Thursday, March 12, 2009

வாள் இசை

மரணத்தை பரிகசிப்பேன்
எதிர் கொள்வேன்
எம் எதிரியை,

நேயுற்றேன் ஆயினும்
நுடங்கினேன் அல்லன்,
யான் ஒரு போர்வீரன்.

குரலும், எழுதுகோலும்
எமது வாழ்க்கையைப்போல்,
அணுக்கமாக
மக்களுக்காக,
எமது படையணியில்.

போராட்டம்
எமது திசைவழி,
இசைப்பாடல்
எமது உயிர்வளி.

கண்ணீரில் உருகுவேன்,
ஆயினும்,
நீரோடையில் கரையமாட்டேன்.

எமது கரம்
வெட்டப்பட்டாலும்,
எமது கைவாள்
சாயாது.

பாசக் கயிற்றுக்கும்
பயிற்றுவிப்பேன்,
துயரத்துளிகளை
துடைத்திட.

ஆயிரமாயிரம் அழிந்துபடினும்,
அடுத்த வெற்றி
போராட்டம் ஆகும்.

எதிர்கால நம்பிக்கை
உடையர் எவரோ,
அவரே மனிதர்.

இரவின் கொள்ளி
எரிந்து போகும்,
வைகறை வசந்தமாகும்.

(செரபண்ட ராசு கவிதை)

மொழி பெயர்ப்பு

உரிமை

மரங்கள் உயிர்கள் ஆயினும்
அவைகளை மாய்க்காதே,
எனக் கூறிடேன்

இலைகள் இயற்கைக்கு
அழகு சேர்ப்பினும் பறிக்காதே,
எனக் கூறிடேன்

கிளைகள் கைகள் என்றாயினும்
முறிக்காதே,
எனக் கூறிடேன்

தேவை எனக்கு ஒரு குடிசை.

( செரபண்ட ராசு கவிதை
மொழி பெயர்ப்பு)