Saturday, May 31, 2008

சந்தர்ப்ப வாதம்!

சூழ்ந்திடும்
மரியாதை
இழந்து!
இளித்து!
ஏற்றம்!


எத்தரப்பும்!
எச்சூழலிலும்
நிலவும் !
'சுப்ரபாதம்'

எமக்கு !

வருமானம்!

மொழி மானம்!
இன மானம்!

அடுத்து!
இவையாவும்!

Friday, May 30, 2008

கொள்ளை!

ஆற்று மணல் கொள்ளை!
சேற்று மணல் கொள்ளை!
செம்புலம் செதுக்கி!
நம் புலமா!
ஐயுறவு கொள்ளும்
நிலை!

ஆழம் அகலம்
ஆற்றின் பரப்பை
ஒக்கும்!

இயற்கை மீது
ஆதிக்கம்!
இடைவிடாது
கொள்ளை!

தடை இன்றி
வியாபாரம்!
தண்ணீர் மட்டம்
கீழிறங்கும்!

ஆட்சியர்
எவரும் அலட்சியம்!
காட்சியர் கோலம்!
காலம் போக்கும்!

'பஞ்ச சீலம் '

திபெத்தில் மீறல்!
மீண்டும்!
மாய்த்தனர்!

புத்த பிக்குகள்!
சுய ஆட்சி கோரி
இழந்தனர்!
இன்னுயிரை!

மண்ணுயிர்
மகிமை!
உலக அரங்கில்!

இங்கிருப்போர்
'இச்',' இச்'
அனுதாபம்!
அக்கறை!

குரல் வளை
நெரிக்கும் கொள்கை!
இன வெறி!
காலடியில்!
கவலை இல்லை!

தலைக்கு மேல்!
முரிப்பு தெரிகிறது!

Thursday, May 29, 2008

நீ ஏன்?

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்
அப்போது!
பறித்துக்கொண்டான்
அப்போது!
செரித்துக் கொண்டாய்!

போட்டான் அவிழ்த்தான்!
மீண்டும் அழைப்பு!
அந்திமக் காலத்தில்!
அங்கீகாரம் கோரி!
அகங்காரம் அகன்ற
நிலை!

ஏற்றுக் கொண்டாய்!
கழற்றியதை
இறக்கினார்!
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!
ஏக்கத்துடன்!

தேம்புகிறாய்! புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப் போல்!

அவளே அழவில்லை!
நீ ஏன்?

அவளே கலங்கவில்லை!
நீ ஏன்?

அவளே விழையவில்லை!
நீ ஏன்?

அவளே விழித்திருக்கவில்லை!
நீ ஏன்?

அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்?

அவளே இயல்பாய்!
நீ ஏன்?

Tuesday, May 27, 2008

பரிதாபம் பழங்குடி!

போராடும் குச்சார்
உரிமை கோரி!
மீண்டும் உயிர் கொடுக்கிறார்!
துப்பாக்கி குண்டுகளுக்கு
இரையாகி!
துணிவை மட்டும் முன் நிறுத்தி!

காவி அரசியல்
களம் இறங்கி!
படை பலத்துடன்
பழங்குடி இன உரிமை மறுத்து!
பலி கொள்கிறது!
பதவி சுகத்திற்காக!

வாக்குறுதியைக் காப்பாற்றாத
வாக்கு வங்கி அரசியலில்!
அடுத்த கட்ட அரசியலுக்கு
அணி வகுத்து!
தில்லியில் ஆலோசனை!
இராணுவத்தை வரவழைக்க!
சுற்றி வளைக்க!

சொன்னதைச் செய்யாதவர்!
குட்டை அரசியலில்
ஊறும் மட்டை அரசியல்!

குச்சார் இன மக்களுக்கு
மீண்டும் மொட்டை!
அடுத்த தேர்தலைக்
காட்டி!

ஒதுக்கீடு ஒதுக்கி வைப்பு!
பதுங்கி கூட்டம்!
பற்றி எரியும் பிரச்சனை!
பரிதாபம் பழங்குடி!
இராசசுத்தானில்!

Saturday, May 24, 2008

"அமைதிப் பூங்கா"

எவர் இல்லை
என்பது!
நாளுக்கு ரெண்டு
கொலை!

நடுத்தெருவில்!
கடைத்தெருவில்!
அச்சம்!

போவோர் வருவோர்
யாரும் இல்லை!
போக்கு வரத்தும்!
காவல் துறையும்!

அதிகாரம் யாரிடம்?

கற்பழித்தான் !
கொலை செய்தான்!
காவல்துறை!
நீதி மன்றம்!
வழக்கு!
விசாரணை!
வாதம் !
எதிர்வாதம்!
தீர்ப்பு
ஆயுள் தண்டனை!
சிறை !
நீதி வென்றது!
சிறைக்குள்!
கழுத்தறுப்பு!
கருவறுப்பு!
நீதி மன்றத்தையும்
தாண்டி!

சீர் அழித்து வருகின்றனர்.....

ஏரிகளில் தண்ணீர் குடி நீர் பயன்பாட்டுக்கு". உலக நீர் நாளில் உரை. செய்தித் தாள்களில் வண்ணப் படத்துடன் செய்தி, சென்ற ஆண்டு மார்ச் 21ல்.

"ஊசுட்டேரியில் மீன் பிடிக்க ஏலம், கோர்க்காடு ஏரியில் மீன் பிடிக்க ஏலம்", "கிருமாம்பாக்கம் ஏரியில் இறால் வளர்ப்பு, தனியார் முயற்சி". இதுவும் செய்தி. ஊடகங்களில் வலம்.

புதுச்சேரி இயற்கை சூழல், மழை நீரை மட்டுமே நம்பி வாழக்கூடிய அடிப்படை, வடகிழக்கு பருவமழை; தென் மேற்கு பருவமழை; இவை இரண்டுமே நீர் ஆதாரம். தமிழ் நாட்டில் ஓடும் பெண்ணை ஆறு, செஞ்சி ஆறு ஆகியவை நீர் பிடிப்பு பகுதிகளாக, புதுவையில் அமைந்துள்ள ஏரிகளுக்கு, காலங் காலமாக ஊட்டம் அளித்து வருகிறது.

பருவ மழை என்பது நிச்சயமற்றத் தன்மை உடையது. மேல் தண்ணீரைத் தரும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், மக்களுக்கு வேளாண்மைக்கும், குடி நீருக்கும் வாழ்வளித்து வருகிறது.

எனினும் அரசாங்கம், 1968- 69ல் வறட்சி ஏற்பட்டு, புதுவை மக்கள் அல்லல் பட்டதை மறந்து விட்டதாக தெரிகிறது, 1972ல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் புதுவையில் பெருகி வரும் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஆழ் குழாய் கிணறுகளை அமைத்தது.

அதிக அளவில் நீர் தேவை பெருகியதற்கு ஏற்ப, நீர் மேலாண்மைத் திட்டங்கள் இதய பூர்வ முயற்சியாக, நடவடிக்கையாக, புதுவை அரசு மேற் கொள்ள வில்லை. மாறாக, நீர் அதிக அளவில் உறிஞ்சும், நீர்த் தேவை அதிகம் உள்ள தொழிற்சாலகள், எடுத்துக்காட்டாக, காகித தொழிற்சாலைகள்; அல்கலித் தொழிற்சாலைகள்; குளேரைட் தொழிற்சாலைகள்; வேதியற் தொழிற்சாலைகள் ஆகியவைகள் நல்ல விளை நிலங்களுக்கு அருகில்; ஆற்றங்கரைகளில்; செம்மண் நீர் பிடுப்பு பகுதிகளில்; கடற்கரைக்கு அருகில் அமைத்து ,அதன் கழிவுகளை அரவமின்றி கடலிலும் , ஆற்றிலும், நிலத்தடி நீரிலும், தொடர்ச்சியாக விட்டு, புதுவையின் நீர் ஆதாரத்தை பெரிதும் சீர் அழித்து வருகின்றனர்.

Saturday, May 17, 2008

தேடி!

வெப்பமிகு சூழல்!
வேக வைக்கும்
அறை!

வெறுப்புக்கு வேள்வி!
வேறேதும்
எழவில்லை!
கேள்வி
ஒன்றைத் தவிர!

உன்னை மட்டும்
உணர்ந்தேன்!
ஒன்றிற்காக!

ஓயாத இரைச்சல்!
மன வெளியில்!

ஓராயிரம் இரவுகள்!
பகல் பொழுதைத் தாண்டி!
சாயாத பொழுது

சாங்கியம் தேடி!

இருத்தலியல்!

அடைமொழி அரசியல்!
வெறுப்பு!

நடைமொழி
அதன் வழி!

நான்!
என்ன செய்ய!

'இரு வேறு'
உலகம்!

திருத்தம்!

முத்துக் குளித்தேன்!
எடுத்தேன்!
பித்துக்குளி ஆனதேன்!
பின் பாதி!
உணர்ந்தேன்!
பிழை திருத்தம்!
பெரும்பாடானதே!

Thursday, May 8, 2008

ஆழமானது!

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது!
செர்மன் இணைந்தது!
உத்தபுரம் தடுப்பு சுவர்
இடிக்கப்பட்டது!
பிரிவினை ஆழமானது!

சுவர்களை விட
மனத் திரைகள்!
வள்ளலார் நீக்கச் சொன்னது!
அழுக்கேறியுள்ளது!

மனச் சிறைகளிலிருந்து
விடுபடுவோம்!
சிறார்களையாவது
காப்போம்!

சாதியத் தீயை
சந்ததிகளுக்கு
இனிமேலும்!
உரிமையாய் அளிக்கமாட்டோம்!
தமிழன் எனும் அடையாளம்
உறுதி செய்வோம்!