொல்வது!
ஏழை நாம் என்று!

கோடியில் புரளும்!
மக்கள் நாயகம்!
இரண்டாவது நாயகம்!

அழியா சேதி!

பார்வை வேண்டும்!

"கல்விக்கு கண்" தந்தாய்!
வயதாகி விட்டது!
அறுவை செய்!
"ஆடி" தா!

Wednesday, July 16, 2008

"தேவை உண்மை அறியும் ஆணையம்" (மொழி பெயர்ப்பு) தொடர்ச்சி....

100க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் ஆப்கானிசுத்தான், ஈராக் மற்றும் கெளந்த்தானமோ(கியூபாவிற்கு அருகில் உள்ள சிறை கொட்டடி) போன்ற பகுதிகளில்,அமெரிக்க காவலில் கொல்லப்பட்டனர் என்பது ந‌மது நாட்டின் புகழுக்கு,களங்கம் சேர்க்கக் கூடிய நிகழ்வுகள் ஆகும்.

நம்மால் வதைக்கு ஆளானவர்கள்,பெரும்பாலும் யாதும் அறியா அப்பாவிகள்.தார்மீக நெறி இழந்த,திறமையற்ற நிர்வாகத்திற்கு இச் செயல்கள் அழுத்தமான‌ சான்றாகும் என்பதே உண்மையாகும். 'மெக்கிலாட்சி' செய்தி இதழ் நிறுவன குழுமம் வெளியிட்டுள்ள, வதை மற்றும் இதர மீறல்கள் குறித்த,மிக மோசமான தொடர்களில், தாமசு ஒயிட் எனும் முன்னாள் இராணுவத்துறை செயலர் கூறியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், கெளந்த்தானமோ சிறை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே,அதில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினர், குற்ற நடவடிக்கைக்கு ஏதும் தொடர்பு இல்லாத‌வர்கள் ஆகும், என்பதாகும்.

மேலும், முகம்மது அக்தியார் என்கின்ற சிறைவாசி, அமெரிக்காவிற்கு சார்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.எனினும், அமெரிக்க இராணுவத்தினர் அவரை மிகவும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மீறல்கள்,செப்டம்பர்,11க்கு பிறகு,பல ஆண்டுகளாக தொடர்ந்தன.காரணம், பெரும்பான்மையான நமது தேசிய நிறுவனங்கள் தங்களது கட‌மையை சரிவர ஆற்றவில்லை என்பதே பகுதி உண்மையாகும்.

சனநாயகக் கட்சி நாட்களை கடத்தியது, விசுவாசமான எதிர்க் கட்சியாக த‌மது கடமையை ஆற்றவில்லை. ஊடகத்துறையில் உள்ள நாங்களும் கட்டுப்பட்ட நாயாகத்தான் இருந்தோம், மாறாக காவல் நாயாக செயல்படவில்லை.நாட்டை, இது போன்ற சூழலில் கைவிட்டு விட்டோம் என்பதே உண்மையாகும்.

இருப்பினும்,சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிவில் உரிமைக் குழுக்களும், வழக்குரைஞர்களும் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டனர்.ஆயினும் சில நீதிபதிகள் நிலைமைகளை அமைதியாக சலனமின்றி கவனித்து வந்தனர். நிர்வாகத்தின் உள்ளே சில பழமைவாதிகள் வெளிப்படையாகப் பேசினர்.

டைம்சு இதழ் எரிக் லிசட்பிலா,"புஷ்ஷின் சட்டங்கள்" எனும் தனது அருமையான நூலில்,"வெளிநாட்டினர் மற்றும் குடியுரிமைச் சேவை ஆணையர்",சேம்சு சிக்லர், அரேபிய‍‍‍‍ அமெரிக்க அண்டை அயலவரை, வீடு வீடாக சென்று சோதனையிட வேண்டும் எனும் திட்டத்திலிருந்து பின் வாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.இப் புத்தகத்தில், ஒரு கட்டத்தில்,"நம்மிடத்தில் நமக்கென்று அளிக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது" என்பதைச் சுட்டி, வீடு வீடான சோதனை முறை சட்ட விரோதம் என்று குறிப்பால் உணர்த்தினார்.

நான் மிகவும் போற்றக்கூடிய நிலையில், இராணுவ வழக்குரைஞர்கள் உள்ளனர்.தங்கள் பதவிக்கு ஆபத்து என்கின்ற போதிலும், பெண்டகன் இராணுவத் தலைமையை மறுத்து செயல்பட்டனர்.இதன் காரணமாக, குடிப் பழக்கம் உள்ள தங்கள் நண்பர்களையும் பகைத்துக் கொண்டனர்.பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இசுலாமியர்களுக்காக, இவர்களுக்கு எதிராக சான்றுகள் பெரும்பாலும் தெளிவில்லாமல் உள்ள சூழ்நிலையில், இவர்களுக்காக பரிந்து பேசியவர்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளில் புலனாய்வு செய்திடும் உண்மை அறியும் ஆணையம் என்பது, பாரபட்சமற்ற,மதிப்பு மிக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர் பதவிகளில் உள்ள, இராணுவப் படைப்பிரிவுத் தலைவர்கள்,உயர் நிலையில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டதாக அமைந்திட வேண்டும். இதுபோன்ற பின்னணி உடையவர்களின் கண்டறிதல் அறிக்கை,அரசியலில் அரங்கில் மிகுந்த நம்பகத் தன்மையை நமக்கு ஏற்படுத்தும்.

நான் அறிந்த இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றெந்தப் பிரிவினரைப் போலவும்,நமது மீறல்கள் குறித்து அதிர்ச்சி அடைந்தவர்களாக உள்ளனர்.

Wednesday, July 9, 2008

அமெரிக்காவின் தேவை: உண்மை அறியும் ஆணையம்!

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர்,
அமெரிக்காவும் போர் குற்றங்கள் புரிந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் என்று குற்றம் சுமத்திய போதுதான் நமக்கு ந‌ன்கு தெரிய வந்தது, நமது நாட்டிற்கு தேவை, நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஒரு புதிய வழி என்பது.

"தற்போதைய அமெரிக்க நிர்வாகம், போர்க் குற்றங்கள் ஏதும் புரியவில்லை எனும் சந்தேகம் நமக்கு எழவேண்டிய அவசியமே இல்லை"

அமெரிக்க மீறல்கள் குறித்து ஈராக்கில் விசாரணை நடத்திய அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரி, அந்தோணீயோ தகூபா, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் எனும் அமைப்பின் செய்தி அறிக்கையில், அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய வதை குறித்து,
"வதை செய்யுங்கள் என உத்தரவிட்டவர்கள் மீது, எவ்விதமான நடவடிக்கை எடுத்திட முடியும் என்பதே தற்போது எழும் கேள்வியாகும்"

பொறுப்பேற்பு உணர்ச்சியின் முதல் கட்டம் வழக்குகள் தொடுப்பது என்பதல்ல.ஆன்ம தேடல் வழி, ஒரு தேசிய தூய்மைப்படுத்துதல் பணிக்குத் தலைமை ஏற்றிடும் வாய்ப்பு உள்ள, ஒரு தேசிய உண்மை அறியும் ஆணையம் அமைத்திடுதல் நமக்கு இன்றியமையாத தேவையாகும்.

இதுதான் தென்னாப்பிரிக்க அரசாங்கம் நிறவெறிக் கொள்கைக்குப் பின் உண்மை அறிதல் மற்றும் இணக்க உணர்வு ஆணையம் அமைத்து செயல்பட்ட விதம் ஆகும்.

ஐக்கிய அமெரிக்க நாடும் இனவெறித் தொடர்பாக கெர்னர் ஆணையம் அமைத்து செயல்பட்டது. 1980ல் அமைக்கப்பட்ட ஆணையமும், இரண்டாம் உலகப்போரில் சிறை வைக்கப்பட்ட சப்பானிய அமெரிக்கர்கள் குறித்து ஆராய்ந்தது.

தற்போது, செப்டம்பர் 11 நிகழ்விற்கு பிறகு, நிகழ்ந்தேறிய மீறல்கள் குறித்து புலனாய்வு செய்திட, இதேபோன்ற ஒரு உண்மை அறியும் ஆணையம் அமைத்திட வேண்டிய தேவை உள்ளது.

நம‌க்கு முன்பே தெரியும் ஐக்கிய அமெரிக்க நாடு,நெல்சன் மண்டேலாவை கண்காணிக்கப் படுபவர்கள் பட்டியலில் வைத்திருந்தது. சீன‌ இராணுவ‌ம், கொரியப் போரில் அமெரிக்க‌ கைதிகள் மன உறுதியை குலைப்பதற்கு, பயன்படுத்திய புலனாய்வு உத்திகளை பதிவேடுகள் வழி அறிந்து, அமெரிக்க இராணுவமும் பயன்படுத்தி்யது என்றும் அறிய வருகிறது.

எனினும், இப்படிப்பட்ட வதை உத்திகள் மூலம் பொய்யான வாக்குமூலங்கள்தான் பெற முடிந்தது ,என நாம் அறிந்த செய்தியாகும்.

Sunday, July 6, 2008

எரித்துக் கொள்!

அணு ஒப்பந்தம்
அவசியம் எமக்கு!
'சம்சாரம் போல்'

விலைவாசி உயர்வு!
அனைவருக்கும் பொது!
பொறுத்துக்கொள்!
தோழா!

அடுத்தமுறை,
ஆட்சிப் பொறுப்பு தா!
மின்சாரம் தருவேன்!
அடுப்பு எரித்துக் கொள்!
அடி வயிற்றையும்!
தடையில்லாமல்!