Thursday, October 30, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 3

மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக கழக அமைப்பின் தோற்றத்திற்கு காராணமான, லோக் தளம், காங்கிரசு(பழையது), சன சங் மற்றும் சமதர்மக் கட்சி ஆகியவை மத்திய சனதா அரசாங்கத்தில் சேர்ந்த காரணத்தினாலும்; மாநில அரசுகளில் பங்கு கொண்டதினாலும்; மேற்கு வங்க இடதுசாரி அரசில் இடம் பெற்றதாலும், அமைப்பு செயல்படாத நிலையிலேயே இருந்தது.

இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சனதாக் கட்சி எதிர்க் கட்சி வரிசையில் இடம் பெற்ற சூழலில், புதிய மத்திய அரசாங்கம் சிவில் உரிமைகளை ஒடுக்கும் என்கின்ற அச்சத்தின் காரணமாக, தார்குண்டே, குல்தீப் நய்யார், ரசனி கோத்தாரி மற்றும் கிருசண காந்த் ஆகியோர், அமைப்பிற்கு புத்துயிர் ஊட்டினர்.

இதற்கிடையில், சிவில் உரிமைக் கழகத்தை இந்திய கம்யூனிசுடு( மார்க்சிசுடு-லெனினிசுடு) கட்சியினர் நடத்தி வந்தனர். இது குறித்து தார்குண்டே அவர்கள் ஒவ்வாமை கொள்ளவில்லை. மாறாக, 1973 மற்றும் 1977ல், அவர்கள் மீது ஆந்திர வெங்கல் ராவ் அரசாங்கம் நிகழ்த்திய அடக்குமுறைகள் பற்றி உண்மை அறியும் ஆய்வுக் குழுவை அமைத்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

என்றாலும், அரசியல் கட்சிகள், புதிய சிவில் உரிமை அமைப்பினை கைப்பற்றிக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை ஒரு விதியாக உருவாக்கினார். அப்போது தான், மக்கள் சிவில் உரிமைக் கழகம் உருவாகியது.

இச்சமயத்தில், புகழ் பெற்ற வழக்குரைஞர் கோவிந்த் முகோத்தி அவர்கள், மக்கள் சனநாயக உரிமைக் கழகம் என்னும் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்.

அன்றோ!

கரை வேட்டித் தமிழன்!
கதர் வேட்டித் தமிழன்!

குல்லா தமிழன்!
துண்டு தமிழன்!

பச்சைத் தமிழன்!
பதாகைத் தமிழன்!

யாவரும் ஓர் நிறை
அன்றோ!

Tuesday, October 28, 2008

உள் வெளி!

கனவிலும்!
நினைவிலும்!
காட்சிகள்!

காலங் காலமாய்
கரைந்திடும்
உள் வெளியில்!


கனத்த இதயத்துடன்!
களித்த தடயத்துடன்!

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி - 2

டேராடூனை விட்டு, தில்லிக்கு சென்ற சமயத்தில், 'மறுமலர்ச்சி நிறுவன அமைப்பு' விழாவில், அவரை நான் சந்தித்தேன். இச் சமயத்தில், ஒரு சிலர் அவரிடம், நான் கட்சி அரசியலில் ஈடுபட்டதாக கூறிய போது, தார்குண்டே அவர்கள் சிரித்துக் கொண்டே, நான் 50% விழுக்காடு அவர்கள் பக்கம் உள்ளதாக கூறினார்.

எங்கள் நட்பு, நெருக்கடி நிலை நாட்டில் நடைமுறையில் இருந்த போது, மேலும் வளர்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் குறித்து, அவரின் உறுதியான அச்சமற்ற நடவடிக்கைகள், சனநாயகவாதிகள் மத்தியில், அவரை ஒரு தலைவராக வெளிப்படுத்தியது.

இக் காலக்கட்டத்தில் தோன்றியதுதான், 'மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக உரிமைக் கழகம்' ஆகும். நாங்கள் ஒன்றுபட்டு உழைத்தோம். கடந்த கால எமது தொடர்புகள் மட்டுமின்றி, செயபிரகாசு நாராயணன் மற்றும் எசு.எம்.சோசி அவர்களுடன் ஆன நெருங்கிய தொடர்பும், எங்கள் பிணைப்பிற்கு காரணமாக அமைந்தது.

Monday, October 27, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்!

சுரேந்திர மோகன் -மொழியாக்கம், பகுதி- 1

நான் டி.ஏ.வி. கல்லூரி மாணவராக இருந்தபோது, 1950ல் எனக்கு தார்குண்டேவைத் தெரியும். எம்.என்.ராய் அவர்களை அடிக்கடி சந்திக்க
அல்லது மனிதநேய அடிப்படைக் கட்சியின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வரும்போது அவரை எனக்குத் தெரியும்.

இக் குழுவின் சிறந்த தலைவர்களில் போராசிரியர்.பரேக் அவர்களும் அடங்குவர்.சமசவாடி இளைஞர் அவையினருடன் சேர்ந்து கம்யூனிசுடுகள் மற்றும் சன சங் காரர்களின் கொள்கைகளை எதிர்த்து பொதுச்சொற்பொழிவு நிகழ்த்த அவர்களை அழைப்பது வழக்கம்.

சமதர்மவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லாத தலைப்புகளான, கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் பெருவது அகியவை இந் நிகழ்ச்சியில் அடங்கும்.

1956, 1957 ஆம் ஆண்டுகளில் முசோரியில் நடந்த கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டபோதும் அவரை சந்தித்து இருக்கிறேன்.பேராசிரியர் பரேக் அவர்களுக்கும், மீரட் பேராசிரியர் ஆர்.எசு.யாதவ் அவர்களுக்கும் இடையில் கட்சி சார்பற்ற அரசியல் குறித்து கடுமையான வாதங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, பேராசிரியர் யாதவ் அவர்கள், மனித நேய அடிப்படைக் கட்சி அமைப்பதில் உறுதியாய் இருந்தார். இது குறித்து, எனக்கும் தார்குண்டே அவர்களுக்கும் இடையில், தீர்க்கப்படாத சிக்கல் , அவர் இறக்கும் வரையிலும் நட்பு முரண் ஆக நீடித்தது.

Sunday, October 26, 2008

தேரோட்டம்!

எங்கிருந்தேன்!

எதற்கிருந்தேன்!

உமக்குத் தெரியாது!


இன்று இருப்பது!

தெரிய வேண்டும்!


நாடாளும் வேளை!

வந்து விட்டது!

நரக வேதனை

தந்து விட்டது!


நாட்டின் நலனே!

எம் வீட்டின்

நலன்!


வீட்டிற்குள் நாட்ட!

நலம் கூட்ட!

நான்!

நாள்தோறும்!

அன்றும்! இன்றும்!

சட்டத்தின் ஆட்சி

அன்று!

சட்டம் தன் கடமையைச்

செய்யும்

இன்று!


Friday, October 24, 2008

என்றாய்!

நிலை குலைந்தாய்!

கலை இழந்தாய்!

காலம் போக்கினாய்!

கவலை கூட்டி!


வாழ்வை சுருக்கினாய்!

வளம் இழந்து!

தாழ்வைப் பெருக்கினாய்!


பண்டைப் பெருமை!

கொண்டு சென்றாய்!

ஆவணம் அனைத்தும் இழந்து!

கோவணம் ஆனாய்!

கேவலம் என்றறிந்தும்!

ஏவல் செய்தாய்!


சார்ந்து நின்று!

சரித்திரம் படைத்தாய்!

சாதனை அடைந்தாய்!

தரித்திரம் புதுக்கி!


அய்க்கியம் சேர் அணி!

சேர்ந்து!

ஆக்கினை கூட்டினாய்!

சொந்த நலம்!

சோர்ந்திடாமல்!

வந்த நலம்!

வாழ் நாள்

என்றாய்!

முதல் மரியாதை!

வேளாண்மைக்கு விடைகொடுத்தோம்!


முதல் மரியாதை!


உணவுப் பயிர்களுக்குசிறிது காலம்!


பணப் பயிர்களுக்குபாதை வகுத்தோம்!


சிறு தொழில்வரவேற்று!


பேட்டைகள் அமைத்தோம்!


தொழிற்பேட்டை!தோதாக!


விளைநிலங்கள் நிலை உயர்த்தி!


நீரின்வழி மறித்து!


பெருந்தொழில்கள்!வரவேற்றம்!


பெட்டிகளுடன்!


கழிவுத்தொட்டிகள்ஆயின!


வாழ்வும்! வளமும்!


நிலத்தடியும்!நீரும்!


காற்றும்!வளர்ச்சிக்காயின!


வாழ்வுக்கில்லை!


நிறுவனங்கள்!


எல்லைக் கடந்து!


விளைவு தேவையில்லை!


நிலம் தேவையில்லை!


தொழிலும் ஆலையும் போதும்!


எழிலும் சோலையும்!


எதற்கு?


நிலக் கடலை வணிகம் போல்!


எண்ணெய் பிழிசெக்குபோல்!


ஆட்டி அசைத்து!


சக்கையும் பிழியும்!சாகசம்!


செக்கும் தோற்கும்!


பணக் குவிப்பு!


வளர்ச்சி!

Wednesday, October 22, 2008

உணர்வுகள்!

'நினைக்க மறக்காதே'!

'மறக்க நினைக்காதே'!

'தானி' கவிதை!

ஏக்கம் !

எதிர்பார்ப்பு!

தோல்வி ! வெற்றி!

காதல் ! கடமை!

உரிமை! அருமை!

உணர்வுகள்!

களம் இறங்கும்!

தளம் அமைக்கும்!

கருத்து தூளி!

கவிதைக்கேணி!

Friday, October 17, 2008

எங்கே!

மரம் எங்கே!
மனிதர் இங்கே!

குளம் எங்கே!
குழாய் இங்கே!

ஏரி எங்கே!
நிறுத்தம்
இங்கே!

மண் எங்கே!
வண்டிகள்
இங்கே!

ஆறு எங்கே!
'லாரிகள்'
இங்கே!

கழனி எங்கே!
கட்டிடம் இங்கே!

நீர் எங்கே!
கடல் இங்கே!

வானம் எங்கே!
வாழ்க்கை எங்கே!

பட்டிப்பூ

சாவுக்கா பூத்தோம்!
எம்மை எப்படி!
அப்படி அழைப்பீர்!

கடற்கரை சாலைகளில்!
சன்னியாசித் தோப்பில்!
பாப்பம்மா இடுகாட்டில்!

வெண்மை நிறத்தில்!
வெளிர்,
முளரி நிறத்தில்!
அலை, அலையாக!

அது சாவுப் பூ!
பறிக்காதே!
என்பார்

கல்லறை
வாணரப் பேட்டையில்!
காட்சிப் பொருளாக!
எட்டிப் போய்!

எம்மை !
தொட்டியில் கூட
வைக்கவில்லை!

வாழ வைக்கும்
எம்மை!
விலக்கி வைத்தீர்!

எசமானுக்கு புரிகிறது!
'வேப்பிலையை
தம் மாப்பிள்ளை'
என்றவர்!

இரத்தப் புற்றுக்கு
எம்மிடம் !
சாரம் இருக்கிறது
என்று!

Thursday, October 16, 2008

உழைப்பு!

இரவில் உழைப்பு!
பகலில் ஓய்வு!
இன்னொரு உலகம்!
இருண்ட உலகம்!

முழங்குவாய்!

தனித் தனியே
அணி அமைத்து
தவிக்காதே
தமிழா!

தரணி சுட்டும்!
அவலத்தைக் கொட்டி
குவிக்காதே!
தமிழா!

'ஒன்றே செய்'
'இன்றே செய்'

உன் பகை!
உள் பகை!

உணர்ந்த
செய்கை!
ஒழிப்பாய்!

இன மானம் காக்க
ஒன்றிணைவாய்!

உன் சுகம்,
போகம் மறந்து!

உன் தோழன்
உரிமைக்கு!

ஒரே குரலாய்
முழங்குவாய்!

ஓராயிரம் ஆண்டுகள் !
இழிவைத்
துடைப்பாய்!

முறையா?

'அண்டை வீட்டுச் சிக்கல்!
நுழைவது மீறல்!

உந்தன் உறவு
அடுத்த வீட்டில்!

அடி, உதை உண்டு
அடி மாட்டு
நிலையில்!

உடமை இழந்து!
உரிமை இழந்து!
உருக்குலைந்து !

ஊசலாடி,
ஓய்ந்தும், ஓயாத!
ஓலக்குரல்!

உம் செவிகளில்
விழவில்லையா!

அடுத்த வீட்டுக்கு
அறியாமல் உதவினாயே!
தெரியாமல் அளித்தாயே!
உறவுக்கு எதிராக!

அனைத்தும்
தெரிந்த பின்!

ஆட்டத்தை மாற்று!
தோற்றத்தைக் கூட்டு!

வணிகம் செய்வதற்கும்
நியாயம் உண்டு!

உறவுக்கு பகையாக
வணிகம்!
அறம் ஆகுமா!
'அசோகன்'
செய்திருப்பானா?

உம் அணுகுமுறை!
அடுத்தவர்
திருப்பிச் செய்தால்!

உலக அறமன்றம் வரை!
உம் குரல்
ஓங்கி ஒலித்திருக்காதா?


பெரும்பான்மை
ஒடுக்கு முறைக்கு!
அழிப்பு முறைக்கு!
கருவிகள் அளிப்பது!

உலக முறையா?
உணர்வு சரியா?

Wednesday, October 15, 2008

பாதை

பாரதி புதுவை வந்து!
நூறாண்டு!
பெருமை எமக்கு!

வந்தான்! வாழ்ந்தான்!
ஊரில்!
விழா!

வல்லாண்மை கொடுமை!
வல்லூறுகளை!
வாழ்விலும்! தாழ்விலும்!
விழிப்பிலும்! உறக்கத்திலும்!
விசையுடன் எதிர்த்தவன்!

தமிழன் நிலை!
தரணியில் உயர்த்திட!
விடுதலை முழக்கி!

பறையருக்கும்!புலையருக்கும்!
ஆனந்த சுதந்திரம்!
அறிவிப்பு செய்தான்!
ஆண்டவனைத் தேடிஅலையும்
அறிவிலிகாள்!
என்றான்!

தேமதுரத் தமிழ்!
உலகெலாம்!
பரவும்வகை செய்தல்!

சேமமுற!
தெருவல்லாம்!
தமிழ் முழக்கம்!
வாள்வலியும்!
தோள்வலியும்!
போச்சே!
என்றான்!

கானல் நீராக்கிய
கண்ணிய மைந்தர்!
புண்ணிய புதுவையினர்!

இன்னும்
பல நூறாண்டுகள்!
கொண்டாட வேண்டும்!
சாங்கியம் எமக்கு!

தேங்காய்க்குள்!

தீபமாம்! தீபமாம்!
தெருவெங்கும்
தீபமாம்!

தேங்காய்க்குள்!
நெய் விளக்கு!
நேர்த்திக் கடன்
தீபமாம்!

பரிகார தீபமாம்!
ஆம்பிள்ளைக்காக
தீபமாம்!
அணிவகுத்த
தீபமாம்!

காணிக்கை தீபமாம்!
காரணம் கூறும்
தீபமாம்!
ஏரணம் களைந்திடும்
தீபமாம்!

ஏன் என்றிடா
தீபமாம்!
கூன் உணர்வு
நீக்கிடா
தீபமாம்!

கும்பல் சேர்த்திடும்
தீபமாம்!
தேங்காய் மூடி
தீபமாம்!
மாங்காய் அறிவு
தீபமாம்!

Tuesday, October 14, 2008

கிருமாம்பாக்கம்!

கிருவிகள் !
கருவிகளுடன் !
களம் இறங்கி !
பாத்திகள் கட்டி!
பள்ளாங்குழி ஆடி!

நீர் ஆதார
ஊருணி!
ஊரின் அச்சாணி!
கழட்டினார்!
இரால் பண்ணை!
ஏரி மறித்து!

என்றும் போல்!
இன்றும்!
எமது அரசு!
கிருமமாய்!

எமக்காக!

சம்பங்குட்டை கதை
முடிப்பு !
அருகன் நகரில் !


மனை வணிகம்
மீறல் !
அரசு நிலம் !
புறத்தில்
வெளி !


மழை நீர் வாங்கி!
ஆற்றில் செலுத்தும்!
ஆராவரமின்றி!
ஆண்டாண்டு ஆட்சி!
இயற்கையின் மாட்சி!


விட்டு வைக்க மாட்டோம்!
பாதை அமைத்து1
பாலம் அமைத்து!
மண்ணைக் கொட்டி
தூர்த்து விடுவோம்!


ஆட்டைக் கடித்து!
மாட்டைக் கடித்து
அரசு நிலம் !
பொதுப் பயன்!
இயற்கை ஏற்பாடு!
எமக்காக!

Sunday, October 12, 2008

சாட்டைகள்!

பாரம் சுமக்கும்!
பாதை கடக்கும்!
வழி நடத்தும்!
உம்மையும் சேர்த்து!

உருளும் கால்களில்
லாடம் தாங்கி!
கண்களில் சோகம்
ஏங்கி!

கழு நீரும்
காலையில் இன்றி!
வழி நெடுக
வெந்து! வீங்கி!

இழுக்கும் மாடுகளையே!
இம்சிக்கும்
சாட்டைகள்!
கொழுக்கும் மாடுகளிடம்!
கொஞ்சும்!

மாற்றம் சேர்த்திட!

எல்லாம் இன்பமயம்
அப்போ!

எல்லாம் உலகமயம்
இப்போ!

உறவும் வணிகம்!
கரவும் தரவும்!
கை கோர்த்து!

காலம் தோற்கும்!

தடையேதும் இல்லை!
தாராள வாதம்!

எல்லை கடந்து!
தொல்லை!

தொகை! தொகையாக!
துளிர்த்திடும் நம்பிக்கை!

துயரம் விரட்டிட!
தூளிகளை விட்டிறங்கி!

ஆளிகள் போல்!
உறுதியுடன்!

ஆற்றல் திரட்டுவோம்!
மாற்றம் சேர்த்திட!

சாதிப்போம்!

பாலில்லை !
மாடு இல்லை!

மாடு பிடிப்போம்!
மாநிலம் சென்று !

சந்தைகள் கண்டு!
மந்தைகள் வென்று!

பால் அளிப்போம்!

தீவனம் உங்கள்
பாடு!

புல் வளர்ப்போம்!
விற்போம்!
மேய்ச்சல் நிலம்?

சாடிக்குள் புல்!
விதைப்போம்!

வீட்டிற்குள்!
தோட்டம்!

வீதிக்குள்
மரம்!

மான்யம் அளிப்போம்!


அவரை! வெண்டை!
மொச்சை! கீரை!
நெற்பயிர்!
கரும்பும்! கேழ்வரகும்!
நொடியில்!
மொட்டை மாடியில்!

மாடும் அங்கே
கட்டிக்கொள்!
தீவனம் அங்கே
ஒட்டிக்கொள்!

பால் உற்பத்தி
பன் மடங்கு
பெருகும்!
குறைந்தால்
கவலை இல்லை!

குழாய் நீர்!
கவலை தீர்க்கும்!

கிராமங்கள்
வழி காட்டுகின்றன !
குருமாம்பேட்டைக்கு
கூடுதல் இல்லை!
தேடுதல் வேலை!

தேடிவரும்!
வீடு நாடி!

விழா எடுப்போம்!
மன்யம் அளித்து!
மாநிலம் முழுவதும்
மகளிர் சேர்த்து!

நாள் உற்பத்தி!
நாளும் தாண்டும்!
விடமாட்டோம்!

குடிக்காத பிள்ளைகள்!
மூக்கைப் பிடித்து!
ஊற்றுவோம்!
ஊட்டம் ஓங்க!

ஊதிப் பெருக்க!
சாதிப்போம்!

மாணவர்கள்!
பட்டினி கிடக்கத்
தேவையில்லை!

கண் திறக்க
வேண்டும்!
கவலை மறக்க
வேண்டும்!

தருக!

எல்லார்க்கும் பெய்யும் மழை!
அன்று!
எல்லார்க்கும் சேர்க்கும் 'சுனாமி'
இன்று!

இன்னொரு 'சுனாமி'
வருக!
இனாம் அனைவருக்கும்
தருக!

Saturday, October 4, 2008

புரியும்!

உள்ளிருந்து
கேட்டேன்!
வெளியே
உணர்ந்தேன்!

வெளியிருந்த
முரண்
சரியென்றது!

சரிந்தது!

அகன்று
நோக்கின்!

அளவு,
தன்மை,
ஆழம் புரியும்!

வெறி!

ஒரிசாவை மையம்
கொண்ட வெறி!
எங்களூரில்!
பெங்களூரில்!

கூறுகிறார்!
மதமாற்றம்
எதிர்த்து!

பரவுகிறது தீ!
பெரும்பான்மை
உணர்வு!

விரும்பிய மார்க்கம்!
எம் உரிமை!
திரும்பிய நோக்கம்!
உம் வறுமை!

சமணம், புத்தம்,
பார்சி, இசுலாம்,
பழங்குடி மார்க்கம்!

அனைத்தும்,
அரசியல் சட்டம்!
எமக்களித்துள்ள
உரிமை!

உம்மை நான்
இழுக்கவில்லை!
எம்மையும் நீ
இழுக்காதே!

ஏற்காத
இந்துத்துவா!
ஒழியாத வர்ணம்!
அழியாத சாதியம்!

பழியாக
நாம் கூற
ஏற்குமா ?
பெரும்பான்மை!

உணவில்லை!
தண்ணீர் இல்லை!
உழைப்பும் உரிமை
இல்லை!

நிலம் இல்லை!
களம் இல்லை!
நிழலுக்கும்
பொசுப்பில்லை!


நம்பிக்கை அளிக்கும்
மார்க்கம்!
எம் விருப்பம்!
உரிமை!

உணர்வுடன்
இணைந்தோம்!
உருக்குலைக்க
நீ யார்?