Sunday, September 6, 2009

தொழில் நுட்ப(திருத்த) சட்டம், 2008ம், சிவில் உரிமைகளும்

(மக்கள் சிவில் உரிமைக் கழக வெளியீடு ஆகசுடு,2009)
மொழி பெயர்ப்பு பாகம்-1


அண்மையில் குடியரசுத் தலைவர் இச் சட்ட திருத்தத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.இது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடி மக்களின் தனி நபர் உரிமைக்கு உலை வைக்கும் சட்டம்.

திருத்தச் சட்டத்தின் 69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட,

மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண்காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும்.

இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைக்கு எல்லைமீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது.அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல்,குறுந்தகவல்,தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும்.நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை இன்சுபெக்டர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திட முடியும்;கணினியை கைப்பற்ற முடியும்;புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

No comments: