Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Saturday, March 31, 2018

கண்ணாமூச்சி!











துயிலெழும்போது துலங்கிய எண்ணம், கிளம்பிய சிந்தனை; திரண்ட கருத்துக்கள்; வடித்திட ஏடெடுத்தபோது; வசப்படாத மாயம் பல தருணங்களில். மனத்தின் கண்ணாமூச்சி!

சுற்றி எழும் சத்தம், சந்தடி, வந்த அடி தெரியாமல் சிந்தனை வழி மாற்றிடும் வந்த விசையில் தங்க இயலாது!

தவித்த கணம் கடந்தும் தயாரிப்பிற்குள் வராது!   பல முறை இதுபோல் நிகழும், நீளும் .
உள்ளக் கடலின் ஓயாத அலை அடிப்பில் உற்சாகம் உடைந்து!

Tuesday, October 28, 2008

உள் வெளி!

கனவிலும்!
நினைவிலும்!
காட்சிகள்!

காலங் காலமாய்
கரைந்திடும்
உள் வெளியில்!


கனத்த இதயத்துடன்!
களித்த தடயத்துடன்!

Sunday, October 26, 2008

தேரோட்டம்!

எங்கிருந்தேன்!

எதற்கிருந்தேன்!

உமக்குத் தெரியாது!


இன்று இருப்பது!

தெரிய வேண்டும்!


நாடாளும் வேளை!

வந்து விட்டது!

நரக வேதனை

தந்து விட்டது!


நாட்டின் நலனே!

எம் வீட்டின்

நலன்!


வீட்டிற்குள் நாட்ட!

நலம் கூட்ட!

நான்!

நாள்தோறும்!

Wednesday, October 22, 2008

உணர்வுகள்!

'நினைக்க மறக்காதே'!

'மறக்க நினைக்காதே'!

'தானி' கவிதை!

ஏக்கம் !

எதிர்பார்ப்பு!

தோல்வி ! வெற்றி!

காதல் ! கடமை!

உரிமை! அருமை!

உணர்வுகள்!

களம் இறங்கும்!

தளம் அமைக்கும்!

கருத்து தூளி!

கவிதைக்கேணி!

Thursday, October 16, 2008

உழைப்பு!

இரவில் உழைப்பு!
பகலில் ஓய்வு!
இன்னொரு உலகம்!
இருண்ட உலகம்!

Wednesday, October 15, 2008

பாதை

பாரதி புதுவை வந்து!
நூறாண்டு!
பெருமை எமக்கு!

வந்தான்! வாழ்ந்தான்!
ஊரில்!
விழா!

வல்லாண்மை கொடுமை!
வல்லூறுகளை!
வாழ்விலும்! தாழ்விலும்!
விழிப்பிலும்! உறக்கத்திலும்!
விசையுடன் எதிர்த்தவன்!

தமிழன் நிலை!
தரணியில் உயர்த்திட!
விடுதலை முழக்கி!

பறையருக்கும்!புலையருக்கும்!
ஆனந்த சுதந்திரம்!
அறிவிப்பு செய்தான்!
ஆண்டவனைத் தேடிஅலையும்
அறிவிலிகாள்!
என்றான்!

தேமதுரத் தமிழ்!
உலகெலாம்!
பரவும்வகை செய்தல்!

சேமமுற!
தெருவல்லாம்!
தமிழ் முழக்கம்!
வாள்வலியும்!
தோள்வலியும்!
போச்சே!
என்றான்!

கானல் நீராக்கிய
கண்ணிய மைந்தர்!
புண்ணிய புதுவையினர்!

இன்னும்
பல நூறாண்டுகள்!
கொண்டாட வேண்டும்!
சாங்கியம் எமக்கு!

Sunday, July 6, 2008

எரித்துக் கொள்!

அணு ஒப்பந்தம்
அவசியம் எமக்கு!
'சம்சாரம் போல்'

விலைவாசி உயர்வு!
அனைவருக்கும் பொது!
பொறுத்துக்கொள்!
தோழா!

அடுத்தமுறை,
ஆட்சிப் பொறுப்பு தா!
மின்சாரம் தருவேன்!
அடுப்பு எரித்துக் கொள்!
அடி வயிற்றையும்!
தடையில்லாமல்!

Monday, April 14, 2008

"காக்கா பூன் வித்தை காட்டறியா"?

"காக்கா பூன் வித்தை காட்டறியா"? வெகு காலத்திற்கு முன் அம்மா பேச்சில் வெளிப்படும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக, வீட்டிற்குள் விளையாடிய சொற்றொடர்கள். தற்போது முதுமையின் போட்டியில், பயன்பாடு குறைந்த சொல்லாடல்கள்.

"மரமூஞ்சி,சிங்கிளி,போக்கத்தவன்,", "ஒரு ரூபா குடுத்துட்டு ஓயாம அடிப்பான்", வேலைக்காரன் திறமையை வெயிலில் பாரு" போன்ற எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் மற்றும் மரபுச் சொற்கள் பயன்பாடு இல்லாமல் வழக்கழிந்து போய் உள்ளன.

அப்பா, ஓயாமல் சிகரெட் பிடித்த காலத்தில், சார்மினார் பிரியர், காட்டமான புகை.அனைவரின் வற்புறுத்தல் இவற்றிற்கிடையே 'கத்தரிக்கோல் பிராண்டுக்கு மாறியவர். புகைப்புக்கு பின் தூக்கி எறியப்படும் பக்கைகளின் உள்ளே இருக்கும் "காக்கா பூன்" தாள், சல சல என சத்தம் எழுப்பும் 'சிகினா தாள்'

இவ்வாறு, சல சலப்பு செய்யும் செயலைக் குறிக்கும், பயன்பாடாக குறிக்கப்பட்டது. ஆங்கிலேய மொழி பயன்பாட்டில் "காக்கபோனி" ஒத்தது ஆகும் எனலாம்.

Saturday, July 28, 2007

அமைதி

நெடுங்குன்றமென விண்ணுயர்ந்து செம்மாந்து நின்ற மரங்களை பதம் பார்த்து, முரித்து,விளைநிலங்களின் பச்சை மென் பயிர்கள் மீது வன்மம் காட்டி சென்றடங்கியது அமைதியாக, புயல்! வான் மின்னலின் எச்ச சிதறல்களாக வண்ணம் காட்டியது தாரகை விண்ணில்!

ஆனால், தற்போது இயற்கையின் சீற்றம் எப்போதும் நிகழாதது போல், இயல்பான அமைதி, அனைத்து இடங்களிலும் மேலோங்கி நிலவுகிறது!
வைகறைப்பொழுதில் தலைவனும், தலைவியும் நின்றனர் வயல்வெளியின் நடுவில்!!

சூறாவளியின் தாக்கத்தில், காயம்பட்ட இயற்கை எழிலின் நொடிப்பு குறித்து, மனதில் அசைபோட்டு நின்றார்! சில நொடிகள், ஆழ்ந்த இதம் அளிக்கும் அமைதியில்!

படை வீரன் கிழக்கு நோக்கினான்! தன் நெஞ்சிற்கினியாளிடம்," இருளைக்கிழித்து வெளிப்படும் ஞாயிற்றைப்பார்" என்று கூறினான்.

கலில் சிப்ரான்

தமிழ் வடிவம்-முத்துக்கண்ணு