Showing posts with label மனித உரிமை. Show all posts
Showing posts with label மனித உரிமை. Show all posts

Saturday, January 26, 2019

மன நோயாளிகள்-மனித உரிமை

ஐ.நா. மன்றத்தின், உலக நல அமைப்பு, இந்தியவில் உள்ள மன நோயாளிகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் சில.உச்ச நீதி மன்றத்தின் வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் மன நல பாதிப்பு உடையவர்கள் இந்தியாவில் அதிகம் என்கிறது.தேசிய மன நல கணக்கெடுப்பு- 2016 புள்ளி விவரம்.
 மக்கள் தொகையில் ஏறக்குறைய 14% விழுக்காட்டினர் ஆக்கபூர்வ மனநல மருத்துவம் தேவைப் படுபவர்களாக உள்ளனர் என்கிறது. மேலும், 2% விழுக்காட்டினர் தீவிரமான பாதிப்பில் உள்ளனர் என்கிற தரவும் அளிக்கிறது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் மனநல மருத்துவச் சட்டம் 2017ன் படி, மாநில மனநல அதிகார அமைப்பு மற்றும் மனநல மீள்பார்வை வாரியம் அமைத்திடாமல் உள்ளன என்கின்ற செய்தியும், மனநல காப்பங்கள் குறித்த ஒரு வழக்கில்- உத்தரபிரதேச பதயூம் மாவட்டத்தில் உள்ள மனநோயாளிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கொடுமை சம்பந்தமாகவும் உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு சுட்டிகாட்டப்பட்டது.

சங்கிலியால் கட்டி வைப்பது மனித உரிமை மீறிய செயலாகும், மனித கண்ணியத்திற்கு எதிரான நடவடிக்கையாகும் எனவும், கெளரவ் பன்சால் என்கின்ற வழக்கறிஞர்  மனநல நோயாளிகள் பிரச்னை தொடர்பாக  உச்சநீதி மன்றத்தில்தொடர்ந்த பொதுநல வழக்கில், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மாண்பமை. ஏ.கே.சிக்ரி, மற்றும் எஸ். அப்துல் நாசீர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Friday, April 6, 2018

"தீங்கான"/"ஆபத்தான மருந்துகள்"

"டைம்சு ஆப் இந்தியா", 6,ஏப்ரல் செய்தி--" ஒழுங்கமைப்பு அங்கீகாரம் இன்றி விற்பனையாகும் மருந்துகள் ஆபத்தானவை".

மத்திய அரசு நலவழித்துறை கவனத்திற்கு வந்துள்ள அதிர்ச்சி அளிக்கும் செய்தி/ சூழல், உள்ளூர் மருந்து நிறுவனங்கள், "தீங்கான" மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகின்றன.

தயாரிக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளாதும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடம் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகின்றன.

நிலைமையை மேலும் மோசமாக்கும் அம்சம் இவ்வாறான மருந்துகள் உலக அளவில் அங்கீகாரம் பெறாதது; இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது; நோயாளிகளை இடரில் தள்ளுகிறது.

ஏப்ரல், 3 ந்தேதி, மத்திய மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாட்டு நிறுவனம் , டாமன், இந்தூர், பெங்களூர் மற்றும் மும்பாய் போன்ற பகுதிகளில் நடத்திய சோதனைகளில் பெரிய அளவில் அறியப்படாத மருந்து உற்பத்தியாளர்கள்-- ஓலிவ் எல்த் கேர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர தீர்மானித்துள்ளது.

அல்கெம், இன்டாஸ் பர்மா, கோயி பர்மாச்சுட்டிக்கல்ஸ், மேக்லியோட்ஸ் பர்மா, பர்மானோவா ஸ்பெசாலிட்டி மற்றும் அக்குமென்டிஸ் எல்த் கேர், ஆகிய நிறுவனங்கள், 'சந்தையிலிருந்து,' தமது மருந்துகளை  திருப்பி பெறவேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலிருந்தே அனுமதியின்றி கீழ்க்காணும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

*என்கிலோமைபின் கேப்சுயுல்(டெஸ்டோஸ்டெரொன் பற்றாக்குறை) உலகில் எந்நாட்டிலும் அங்கீகரிக்கப்படாதது.
*யுலிபிரிஸ்டல் அஸிடேட் கேப்சுயுல் (மகளிர் கர்ப்பப் பை கட்டி மருத்துவத்திற்கு )
*செட்டிலிஸ்டேட் கேப்சுயுல்(கொழுப்பு கரைக்கும்/உடல் பருமன் குறைக்கும் மருத்துவம்)
*டைனோஜெஸ்ட் கேப்சுயுல்( கருத்தடை மருந்து/ கர்ப்ப வலி குறைப்பு)
*மினொடுரோனிக் ஆசிட் சாப்ட் ஜெலட்டின்(எலும்பு முறிவு-ஒஸ்டியோபோரொசிஸ்)

மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டப் பிரிவுகளின், ஓட்டையை பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நன்கு பயன்படுத்துகின்றன.மருந்து விற்பனையாளர்/சந்தைப்படுத்துபவருக்கு சிக்கல் இல்லை.தயாரிப்பாளருக்கே இச்சட்டத்தின் கீழ் பொறுப்பு சுமத்தப்படுகிறது.மாநில அரசுகள் மருந்து உற்பத்தி அனுமதி வழங்கிட அதிகாரம் இல்லை.மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பின் இசைவு பெற்றே தயாரிப்பில் ஈடுபடவேண்டும்.

சிக்கிம், டாமன், உத்தரகாண்ட் மற்றும் அசாம் மாநிலங்கள் மருந்து தயாரிப்பு உரிமங்களை, மத்திய அமைப்பின் ஒப்புதல் இன்றி வழங்கி வந்துள்ளது, தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Sunday, March 18, 2018

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது" "கெளரி லங்கேஷ்"

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது"
"கெளரி லங்கேஷ்"

கறுப்புக் கருத்தின் வெறுப்புத் தீயில் வீழ்ந்தாய்!
துமிக்கியே அஞ்சும் துணிவுக் கருத்தின் துடிப்பு நீ!
நடிப்பு ஊடகரிடை எதிர் துடுப்பு போட்டாய்!
எது வரினும் ஏற்பேன் என்றாய்!

நக்கியே வாழும் மனிதரிடை, எக்கியே நடை பயின்றாய்!
ஏக்குழுத்து மிடுக்காய்!
நாவின் வலிமை நாள்தோறும் பறைசாற்றி,
நாச வெறியரின் நா வன்மை உடைத்தாய்!

கருத்துரிமை,சகிப்பு, சரிநிகர் உணர்வூட்டி,
சந்ததி ஒருங்கிணைத்தாய்!
தந்தை வழியில் சமரசம் துறந்து,
சனாதன சங்கிலி அறுத்தாய்!

அச்சுறுத்தல், அலறல், எச்சரிக்கை
அலட்சியம் செய்தாய்!
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி அணியில்
இலட்சியப் பயணம் கூட்டினாய்!

ஒற்றைப் பரிமாண அரசியல் இருப்பை,
ஓங்கி நொறுக்கினாய்!
கருத்தாயுதம் தரித்தாய்!

தோட்டாக்கள் தோற்கும்,
இழிவின் இருள் கிழித்த உம் சிந்தனைகள்!
ஊர் எட்டும் உலகு எட்டும்!
ஓயாது உம் பயணம்!

("புதிய உறவு", சிற்றிதழ், புதுச்சேரியில் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை, தற்போது பதிவேற்றம் காண்கிறது)

Thursday, March 15, 2018

புறக்கணிப்பு

இன்று, உலக நுகர்வோர் நாள்(15.03.2018). புதுச்சேரி அரசு மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவை அமைத்திடாமல், 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்து, நுகர்வோர் நலனில் அக்கறையற்று வாளாவிருக்கிறது.


இச்செயலை கண்டிக்கும் வகையில், புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், புதுச்சேரி, தலைமை அஞ்சலகம் முன்பாக, உலக நுகர்வோர் நாள் புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம், காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்வில், பல்வேறு பொதுநல அமைப்புத் தலைவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

Saturday, March 10, 2018

தலை கீழ் மாற்றம்!

வழக்கம் போல் முழக்கம்
இல்லை செயலில் முடுக்கம்,

இளகவில்லை
மன இறுக்கம்.

பகட்டுக்கான பேச்சாக
பதவிக்கான மூச்சாக,
இவ்வாண்டும் நீளும்,

உலக உழைக்கும் மகளிர் தினம்!

குடும்பத்தில் இல்லை உரிமை!
இல்லத்தில் இல்லை காப்பு!
பள்ளியில் இல்லை சமம்!
பாதகம் செய்யும் பல்கலை!

பணி இடம் சனி இடம்
வெளிச்சம் இழந்த சமூகம்.

வெட்டிச் சாய்க்கும் கோரம்!


ஆணாதிக்க தேசம்
அக்கிரம  நோய் என்று ஓயும்!


ஆட்சியாளர் அடையாள
நிவாரணம்!

அடங்கிடும் அதுவும் சில காலம்!
வேண்டுவது தலை கீழ் மாற்றம்!


,

Friday, March 9, 2018

விந்தையே!

ஊடகச் செய்தி
ஒவ்வொரு நாளும்:

"யானை அட்டகாசம்"
"பயிர்கள் நாசம்"
"கரடி பயங்கரம்"

"கதறிய மக்கள்'
"சிறுத்தை நடமாட்டம்"

"தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பதட்டம்"
"கூண்டு வைத்து பிடித்தனர்"
"மயக்க ஊசி செலுத்தினர்"
"வெடி வைத்து விரட்டினர்"

"அடித்தே கொன்றனர்"
"பால் கொடுக்கும் யானை"

"மதகடியில் ரயில் மோதி மரணம்"
"ஓசூரில் பேருந்து மோதி
பலத்த காயம்"

"15 தினங்களுக்குள் 5 யானைகள் பரிதாப மரணம்"

மனித உரிமை உரத்த பேசும்
ஓயாத குரல்கள்
விலங்கு உரிமை விலக்கி
வைப்பது விந்தையே!

சிந்தையெல்லாம்
தம்மைப் பற்றியே,
சுழலும் மனிதம்.

சூழல் உரிமை
உண்மைப் பேண
மறந்திடும்!

Saturday, March 3, 2018

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பில் குறைவில்லா கவனம் தேவை!
குழந்தை பிறக்கும் போது காணும் உற்சாகம், பொங்கிடும் அன்பு, மாதங்கள் செல்லச் செல்ல, ஆண்டுகள் தொட, மங்கிடும் மகிழ்ச்சி, மாறுதலில் தளர்ச்சி.

பெற்றோர் முதல் பொறுப்பாளராக கவனம் செலுத்த வேண்டிய காலத்தில்,திட்டமிடாது ஏனோ, தானோ என்று குழந்தையை பராமரிப்பது தற்போதைய காலக் கட்டத்தில் அதிகமா, பரவலாக காணக்கிடக்கிறது.

படித்தவர்கள் மத்தியில் பல அடுக்குத் தடுமாற்றம்.

குழந்தையை காலைக் கடன் கழிக்க வைப்பது, குளிப்பாட்டுவது, பல்துலக்குவது  ,நல்ல ஆடை அணிவிப்பது, பக்குவமான உணவு வகைகளை, சத்தான வகைகளை, அறு சுவையும் படிப்படியாக பழக்குவது, கனிவாக உரையாடுவது, பெரியவர்களை மதிப்பது போன்ற நல்ல பழக்க, வழக்கங்களை விதைத்திடும் பருவம் ஆகும்.

 இந்த அணுகுமுறையில் பெரிய இடைவெளி தற்போது நிலவுகிறது. பெரியவர்கள் வாழ்க்கைச் சூழல், பதட்டம், கொந்தளிப்புடன், பிள்ளைகள் உளவியலை, உலகத்தை மறுத்து, மறந்து, உணர்ச்சியுடன் ஓடுவது, சாடுவது, இன்று பெரும்பாலும் நாம் காணக் கூடியதாக, பரவலாக இருக்கிறது.

செல்லிடைப்பேசி, தொலைக்காட்சி போன்ற ஊடக சாதனங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்திடும் அவலம் போதாது என்று, குழந்தையை சாப்பிட வைத்திட, தூங்க வைத்திட, ஏன்? அவர்களை சமாளித்திட வலிமையில்லாமல், வகை தெரியாமல் அவ் வளையத்திற்குள் தள்ளுவது பரிதாபமான குடும்ப அன்றாட நிகழ்வாக பல தருணங்களில் அமைகிறது.

விவரம் அறிந்த பெரியவர்கள் சுட்டிக்காட்டி, ஒழுங்கியக்க முனையும்போது எதிர்கொள்ளும் எதிர்வினை, நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

குழந்தைக்கு கதை சொல்ல, பாட்டுப்பாட, அவர்களுடன் ஓடி விளையாட அவகாசம் எடுக்காது, நேரம் ஒதுக்காது, பொழுதை கழிக்கும் தந்தை, தாய் அவரவர் தன் விருப்ப போக்கில் தமது வேலையைப்  பார்த்திடும் ஒரு மோசமான சமூகம்.

இது குறித்து அக்கறை கொள்ளாத அரசாங்கம் மனிதவள மேம்பாடு, குழந்தைகள் நல மேம்பாடு, என பலப் பட்டியல் துறைகள், முழக்கங்களுடன் சாதனை வெளியிடும் சந்தடியுடன் சதா கால்மும். சமூக பொறுபுணர்ச்சி, அக்கறை இழந்து, முதல் பள்ளியான குடும்பமே இக்கோளாறில் தொடங்குகிறது என்றால், பள்ளிகள் குறித்து கேட்கவே வேண்டாம்.

அனைத்தும் சர்வதேச உயரத்தில், தகுதியில், விளம்பர பதாகை விரித்து தனியார் முயற்சி, தம்பிடி பிடுங்கிடும் தாளாளர் கூட்டம். குழந்தைகள் உளவியலை சிறுகச் சிறுக சீரழிக்கும் கல்வி வணிகத் தொழிலேற்புகள்.உடைந்த குடும்பம், போன்ற சிக்கலான சூழலில் பள்ளிக்கு வரும் குழந்தைகள். பள்ளிகளின் வகுப்பறைகள் தொகுப்பு வீடுகளாக, மாட்டுத்தொழுவங்களாக அடைத்து வைக்கப்படும் அவலம் அனைவரும் அறிவர்.

குளிரூட்டப்பட்ட வகுப்பறை விளம்பரம் விடுதியை நினவுபடுத்தும்.பள்ளி வளாகத்திற்குள் விளையாட்டுச் சாதனங்கள், ஏற்பாடுகள் அடையாளமாக, பெயரளவிற்கு மட்டுமே பெருமைச் சேர்க்கின்றன.

பயிற்சி பெறாத, திறன் போதாத ஆசிரியர்கள் சொற்ப சம்பளத்தில், ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை சில மணி நேர வைத்திருப்பிற்கு பின், திருப்பி அளித்திடும் பண்டக பெட்டக காப்பீட்டு திட்டம் போல், அன்றாட அலுவல் மின்னும் விளம்பரம் முரசறைய,"மின்னல் பூச்சியாக", கூடங்கள் வரைமுறையின்றி, சுற்றிச் சுற்றி வலம் வருகின்றன. மளிகைக்கடை வியாபாரம்போல்.

குழந்தைக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன், அவர்கள் பழகுவது ,உரையாடுவது,வெளியே உலா அழைத்துச் செல்வது, மனம் விட்டு ஆடுவது, பாடுவது போன்ற பழக்கங்கள் , அற்றுப்போய் விட்ட நிலைமை, நமது சமூகத்தின் மிகப்பெரிய தளர்ச்சி.

நல்ல குழந்தை வளர்ப்பு, சமுதாயத்தின் பொறுப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சமாகவே நின்று போய்விடுகிறது.உணர்வுகளில்  ஊன்றாது, உணர்ச்சிப் பெருக்கில் வாய்ப்பந்தல் போடப்படுகிறது நாள்தோறும்.

Friday, March 2, 2018

பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை!

தனியார்  கல்வி நிறுவனங்களில், பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரி வரை ஆசிரியப் பணியில், அலுவல் பணியில் சேர்ந்திடும் ஊழியர்கள் பணிநிலைமைகள் குறித்து பெறப்படும் தகவல்கள் நிறைவளிப்பதாக இல்லை.குறிப்பாக,பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை மோசமாக உள்ளது.நாள்தோறும் பாலியல் கொடுமைகள்,தொல்லைகளுக்கு உள்ளாகும் ஆசிரியைகள் பலர் தம் இன்னல்களை வெளிப்படுத்த முடியாத அவலம்.

அப்படியே, சில சந்தர்ப்பங்களில், சகிக்க முடியாமல் வெளிப்படுத்திடும் சம்பவங்கள், புகார் அளவில், காவல் நிலையத்தின் இருப்புக் கதவைத் திறக்க முடிவதில்லை. பள்ளியின் தாளாளர் பெரும்புள்ளியாக, கட்சி அரசியல் தொடர்பானவர் என்றால், புகார் அளிப்பவருக்குத்தான் பிரச்னை அதிகமாகும். அடியாட்கள் துணையுடன், அதிகார மமதையுடன், ஆட்சி செலுத்திடும் 'கரும்புள்ளிகளை', தொட, காவல் துறையும் கவனம் செலுத்தாது.

'தனி மனித உரிமை', ' பெண்ணுரிமை' ' பேசும்,  பதிவுகள் மேற்கொள்ளும் குடிமைச் சமூகம், கண்டும் காணாது தமிழ்ச் சங்கங்களில், அரங்குகளில் மேடையேறும், காணொலிக் காட்சி தரும், சாதனைப்பட்டியல் சேர்த்து நாள்தோறும்.

கல்வித்துறை, காசுள்ளவர் கைப்பாவையாக, பிரச்னை எதுவாகினும் தமக்கு தொடர்பில்லை எனும் நடுநிலைப் பார்வை, அரசாங்க உயர் அதிகாரம், பல ஊடகச் செய்திகளில் இதுவும் ஒன்றே!

சலனமற்று, ' மக்களாட்சி நிர்வாகம்', 'வெளிப்படை நிர்வாகம் , 'ஊழலற்ற நிர்வாகம்' என்கின்ற கவர்ச்சியான முழக்கங்கள் வாடிக்கையாக !
 வலம் வரும் வக்கனையாக!

Thursday, March 1, 2018

நீண்டிடும் 'நிர்பயா'


மாண்டிடும் மனிதத்தின் சாட்சி
மாநிலந்தோறும்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியாணா..............

குழந்தைப் பருவ, குமரப் பருவ
பெண்கள்,

சாதிய வெறிநாய்களின்,
 சனாதனப் பசியில்,

அடுத்தடுத்து அடுக்கடுக்காய்
 அக்கிரமம்.

வக்கிர வெறியில்
தலித் பெண்கள் கற்பழிப்பு,
உடல் சிதைப்பு,

பிணந்தழீயும் நடத்திய
நவீன நம்பூதிரிகளாக.


அரியாணா அக்கிரமம் வக்கிரமத்தின் உச்சம்.பதின் பருவ தலித் பெண் சிதைந்த உடல், 'சிந்த்' மாவட்ட கால்வாய்க் கரையில். கூட்டாக கற்பழிக்கப்பட்டு,உடல் சிதைக்கப்பட்டு, பிறப்புறுப்பில் பொருட்கள் திணிக்கப்பட்டு வன்மம்.பானிபட் மாவட்டத்தில் தலித் பெண் குழந்தை அண்டை அயலவரால் பலாத்காரம் செய்யப்பட்டு பிணந்தழீ நிகழ்த்தப்பட்டுள்ளது.அறிவிப்புகள் ஆயிரம் வந்தாலும் சாதிய வெறி, அணி திரட்சி அக்கிரம் எல்லைகளைக் கடந்து,மாநிலங்களைத் தாண்டி,
 நீண்டிடும் "தலித் நிர்பயா". மாண்டிடும் மனிதத்தின் காட்சி!
வெட்கப்பட வேண்டும்!
வளர்ச்சியும்! முன்னேற்றமும்!

Friday, January 13, 2012

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு: வாழ்வுரிமை நோக்கிய ஒரு படி புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்( மொழியாக்கம்)

நமது நாட்டு மக்களில் பெரும்பகுதியினர், தமது வாழ்நாளில் உணவின்மை, உறையுளின்மை,மருத்துவ வசதியின்மை காரணங்களால்,கடின உடல் மற்றும் மனப்போராட்டத்தின் பிடியில் சிக்கி, முதுமை அடையாமலே இறக்கின்றனர்.

நாட்டில் வறுமையில் உழல்பவர், உயிர்வாழ்ந்திட, உழைப்பிற்கும், உணவிற்கும் ஓயாத தேடலில், தொடர் மன அழுத்தத்தில் வாழ்க்கைப் பயணம் சுருங்குகிறது. புதிய உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு இப்பிரிவு மக்களுக்கு,சில நிவாரணம் அளிக்கிறது. இதன் காரணமாக சில காலம் வாழ்க்கை ஒப்பீட்டளவில் இலகுவாக அமையும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வேலைக்காக அளித்திடும் பண உதவி, மற்றும் மான்ய விலையில் கிடைத்திடும் உணவுப் பண்டங்கள், பொருளாதார அடுக்கதிகாரத்தில் கடை நிலையில் நிற்கும் கணிசமான மக்கள் திரளுக்கு பெரிய நிவாரணமாகும்.


இரண்டாவதாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் வாழ்க்கை தரம், அரசாங்க சமூக பாதுகாப்பு அனுகூலங்கள் வெட்டின் காரணமாக, வாழக்கூடியதாக இல்லை.

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு, நிறைய குறைபாடுகள் உடையதாயினும், ஒரு குறிப்பிடத்தக்க சட்டமாகும். உணவுக்கான உரிமை வழக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் 2003ல் தொடர்ந்தததின் காரணமாக, தற்போது நலத்திட்டங்கள் நீதி மன்றம் மற்றும் நாகரிக சமூகக் குழுக்கள் கண்காணிப்பு அளவிற்கு கிளைவிட்டு வளர்ச்சி அடைந்துள்ளது .இம்மனுவில் பிற நலத்திட்டங்களான ,நகர வீடற்றோர் உரிமை பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் ஆகியவையும் அடங்கும்.

இவ்வேளையில், இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஏழை மக்களுக்கு நீட்டிப்பு செய்வது அரிதான, ஆர்வமான நிகழ்வாகும். கிரேக்கமும்,இத்தாலியும் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், பிற ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி குறைவால் சமாளிக்க இயலாமல் திணறுகிறது.

இப்போக்கு, பின் காலனிய உலக சமூகத்தின் ஒரு கட்ட முடிவை சுட்டுகிறது. மேற்கத்திய முதலாளித்துவ வளர்ச்சி அம்சத்தை கேள்விக்குரியதாக்கிறது, மற்றும் இது குறித்து அணுக்கமான ஆய்வினை செய்யக்கூடிய ஒரு புதிய கட்டத்திற்கு நம்மை தள்ளுகிறது.

இத்தகைய வளர்ச்சிகள் குறித்து இந்தியா நன்றாக புரிந்துகொண்டு, மேற்கத்திய மாதிரி வளர்ச்சி,அடுக்கடுக்கான பொருளாதார மந்த புதைகுழிகளில்,ஈடுபடும் முன்முயற்சியை தவிர்க்க வேண்டும்.

ஆயினும், நாட்டின் ஒட்டுமொத்த நலம், எவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் அடித்தள மக்களுக்கு போய் சேர்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

ஆளுமையை தீர்மானிக்கும், நிர்வாகத் துறையில் சமகால சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளாமல், பொருளாதார சலுகைகள் வழங்குவது ஒரு பெரிய சவாலாகும். இலக்கு பிரிவினருக்கு உணவு போய்ச் சேரும் என்பது குறித்து, யாரும் பந்தயம் கட்ட தயாரில்லை. இலக்கு பிரிவினரை அடையாளம் காண்பது குறித்த செயற்பாங்கு சரியான கேள்விக்குரியதாகிறது. கடந்த கால அனுபவம் காட்டுவது, இசைவளிக்கப்பட்ட மூலவளங்களை சமூக, பொருளாதார,அரசியல் சக்தி வாய்ந்த நிர்வாக எந்திரம் வசப்படுத்தியுள்ளது விளங்கும்.


மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், தேசிய,மற்றும் சர்வதேசிய நலத்திட்டத்தில் சில மாநிலங்களில் நிறுவனமயப்பட்ட ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.உத்தரபிரதேச மக்கள் இது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போதைய சட்டவரைவு அனைவருக்குமான உணவு உரிமையை அளிக்காத நிலையில், இது பல நடைமுறைச் சிக்கல் மற்றும் கையாடல் அச்சங்களுக்கு வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் வாதம் அனைவருக்கும் உணவு அளிக்க வளங்கள் இல்லை என்பது அடிப்படையற்றது. இது அரசியல் உறுதிப்பாடின்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வது,சராசரி மக்களை மறப்பது ஆகும் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீதம் ஆண்டொன்றுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால், நிதிப் பற்றாகுறை இல்லை என்பதே பொருளாகும். பெரிய தொழிற்சாலைகளுக்கு சென்ற நிதியாண்டில் மட்டும் அரசாங்கம் வரிச் சலுகைகள் மற்றும் ஊக்க உதவிகள் உரு.4.6 இலட்சம் கோடி அளவிற்கு சலுகை வழங்கியுள்ளது, இதே சமயத்தில் மொத்த உணவுக்கான மான்யம், ஆண்டிற்கு உரு 2 இலட்சம் கோடி மட்டுமேயாகும்.


மிக முக்கியமாக, வசதி படைத்தவர்களுக்கான மான்யம் என்பது, 2009- 10 ல் 4.37 இலட்சம் கோடியிலிருந்து, 4.60 இலட்சம் கோடியாக, 2010- 11 ல் உயுர்ந்துள்ளது, இதே காலக் கட்டத்தில் ஏழை மக்களுக்கான மான்யம், 1.54 இலட்சம் கோடியிலிருந்து, 1.44 இலட்சம் கோடியாக 2011- 12 ல் குறைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், 10 பெரிய கார்ப்பரெட் மற்றும் தனி நபர் தவணை தவறியவர்களின், வருமான வரி பாக்கி கணக்கைச் சேர்த்தால், 104 இலட்சம் கோடி கணக்கில் வருகிறது.

ஆக, நிதிப் பற்றாக் குறை என்கின்ற வாதம் அடிப்படையற்றது.

Tuesday, September 22, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு- பகுதி 2

பரிதாபகரமாக காவல்துறை பதிவுகளில், இவ்வாறு கொல்லப்பட்ட நபர்கள்'அடையாளம் தெரியாத திருடன்' என குறிக்கப்பட்டிருக்கும். கொல்வதற்கு முன் யார் என்று தெரியாதவர் கொல்லப்பட்ட பிறகு திருடர்கள் என்றும் ஆள் கடத்தல்காரர்கள் என்றும் அறிய வரும்.

சமீபத்திய கொலை நிகழ்வு, காவல்துறையினர் எவ்வளவு எளிதாக ஒருவரை கொல்ல முடியும் என்பதும், சீருடையில் இருந்து கொண்டு அரசை பிரதிநிதித்துவம் செய்து, எவ்வாறு அதில் இருந்து இலகுவாக தப்பிக்க இயலும் என்பதும் நிரூபணமாகிறது.


போலி மோதல் கொலை சம்பவங்களில், பாகுபாடற்ற, நம்பத்தகுந்த புலன் ஆய்வு ஏற்பாடு, முற்றிலும் இல்லை.முறையான விசாரணை இல்லாமல், இவ்விதம் இழைக்கபடுகின்ற குற்றங்களில், வழக்கு தொடுப்பது என்பதோ, தண்டனை அளிப்பதோ நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

தேசிய மனித உரிமை ஆணையம், குற்றம் இழைப்பவரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்பானது, செயலிழந்து கிடக்கிறது. இது, சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட, ஒரு முக்கியமான தேசிய அமைப்பின் சோகமான கதையாகும்.மிகவும் வருந்தத் தக்க, பெரும்பாலும் பெருந்தலைவர் இல்லாத அமைப்பாகவே தற்போது இருந்து வருகிறது.ஆணையம், குறிப்பாக காவல்துறை மற்றும் இராணுவம் இழைத்ததாக கூறப்படும் குற்றங்களில் மட்டுமாவது, தமது கவனத்தை குவித்து இருந்தால், தேசத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ததாக இருக்கும்.

குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 132 மற்றும் 197 நிர்ணயம் செய்துள்ளவாறு, மத்திய மாநில அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டயம் உள்ளது.அரசின் அனுமதி பெறுவது அவ்வளவு எளிதல்ல.இதன் சூழலில், எழுதப்படாத சட்ட உரிமை என்னும் காவல்துறை கலாசாரம், மோதல் சாவுகள் நிகழ்த்திட 'நல்ல வாய்ப்பாக' அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதி ஒரு வேளை கிடைத்தாலும், தண்டனை அளிப்பதற்குள், நீதி மன்றத்தின் நெடிய போராட்டம், பல ஆண்டுகளை விழுங்கிவிடும் பெருந்தடை கற்களும் உண்டு.நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும் சமயத்தில், தண்டனை பெரும் காவல் அதிகாரி அல்லது இதரர், பல கட்ட பதவி உயர்வு அடைந்திருப்பார் அல்லது பணி ஓய்வு பெற்றிருப்பார், ஒரு வேளை இறந்தும் போயிருக்கலாம்.

தேசிய காவல்துறை ஆணையம், தமது 8வது அறிக்கையில், 132 மற்றும் 197வது பிரிவுகளின் கீழ், குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ள பாதுகாப்பு விலக்கிக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அண்மையில், ஆந்திர மாநில உயர் நீதி மன்றம், மோதல் கொலை சம்பந்தமான வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பில்,ஒவ்வொரு மோதல் சாவு சம்பவத்திற்கு பின், காவல்துறை முதல் தகவல் அறிக்கை போட வேண்டும் என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று, உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதன் இறுதி தீர்ப்பில், உச்ச நீதி மன்றமானது தடை இல்லாமல், இந்நாட்டில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் மோதல் கொலைகள் நிகழ்விற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவோம்.

Sunday, September 20, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு பகுதி 1

புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்

மொழி பெயர்ப்பு

அண்மையில் ஒரு செய்தி பத்திரிக்கையில் மனதை சிலிர்க்க வைக்கும் 12 நிழற்படங்கள் வெளியிடப்பட்டன.அதில், மக்கள் நெருக்கம் நிறைந்த அங்காடியின், குறுகிய தெருவில்,இளைஞர் ஒருவன் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அரை மணி நேரத்திற்கு பின்,பிணமாக ஒப்படைக்கப்பட்டான் எனும் செய்தியும் இடம் பெற்றது.

முன்பெல்லாம் ஆள் அரவமற்ற இடங்களை தேர்வு செய்யும் காவல் துறை, தற்போது பட்டப் பகலில் ஒருவரை கொல்லும் அளவிற்கு துணிவு உடையவர்கள் ஆகிவிட்டனர்.இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சட்ட விலக்குரிமையே இதற்கு காரணமாக அமைகிறது.இவர்கள் இழைக்கும் கொடுங்குற்றத்திற்கு தண்டனை ஏதும் இல்லை.தண்டனை இருந்தால் மூடிய அறைக்குள் மோதல் சாவு நிகழ்த்த மாட்டார்.

மோதல் சாவு கொடுமைகள் அகில இந்திய அளவில் காவல்துறையின் விருப்ப ஆர்வ நடவடிக்கையாக மாறியுள்ளது.எதிரெழுச்சியினர் உள்ள பகுதிகளான, மத்திய பகுதி, வட-கிழக்குப் பகுதி மற்றும் காசுமீர் போன்ற இடங்களில்,பாதுகாப்பு படைக்கும், எதிரெழுச்சியினருக்கும் நடக்கும் சண்டையில், வழக்கமான இழப்புகளாக, மோதல் சாவுகள் உள்ளது.
மோதல் சாவுகள் என்று அறியப்படுகிற நிகழ்வுகள் இப்பகுதிகளில் அன்றாட செய்தியாக உள்ளது.

இதற்கு சட்டம் நிர்ணயித்துள்ள முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகளும் பின் பற்றப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் மோதல்சாவு சம்பவத்திற்கு பிறகு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படும்.மோதல் சாவு கொலை நிகழ்த்தும் காவலருக்கு மட்டும் பரிசுப்பணம் அளிக்கப்படும்.

ஒரு தகவல் அறிக்கையின் படி, ஆந்திர மாநிலத்தில் அதன் அரசாங்கம்,ஓராயிரம் எதிரெழுச்சியினரின் தலைகளுக்கு 16 கோடி உரூவாக்கள் பரிசுப் பணமாக, உரூவாய் 20000 த்திலிருந்து 12 இலட்சம் வரை,அறிவித்துள்ளது.


உத்தரப் பிரதேசம் வன்முறையாளர் செயல்பாடற்ற மாநிலம், 2006-07ல், 201 மோதல் கொலை சாதனை நிகழ்த்தியுள்ளது!உத்தரகண்ட் மாநிலம் தன் பங்கிற்கு 2006ல் 23 மோதல் கொலையும், 2007ல் 10 மோதல் கொலையும் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது!

Sunday, September 13, 2009

தகவல் தொழில் நுட்ப(திருத்த) சட்டம்,2008ம் சிவில் உரிமைகளும் பாகம் - 2 மொழி பெயர்ப்பு


முன்னர், இந்திய தொலைத் தொடர்பு சட்டம், 1885ன் கீழ், பொது பாதுகாப்பு நலன்கள் சம்பந்தமாக அரசாங்கம், முறையற்ற முறையில் தகவல்கள் பரிமாற்றம் மற்றும் அதனை இடை மறிப்பு செய்வது குறித்து, எச்சரிக்கை ஏற்பாடுகள் உருவாக்க வேண்டும் என விதிக்கப் பட்டுள்ளது.


ஆனால், இதுநாள் வரையில் எந்த அரசாங்கமும் எவ்வித நடைமுறையும் உருவாக்கிட அக்கறை காட்டவில்லை.காரணம், அனைத்து அரசும், எதிர்க் கட்சிகள் தகவல்களை ஒற்றாடுவது ,இயன்றால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்களையும் வேவு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து நிகழ்த்துகிறது.


1996ல் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 1885ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தை பயன்படுத்தும் போது அரசாங்கம் கடை பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை வகுத்தது.இவ்வாறு, முதன்முறையாக ஒரு ஒழுங்கை அரசாங்கம் தொலைபேசி ஒட்டு கேட்பதில் அமுல்படுத்த உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியது.


மேலும், நாட்டின் இறையாண்மை,பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் அந்நிய நாடுகளின் உறவு தொடர்பான பிரச்சினைகளில் மட்டும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என சுட்டியது.பொது ஒழுங்கு நிலை நாட்ட, ஒரு குற்றம் இழைக்க தூண்டுவது போன்ற நேர்வுகளிலும் ஒட்டு கேட்கும் அதிகாரம் செல்லுபடியாகும் என்றது.


எனினும்,ஒட்டு கேட்பது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலர் அல்லது மாநில அரசின் உள்துறை செயலர் எழுத்து மூலம் ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதில் எவ்வகையான தகவல் ஒட்டு கேட்கப்படவேண்டும் என்பதும் தெளிவாக குறிக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாக்கப் பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, நீதி மன்றம் இவ் உத்தரவு சம்பந்தமாக மீள் பார்வை குழு ஒன்றும்,அமைச்சரவை அலுவலக செயலர்,சட்டத் துறை செயலர், மற்றும் தகவல் தொடர்பு செயலர் ஆகியோரை உள்ளடக்கி மத்திய அரசு மட்டத்திலும்,இணையாக மாநில அரசு மட்டத்திலும் அமைக்கப்பட்டு சட்டத்தை மீறிய செயல்பாட்டு உத்தரவை ரத்து செய்து, இடை மறித்து எடுக்கப்பட்ட தகவல்களை அழித்துவிடலாம் எனவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில் இவ்வகையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.தகவல் தொழில் நுட்ப (திருத்த) சட்டத்தில் இவ்வகை நடைமுறை, பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்துவது குறித்து இடம் பெற்றிருந்தாலும் தற்போது அரசாங்கம் இதற்கான ஒழுங்கு முறைகளை உருவாக்கும் என்று தோன்றவில்லை.

அவ்வாறு எண்ணம் இருந்திருப்பின், அசல் சட்டத்திலேயே அதற்கு உரிய அம்சங்களை சேர்த்து சட்டத்தை உருவாக்கி இருக்க முடியும்.ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்திலேயே இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை உருவாக்காத அரசாங்கம், 60 ஆன்டுகள் கழித்து உச்ச நீதி மன்றம் தலையிடும் வரை செயலற்றுக் கிடந்த அரசாங்கம் தற்போது மக்கள் பேச்சு உரிமை , கருத்து உரிமை காத்திட முனையும் என்பதில் நம்பிக்கை இல்லை.

பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லாத இச்சட்டம் மக்களின் தகவல் பரிமாற்றத்தை அவர்கள் அறியாமலே அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து கண்காணித்திடும்.சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பே ஓர் அறிக்கையில் 'மின்னணு காவல் அரசு' என்னும் தலைப்பில்,52 நாடுகளின் ஆய்வில் இந்தியா 20வது இடத்தை பிடித்துள்ளது.பிற நாடுகளில் சில,சீனா,வட கொரியா, உருசியா, சிங்கப்பூர் ஆகியன.

குறிப்பாக இச்சட்டம் என்பது குடி மக்களின் சிவில் உரிமைகளுக்கு நஞ்சு அளித்திடும் சட்டம்.பொறுப்பற்ற காவல்துறையின் கைககளில் இது இந்தியாவை,'1984ஆம் ஆண்டு ஆர்வெலியன் தேசமா'க மாற்றி விடும்.

Sunday, September 6, 2009

தொழில் நுட்ப(திருத்த) சட்டம், 2008ம், சிவில் உரிமைகளும்

(மக்கள் சிவில் உரிமைக் கழக வெளியீடு ஆகசுடு,2009)
மொழி பெயர்ப்பு பாகம்-1


அண்மையில் குடியரசுத் தலைவர் இச் சட்ட திருத்தத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.இது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடி மக்களின் தனி நபர் உரிமைக்கு உலை வைக்கும் சட்டம்.

திருத்தச் சட்டத்தின் 69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட,

மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண்காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும்.

இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைக்கு எல்லைமீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது.அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல்,குறுந்தகவல்,தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும்.நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை இன்சுபெக்டர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திட முடியும்;கணினியை கைப்பற்ற முடியும்;புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

Wednesday, November 19, 2008

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி !

உருசிய நாட்டுத் தலைமை அமைச்சர் இந்தியாவிற்கு வருகிறார். மேலும், இரண்டு அணு உலைகள் தருகிறார். ஏற்கனவே, தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் விரைவு ஈணுலைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இவை வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில், அணு உலைகள் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அண்மையில், மிகவும் பாதுகாப்பான அணு ஆற்றல் தொழில்நுட்பம் உள்ள நாடான பிரான்சு நாட்டு அணு உலைக் கழிவுகள், செர்மனி நாட்டில் கமுக்கமாக கொட்டப்படுவதைஎதிர்த்து, செர்மனியர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டதை, நாம் அறிவோம்.

இந்திய போன்ற நாட்டில், மண்ணையும், மக்களையும் வெகுவாக பாதிக்கின்ற சீர் கேடுகள் குறித்து பேசுவது, எழுதுவது என்பது பெரிய அளவில் இல்லை. அவ்வாறு, முனைப்பாக செயல்பட்டாலும், எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒன்றை சொல்வது, ஆளும் கட்சியாக மாறிய போது, எதிர் நிலை எடுப்பது, கண்கூடாகும்.

கூடங்குளத்தில் அணு உலைகள் அமைத்திட, முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் கை கோர்த்து, இந்திய அரசு செயல்பட்டபோது, அதனை எதிர்த்து, ஊடகவியலாளர் ஞானி, அந்தன் கோம்சு போன்றவர்கள் தமிழ் நாட்டில் குரல் தந்தனர். அப்போது, எதிர் கட்சி வரிசையில் வீற்றிருந்த கலைஞர் அவர்களை, தமிழ் நாட்டில் அமைக்கவிருக்கும் அணு உலைகளுக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நடத்திட ஆலோசனை வழங்கினர். அவரும், அணு உலைகளின் கொடுமையை எதிர்த்து, தமது கட்சியினரிடையே சிறந்த பரப்புரை மேற்கொண்டார் என்பது வரலாறு ஆகும்.

முன்னாள் சோவியத் நாட்டு செர்னோபில், அமெரிக்க ரோடு தீவு பேரழிவுகளின் வாயிலாகவும், சப்பான் போன்ற நாட்டில் அணு உலைகளில் தொடர்ந்து நிகழும் விபத்துகளினாலும், அந் நாட்டு மக்களிடையே, அணு ஆற்றல் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.தற்போது நிலவும் சூழலில், இது பற்றி அரசியல் கட்சிகளிடையே,குறிப்பாக, மக்கள் நலன் சார்ந்த, நீண்ட கால பயன்கள் தொடர்பான சிந்தனை, அறவே இல்லை என்றே சொல்லலாம்.

Tuesday, November 18, 2008

.........சரணம் கச்சாமி!

நீ என்ன சொல்ல!
நான் என்ன கேட்க!
அலட்சியம்!
என் இலட்சியம்!
ஆங்கிலேயனிடம்
கேள்!

என்னிடம் கொடுத்துச்
சென்றான்!
ஏற்றுக் கொண்டேன்!
உன்னையும் சேர்த்து!
அடிமையாக!

அதிகாரம்! ஆட்சி!
அனைத்தும்!
என்னிடம்!
கிருமமாய்!
நடந்து கொள்!

தருமத்தின் ஆட்சி!
தாமரைப்பூ
மாட்சி!
சரண் அடைந்து விடு!

Thursday, November 6, 2008

அற்புதம்!

எம் இனம் அழிகிறது!
தமிழன் அல்ல!
மனிதன்!

இந்தியனுக்குத்தான்!
என்
இறக்கம்!
உனக்கு அல்ல!

தமிழனுக்கு
அல்ல!
மனிதனுக்கும்
அல்ல!

அப்படித்தானே!
எம் தேசியம்!
சர்வ தேசியம்!
கற்பிதம்!

காலம்! காலமாக!

Tuesday, November 4, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்- 5

1982ல், 'அடிப்படை மனித நேய' மாத இதழ் தலையங்கத்தில், மக்கள் சிவில் உரிமைக் கழக உறுப்பினர்களிடையே அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு சில மாதங்களுக்கு முன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் சி.எப்.டி. இந்திய அளவில் மாநாடு ஒன்றை, அய்தராபாத் நகரில் நடத்தினர்.

இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சிக்கலில் இது போன்ற சிவில் உரிமைக் குழுக்களுடன் இணந்து செயல்படுவது, சமூக மட்டத்திலும், அமைப்புகளின் சிவில் உரிமை ஆகியவற்றைக் காத்திட, மிகவும் அவசியம் ஆகிறது என்று தலைவர்களிடையே, உணரப்பட்டது.


இவை போன்றதொரு மாநாடு, மாநில அளவில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சில மாநாடுகளில் தார்குண்டே அவர்களும் கலந்து கொண்டது குறிப்பானது ஆகும்.

1982ல் மகாராட்டிர மாநிலம் துலியாவில், உடமைகள் இழந்து, பொருளாதார நிலையில் நலிவுற்ற மக்களுக்காக பாடுபடும் ஒரு குழு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், நானும் அவரும் கலந்து கொண்டோம். தமது 75 அகவையிலும் அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Sunday, November 2, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 4

அக்டோபர், 1980ல், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பு மாநாடு, புதுதில்லியில் நடைபெற்றது. மேற்குவங்கத்தை ஆண்டு வந்த இடதுசாரி அரசு, மாநில அமைப்பின் பொறுப்பு, தங்கள் வசம் இருக்க வேண்டும் என கோரினர். இக் கோரிக்கையை எந்த சிவில் உரிமைக் குழுவும் ஏற்க இயலாதது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம் சுயேச்சையாக செயல்பட முடியாது.

இதற்கிடையில், சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுத்தான் நாட்டின் மீது மேற்கொண்ட ஆக்ரமிப்பை எதிர்த்து, தார்குண்டே அவர்கள் தலைமையில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மார்க்சிசுடு கட்சியினர் மத்தியில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.

இப் பிரச்சினையை தீர்த்திட சமதர்ம கட்சியின் மூத்த தலைவர் மதுலிமாய் அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர்கள் மற்றும் மார்க்சிசுடு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். எனினும், மார்க்சிசுடு கட்சியினர் சனநாநாயக மற்ற நிலையில் இருந்து வளைந்து கொடுக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிற மாநிலங்கள் ஆன மகாராட்டிரம், பஞ்சாப் அகிய இடங்களிலும் மேற்கு வங்கத்தில் உள்ளது போல், இதர சிவில் உரிமை அமைப்புகள் செயல்பட்டு வந்தன. தார்குண்டே அவர்களின் முடிவின்படி, இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அவரின் முடிவின்படி, நான், சனதாக் கட்சியில் செயல்பட்டு வந்த டாக்டர்.ஒய்.பி.சிப்பர் அவர்களை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வேலையை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.

அவர், அமைப்பின் நிர்வாக செயலாளராக தமது இல்லத்தில் அமைந்துள்ள அலுவகத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறார். 1985ல், சபல்பூரில் நடைபெற்ற மாநாட்டில், அவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக, பேராசிரியர்.திலீப் சாமியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thursday, October 30, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 3

மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக கழக அமைப்பின் தோற்றத்திற்கு காராணமான, லோக் தளம், காங்கிரசு(பழையது), சன சங் மற்றும் சமதர்மக் கட்சி ஆகியவை மத்திய சனதா அரசாங்கத்தில் சேர்ந்த காரணத்தினாலும்; மாநில அரசுகளில் பங்கு கொண்டதினாலும்; மேற்கு வங்க இடதுசாரி அரசில் இடம் பெற்றதாலும், அமைப்பு செயல்படாத நிலையிலேயே இருந்தது.

இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சனதாக் கட்சி எதிர்க் கட்சி வரிசையில் இடம் பெற்ற சூழலில், புதிய மத்திய அரசாங்கம் சிவில் உரிமைகளை ஒடுக்கும் என்கின்ற அச்சத்தின் காரணமாக, தார்குண்டே, குல்தீப் நய்யார், ரசனி கோத்தாரி மற்றும் கிருசண காந்த் ஆகியோர், அமைப்பிற்கு புத்துயிர் ஊட்டினர்.

இதற்கிடையில், சிவில் உரிமைக் கழகத்தை இந்திய கம்யூனிசுடு( மார்க்சிசுடு-லெனினிசுடு) கட்சியினர் நடத்தி வந்தனர். இது குறித்து தார்குண்டே அவர்கள் ஒவ்வாமை கொள்ளவில்லை. மாறாக, 1973 மற்றும் 1977ல், அவர்கள் மீது ஆந்திர வெங்கல் ராவ் அரசாங்கம் நிகழ்த்திய அடக்குமுறைகள் பற்றி உண்மை அறியும் ஆய்வுக் குழுவை அமைத்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

என்றாலும், அரசியல் கட்சிகள், புதிய சிவில் உரிமை அமைப்பினை கைப்பற்றிக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை ஒரு விதியாக உருவாக்கினார். அப்போது தான், மக்கள் சிவில் உரிமைக் கழகம் உருவாகியது.

இச்சமயத்தில், புகழ் பெற்ற வழக்குரைஞர் கோவிந்த் முகோத்தி அவர்கள், மக்கள் சனநாயக உரிமைக் கழகம் என்னும் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்.