Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, May 31, 2008

சந்தர்ப்ப வாதம்!

சூழ்ந்திடும்
மரியாதை
இழந்து!
இளித்து!
ஏற்றம்!


எத்தரப்பும்!
எச்சூழலிலும்
நிலவும் !
'சுப்ரபாதம்'

எமக்கு !

வருமானம்!

மொழி மானம்!
இன மானம்!

அடுத்து!
இவையாவும்!

Thursday, May 8, 2008

ஆழமானது!

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது!
செர்மன் இணைந்தது!
உத்தபுரம் தடுப்பு சுவர்
இடிக்கப்பட்டது!
பிரிவினை ஆழமானது!

சுவர்களை விட
மனத் திரைகள்!
வள்ளலார் நீக்கச் சொன்னது!
அழுக்கேறியுள்ளது!

மனச் சிறைகளிலிருந்து
விடுபடுவோம்!
சிறார்களையாவது
காப்போம்!

சாதியத் தீயை
சந்ததிகளுக்கு
இனிமேலும்!
உரிமையாய் அளிக்கமாட்டோம்!
தமிழன் எனும் அடையாளம்
உறுதி செய்வோம்!

Tuesday, July 3, 2007

மக்கள் கேட்கிறார்கள்?

தொழிற்சங்கத்தில் பொருளாதார கோரிக்கைகளுக்கு முண்டாசு கட்டி , முண்டி அடித்து போராட்டம் நடத்தும் தோழர்களில் எத்தனை பேர் சமூகப் பிரச்சனைகளுக்காக போராட முன்வருகிறார். 25 ஆன்டு கால எனது தொழிற்சங்க வாழ்க்கையில் அவர்களை மல்லு கட்டி அழைத்துச் சென்று நிறுத்தியதில் ஒன்றிரண்டு பேர்தான் தேறினார்கள் என்பது வெளிப்படை.


மத்திய தர வர்க்கம் புதுச்சேரியில் மிகவும் தன்னனலப் போக்கில் ஊறியுள்ளது, மக்கள் செயல்பாட்டாளர்களால் துல்லியமாக அறியப்பட்டுள்ள்து.


ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதில் தொழிற்சங்க உணர்வு உள்ள ஊழியர்களுக்கு பொறுப்பு இல்லையா? தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மக்களுக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதில் சமூக கடமை இல்லையா?. பெருகி வரும் 'விலைப்பட்டியல்', மின்சாரத்துறையில் குறைந்த பட்சம் உருவா500 கையூட்டு அளிப்பதாக உள்ள நடைமுறை, வருவாய்த்துறையில் திரட்டப்படும் இலஞ்சம், பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கையும் மெய்யுமாக பெறப்படும் 'மெய்யூட்டு', போக்குவரத்து துறையில் புரையோடிப்போய் இருக்கும் முறைகேடு, ஆரோக்கியமான ஒரு சமூகத்தின் வளர்ச்சி பாதையா?


மக்கள் கேட்கிறார்கள்? பதில் கிடைக்குமா?