Showing posts with label சமூக இயல். Show all posts
Showing posts with label சமூக இயல். Show all posts

Sunday, November 4, 2018

" மவுண்ட் செயின்ட் மிசல்"

07.08.18, காலை 7 மணிக்கு தொடங்கிய பயணம், " மவுண்ட் செயின்ட் மிசல்", நோக்கி.130 கி.மீ. வேகத்தில், பயணக் கட்டண தேசிய நெடுஞ்சாலையில்,விரைவாக. பல ஊர்களைக் கடந்து பக்கவாட்டில்; மர அடர்த்திகள்; சோலைகள்; கோதுமை வயல்கள்; சூர்யகாந்தி விளைச்சல்கள்; சோளப் பயிர்கள்; இவைகளை துரிதமாக கடந்திட, செங்குத்தான சாலைகள்.

ஏற்ற இறக்கங்கள், சில நேர்வுகளில் வளைவுகள்.ஊர்களின் ஊடாக, கிராமங்களைத் தொட்டு, வேகம் குறைத்து, எண்ண வேகத்திற்கு ஈடளிக்க இயலாத விரைவு வாகனங்கள், முறையாக முந்திச் செல்ல, ஒருவாறு சமதளப் பகுதியை தொட்டது எங்கள் வாகனம்.

தொடுவானத்தில், உயர்ந்து நிற்கும் நெடுங்குன்றத்தில், "செயின்ட் மிசல் கோட்டை", கோவில் தென்பட, அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி எல்லை கடந்து."யுனஸ்கோ", அங்கீகரிப்பில் வரும், 'மரபுரிமைச் சின்னம்',அது.

வாகன நிறுத்தத்திற்கு அகர வரிசை ஏற்பாட்டில், அடுத்தடுத்து நிறுத்தம்.ஊழியர் ஒழுங்குபடுத்த, எமது வாகனத்தை நிறுத்தி, பார்வையைச் சுழல விட்டோம்.சுள்ளென்ற வெயில், சற்று சுணங்கியது.

அண்மையில், மக்கள் கூட்டம் வண்ண,வண்ண ஆடைகளில். பல நாடுகளிலிருந்து வரிசையாக, ஒழுங்கமைவிற்குள்.இலவயப் பேருந்து நோக்கி, ஒவ்வொன்றாக ஊர்ந்து கொண்டிருந்தது.அவ் வரிசை ஒழுங்கில் எங்களையும் இணைத்துக் கொண்டோம்.

காலை சிற்றுண்டி விடுத்து, ஒன்றிரண்டு பிசுகட் எடுத்துக் கொண்டது போதவில்லை.பசி எடுத்திட, மீண்டும் சில சில்லுகள் கொரித்துக் கொண்டே, மெல்ல,மெல்ல கடந்து வண்டியில் ஏறினோம்.

சொகுசு வாகனம், துப்புரவுடன். இரைச்சல் இல்லாத இனிய ஓட்டம்.செல்லும்பாதை இரு மருங்கிலும், உணவுக் கூடங்கள்,விடுதிகள், 'கேம்ப் ஏற்பாடுகள்', அலங்கரித்திட, சில நூறு மீட்டர் சொகுசு வாகன அனுபவம்.

நெளிந்து செல்லும் பாலத்தை தொட்டு, இருபது நிமிட பயணத்தில், பாலத்தின் கீழே, ஆற்றுப்படுகை. பின்னோட்ட நீர்ப் பகுதி; பின் வாங்கி இருக்க; இரு புறமும் விழிகளைச் சுற்றி; விரிவானம், விசாலக் கோணம் கண்டு; வியந்து , பல மொழி பேசும் மக்கள் உணர்வுகளோடு கரைந்து, என்னை மறந்தேன்!

நிறுத்தம் வந்த போது, தானியக்க கதவுகள் திறந்திட, வரிசையாக இறங்கி,பாலத்தின் நடைபாதையில் பயணப் பட்டோம்.செல்போன்கள் சொடுக்குப் போட, கேமராக்கள் சுழன்று பல காட்சிகளை படத்திற்குள் கவர்ந்திழுத்திட, ஆற்றுப்பகுதியில் இறங்கினோம்.

இடையிடையே சிற்சில பாறைகள், பச்சை படர்ந்து, உலர்ந்தும், உலராமல்,நாங்கள் உட்கார்ந்து, அன்னாந்து பார்த்திடும் கோட்டை!களிப்பு மண் வரி கோடுகள் காய்ந்தும், காயாமல், கவுச்சி வாசம்.

சில் நீர்த்திட்டுகள் எம்மை அழைத்திட, ஆடை சுருட்டி, மூடணி அவிழ்த்து, முட்டி கால் உயர்த்தி நடை பயின்றோம்.சில்லென்ற காற்று, தூய்மையாக, உடலைத் தழுவ, உன்னத உற்சாகம்.மகிழ்ச்சி தாலாட்ட, கடற் காக்கைகள் வியக்கும் ஒலி எழுப்பி, எம்மை நோக்கி தாழப் பறந்து, தளர்நடை பயின்றது.

இரை தேடி, பாறை இடுக்குகளில் இறங்கிய பறவை அச்சம் தவிர்த்து, தாழ்நிலை பறந்திடும் வானூர்தி போல் ஒலி எழுப்பாது ஒய்யாரமாக ஒப்பிலா காட்சி! நண்பகல் கடந்ததும், நினவின்றி.உணவுப் பொட்டலங்கள் வாகனத்தில்.அழைப்பதும், கேட்காமல், ஒருவாறு நிலை உணர்ந்து, மீண்டும் சொகுசுப் பேருந்தில் வரிசை காத்து ஏறினோம்.இலக்கு சென்றதும், இறங்கி, காரில் அமர்ந்து, சாப்பிட முனைந்தபோது, மழைத்துளிகள் நனைத்திட, உள்ளிழுத்து அமர்ந்து, எலுமிச்சை சோறு, உருளை கலந்து, பிசைந்து, உடன் வந்த விருந்து அளித்திட்ட உணவும் சேர்த்து, மதிய உணவு முடிந்தது.

அடுத்த கட்ட பயணத்திற்கு அணியமானோம்! இலவச சொகுசு வாகனம் மீண்டும் ஈர்த்திட, ஏக்கத்துடன் பின் நின்ற வளமான கறுப்பு நிறக் குதிரைகள் பூட்டிய பழமை வாகனத்திற்கு கட்டணம் செலுத்த இயலாது, பயணம் நீண்டது.

மலைப்பாக செம்மாந்து நின்ற மலை நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திட தயாரானோம். அதற்கு முன், பின் வாங்கியிருந்த ஆற்று நீர் ஓட்டம், சீராக தன் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது.இயற்கை நீர் ஊட்ட சூழல் கண்டு களித்தோம்.மலைக்கோட்டை வலப்பக்கத்தில், வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறுவது எவ்வாறு என்ற திகைப்பும்; எப்படியாவது ஏறிட வேண்டும் என்கின்ற உந்தமும் போட்டியிட; கால்கள் முன்னேற சாய்தள பாதையில் சறுக்கு மரம் ஏறுவதுபோல்.இரு பக்கங்களிலும் எண்ணற்ற கடைகள்; அங்காடிகள்;உணவகங்கள்; வணிகம் செய்திட திருவிழாக் கூட்டம் போல் ஏறுவதும், இறங்குவதுமாக.சில தொலைவு கடந்து, ஆசுவாசப்படுத்தி, மகளுடன், ஊன்றுகோல்போல் குடை துணை நிற்க.

எனக்கு முன்னே, மனைவி உற்சாகமாக படிக்கட்டுகளில் முன்னேறி, திரும்பி என்னைத் தேட. படப்பிடிப்பில், கவனத்துடன் எம்மையும் கண்காணித்து பாலா, அப்படியும் இப்படியுமாக சுழல, மச்சியின் உச்சியை அடைவதுபோல்.இடையிடையே உள்ள கோட்டை சந்துகளை, பொந்துகளை கண்டு, அவற்றிடையே காப்பாக பராமரிக்கப்படும் மரங்களை, செடிகளைக் கண்டு, உள்வாங்கிட முடியாத திணறல் காட்சிகள் பதிவேற்றத்துடன்.

மலைக்கோட்டை இடது பக்கமும் நீர் சூழ்ந்து கொண்டிருந்தது.காலையில், ஓடியாடி உட்கார்ந்து களித்து பகுதி, ஆற்று நீர் படர்ந்து சூழ்ந்திருந்தது.நேரம் சென்றிட, மலையை வளைத்திடும் நீர்ச் சூழல். ஒரு நாளைக்கு இருமுறை உள் வாங்குவதும், வெளிப்படுவதும், இயற்கைச் சூழல் கண்டிட, ஆர்வத்துடன் மக்கள் கூட்டம், நாங்கள் நற்பேறு பெற்றோம்."யுனஸ்கோ" மரபு பட்டியலில் இடம் பெற்ற சிறப்புக் காட்சியை கண்டு உற்சாகம்.சலிக்க கண்டு களித்த பெருமை வருட இறங்கினோம்.

எம்மை வரவேற்கும் உற்சாக உணர்வோ! அறியேன்! காற்று சுழன்றது, உடன் மணல் பறந்தது.சுழற்சியில் முகத்தில் அப்பிட, கோட்டை மதில் பக்கமாக, கண்ணாடி அணிந்து, திரும்பி நின்ற கூட்டம் அதிகரித்திட,வானம் கருத்தது.

வண்டின நிறம் சேர்த்து, கும்மிருட்டு மழை மேகம், குளிர்ந்த காற்று, சூறைக்காற்று சுழன்றடிக்க, விசை வேகம் சுருதிசேர்த்திட எம்மை நெட்டித் தள்ள, கைகள் கோர்த்து, ஒருவருகொருவர் ஒத்தாசை சேர்த்து, பாலத்தைவிட்டு தூக்கி எறியப்படுவோமோ, பயம் சேர்த்து, பெரும்பாலான மக்கள் கூட்டம் நடைகூட்டியது.

 விரைந்து முண்டியடித்து, பேருந்தில் ஏறி இடம் சார்ந்திட முண்டியடுத்தும், ஒழுங்கிழக்காமல், வெளிறிய முகத்துடன்.மழைத்துளிகள், ஆலங்கட்டித் துளிகளுடன் கொட்டிட, எம்மீது அங்கி போர்த்தி, குடை பிடுத்து காத்திட்டனர் பிள்ளைகள்.

பனி மழைத்துளிகள் பஞ்சு நிறத்தில், சில்லென்று உடைந்த கண்ணாடித் திவளைகளாக, சில மணித்துளிகள் நீடித்தது. செய்வதறியாது, திகைத்து வண்டியில் ஏறிட, ஒன்றிரண்டு வண்டிகள் விரைந்திட, காவல்துறை, இராணுவம் வண்டிகளில் விரைந்திட, மேலும் இலவசப் பேருந்துகள் பணியில்.

நெருக்கி வண்டியில் ஒழுங்காக உள் ஏறி நின்றோம். ஒரு வழியாக.
அலறிய பத்மினியும், வெளிறிய முகம் இயல் நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்தது.

அச்சம் எமக்கில்லை என்று சொல்ல முடியாது.இருப்பினும், நம்பிக்கை மேலோங்கிட, பயணம் தொடர்ந்தது.தருணங்கள் கரைந்திட, புயல் திசை மாறியது.வானம் மேற்றிசையில் வெளுக்கத் தொடங்கியது. வண்டி நிறுத்தம் நோக்கி, மனதில் அசை போட்டு,

 'அச்சமில்லை! அச்சமில்லை!

Friday, November 2, 2018

பூர்வீக புல்லாங் குழல்

அயலகச் செலவில் ஒரு நாள், செவ்விந்தியர்- பூர்வீகக் குடியினரின், புல்லாங் குழல் இசைக் கேட்டேன்.படக் காட்சிகள்/ஓவியக் கோலங்கள் பின்புலத்தில் அடுத்தடுத்து  வரிசையாக, மனங் கவர்ந்திட.

அமெரிக்காவின் மண்ணின் மைந்தர் வாழ்விடம்! 

விலங்குகள், பறவைகள், சூழல் அமைதி, எழில் கொஞ்சும் இயற்கை, மண், மரங்கள்,  அருவிகள், நீர்வீழ்ச்சி, கழுகுகள், குதிரைகள், கூடாரங்கள், புல்வெளிகள்,  மாடுகள்/எருதுகள் மேய்ச்சல் நிலங்களில்.

காட்சிப் படுத்திய விதம், முறை, கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.பனிமூட்டம்; உயர்ந்த மரங்கள்; மலை முகடுகள்; குன்றுகள்; ஓநாய்கள்; மகளிர்; நிலவு; இரவு; ஒநாய் உலா. குன்றின் மீது.

பறவைச் சிறகுகள் அலங்கரிக்கும் தலைமுடி அணியுடன்; பின்னப்பட்ட இருக்கை; விறகு மூட்டிய நெருப்பு முன் அமர்ந்து; தியானிக்கும் பெண், குதிரை மீது அமர்ந்த வீரன்.

 மிக மெல்லிய குழல் ஓலி. இதுவரை நான் கேட்டறியா நிலை.அகக் கரணங்களில் சிற்றோடை சிலிர்ப்பு; ஆழ்ந்த அமைதி; தாயின் தாலாட்டு இசையாக; இன்னியல் இன்ப ராகம். எவரையும் வயப் படுத்தும்/ வசப்படுத்தும் இதய கீதம்!

'எதிரித்தா குன்று'

பிரான்சின் நார்மண்டி பகுதி- 'எதிரித்தா குன்று', வடக்கு பகுதியில்; ஆங்கில கால்வாய் அருகில், அழகிய கடற்கரை பள்ளத்தாக்கு.
எழில் கொஞ்சிடும் இயற்கை; சில்லென்ற காற்று தாலாட்ட; சிந்தை குளிர்ந்திட; கால்ப் மைதானம்; படகுகள் அணிவகுத்திட; கடைகள் அணி செய்ய; நடைபாதைகளிலும் உணவகங்கள்; கடல் உணவு வகைகள்;மீன், ஆளி, ஒயின், பல்வகை மதுப் புட்டில்களுடன், மக்கள் மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து.

குழந்தை,குட்டிகள், முதியவர்,இளைஞர் என பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கைகளில் கேமராக்கள், செல்போன்கள்,ஐ-போன்கள் சகிதமாக அடுத்தடுத்து கிளிக் செய்யும் அற்புதம், வெள்ளைக் குன்றுகள் உச்சியில்.மாதாக் கோவில் அடுத்த குன்றுத் தொடரில்.

கூழாங்கற்கள் கொட்டி நிரப்பிய இறங்கும் பகுதி, சிலர் படகில் சவாரி, சிறு கப்பல் பயணத்தில் குடும்பமாக சிலர் செல்லப் பிராணிகளை, படிக்கட்டுகளில். சரிவுப் பாதையில், வளைந்து, நெளிந்து,படிப்படியாக உயர்ந்து, சரளைக் கற்கள் பரப்பி, பாதை ஒழுங்கு செய்து, பக்குவப்படுத்திய, தடுப்பு ஏற்பாடுகள்.பிடித்துச் செல்ல, உட்கார்ந்து, இயற்கை எழில் ரசிக்க, முறையான முன்னேற்பாடுகள்.

 தொடக்க நிலையில் கழிவகங்கள், கார் நிறுத்தம், கட்டணச் சீட்டு/தானியங்கி என ஓர் ஒழுங்கிற்குள், ஒப்பற்ற சூழல். எண்ண ஓட்டத்தை சீர்படுத்திய, வண்ண ஓட்டம், வகை, வகையான காட்சிகள். கடல் பறவை, தாழப் பறந்து நம்மிடம் பேசுவது போன்று, உணவு அளித்த/உண்ட பழக்கத்தில் அச்சம் கொள்ளாது, அணுகி வரும் காட்சி அற்புதம்.அனைத்தும், இதுவரை கண்டிராத காட்சி, இதயத்திற்கு ஏற்ற மீட்சி.

போகும் பாதையெங்கும், குன்றுகளும், சரிவுகளும், வயல்வெளிகளும், கோதுமை நிலங்களும், சூர்ய காந்தி பயிர்களும், மந்தை, மந்தையாக மாடுகள் மகிழ்ச்சியாக மேய்ச்சலில்.

 உழுபடை எந்திரங்கள் ஊர்வலமும், இடையிடையே கடந்து செல்லும் கிராமங்கள், தொகுப்பாக வீடுகள், தனித்தனியாகவும், தோப்புகள், பைன் மரங்கள் என கண் கவரும், குளுமையான சூழல். சாரல் மழை11 டிகிரி செல்சியசுக்கும் குறைவான சூழல்.நெடுந்தொலைவு பயணக் களிப்பு நீக்கும்.

இடை நிறுத்தங்கள் பூங்காக்களாக, கழிவகங்கள் துப்புரவாக, நேர்த்தியான ஒழுங்கமைவு,சாரி,சாரியாக வாகனங்கள் அணி வகுப்பில், அக்கறை ஒழுங்கு.முந்தும், முட்டும் நிலை தொலைந்து, விதி முறைகள் அனுசரிக்கும் போக்குவரத்து. திசைவழி காட்டும் விளம்பரங்கள் தெளிவாக, தானியங்கி கட்டண நிறுத்தங்கள் அடுத்தடுத்து. தனிவழியாக முறையான ஏற்பாடு, முண்டியடித்துச் செல்லும் முணகல் இல்லை!

அயலகச் செலவில் ஒரு பொழுது


காகம் கரைவது போல் காலம் கடக்கிறது. அமைதி தேடி அலைக் கழிந்த மனம், அல்லல் ஏற்றது தினம், அயலகச் செலவில் அமைவுற்றது குணம்.கூட்டுப் பறவைக்கு, தனிமை துயரம் ஆயினும், மாறிய சூழல் உயரம், தோழமை கூட்டியது. தோகை விரி மயிலாக மகிழ்வூட்டியது!

வேலையில்லா வேளை விடிந்திடும் காலை, விரைவுறும் பயண சாலை, விடை தேடும் வினாப் போல் விரிந்திடும், விளங்கிடும் விளக்கொளி குறிப்பில்.

இன்னியங்கிகள் வரிசையாக அணி வகுத்திடும், அரவம் குறைத்து. ஆள் கடக்கும் குறிப்பில், நின்று நிதானித்து தொடர்ந்திடும். கனிவுடன், 'மன்னிக்கவும்' என திடீரென நடைபாதை வளைவில் எதிர்ப்பட்ட பெண்மணியின் வாயில் உதிர்த்த முத்து, வணிக வளாகங்களிலும்.

 எங்கெங்கு எதிர்ப்படும் நேர்விலும், கனிவான சொற்கள். மொழிக்கும், நாட்டுக்கும், மனிதத்திற்கும் அணி சேர்க்கும் ஒழுகலாறுகள். ஒழுங்கியக்க கண்ணியமான போக்குகள்.

நடைபாதையினர் உரிமை;மிதி வண்டியின் உரிமை; மதிக்கப்படுகிறது மகிழ்வுடன், தளர்வின்றி.

Wednesday, October 31, 2018

'ஞாயிறு'

'ஞாயிறு சந்தை', சில பர்லாங் தொலைவில்.பயண தொடக்கத்தில் சேர்ந்த முதல் கிழமை.காலையில் எழுந்து, துரிதமாகி, பாலாவுடன் குடை எடுத்துக் கொண்டு, காரில்.விசும்பின் துளிகள் பரவலாக மேலும் குளிரூட்டியது.

நிறுத்தம் அடைந்து, வரிசையாக கடைகள்:மீன் கடை, காய்கறி கடை,ரொட்டி, இனிப்பு கடை, காலணி/மூடணி கடை, ஒப்பனைப் பொருட்கள், பழக்கடைகள் வரிசையாக பிரஞ்சு மொழியில் கூவி அழைத்தனர், வாடிக்கையாளரை.
வண்டிகளில் இறக்கி, கூடாரம் அமைத்து, வண்ணக் கோலத்தில்.நம் ஊரில் காணாத காய்கறிகள், பழங்கள்.

'அவக்கெடா', போன்ற காய்/பழம், 'அவக்கேடு' என்று நினைக்காதீர். இலத்தின்_அமெரிக்க நாட்டிலிருந்து தோன்றிய வெள்ளரி ஒத்த தோற்றம்.ஆயினும் வெள்ளரி அன்று! அதை நறுக்கி, 'சலாத்' எனும் கலவை, தக்காளி நறுக்கித் துண்டுகள், மிளகுத்தூள் தூவி உணவுக்கு முன் சாப்பிடுகின்றனர்.வெண்ணய் போன்ற குழைவு/சுவை, புளிப்பும்/இனிப்பும் இன்றி, 62 ஆண்டு கால நாவின் சுவைக்கு, புதிய அனுபவம், சுவைத்து அறிந்திட முயன்றோம், முழுமையாக.

அதனூடே, இது என்ன காய்/பழம் என்ற சரித்திரம் அறியும் முயற்சி.மகளும் அளித்ததைக் கூற, மருமகனும் கூடுதல் விவரம் அளிக்க, விடை தேடும் மனம் இணையத்தை நாட; எண்ணங்கள் விரிந்திட, ஆவல் கூடிட.

காய் அல்ல, ஒரு வகை பழம், தெற்கு மத்திய மெக்சிகோவில் தோன்றியது.பூத்து காய்க்கும் தாவர குடும்பம்,'லாராசியே' என்ற தாவரவியல் பெயர் தாங்கியது.100 கிராம் பழத்தில், 160 கலோரி சத்து உள்ளது.

நம்மூர் பப்பாளி போன்ற வடிவம் அல்லது குண்டு சுரைக்காய் தோற்றம் என்றும் கூறலாம்.1.2 கிலோ வரை கூட ஒரு பழத்தின் அளவு இருக்கும்.மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்து காய்க்கும்/கனியும், சில 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் எடுத்துக் கொள்ளும்.மேலும், சில காய்க்காது போனாலும், கூடுதலான மரங்கள் தோன்ற, மகரந்த சேர்க்கைக்கு உதவிடும்.

உடலுக்குத் தேவையான, ஆரோக்கியமான கொழுப்பான -'மோனோ சேச்சுரேடட் கொழுப்பு' உள்ளடக்கியது.கொழுப்பை குறைத்து, இதய நலத்திற்கு ஏற்றது.குளிர் நாடுகளில், குளிர்ந்த காலத்தில், பனி தாக்காத வகையிலான, 'அவெக்கெடா' பயிரிட வேண்டும்.

தட்ப-வெட்ப, துணை தட்ப-வெப்ப, பருவ நிலைகளில் மட்டும் பயிரிட தோதானது.20லிருந்து, 40 அடிகள் வரை வளரும்.5 அல்லது 7 ஆண்டுகளில், 200லிருந்து 300 பழங்கள் தரும்..ஓராண்டு விட்டு அதிக மகசூல் அளிக்கும், 'அவெக்கெடோ' மரம்.ஆண், பெண் இரு பாகங்கள் உடையது.

இரண்டு நாட்கள் மட்டும் அதன் பெண் பகுதி மகரந்த சேர்க்கைக்கு இரண்டிலிருந்து, நான்கு மணி நேரம் திறந்திருக்கும்.இந்த ஒரு பழமே நமது சிந்தனையைத் தூண்டும், புரிதல் ஏற்படுத்தும் எனின்; மேலும் சில பழங்களைக் கண்டேன்.

அவை குறித்தும் அறிந்து கொள்ள  ஆவல் கொண்டேன்.அறிவார்ந்த அலசலுக்கு எல்லையேது?

 இது குறித்து அசை போட்டு, தக்காளிகள் பலவகை, பீச் பழங்கள் குண்டாகவும்,தக்காளி வடிவத்திலும்; கிவி பழங்கள்; பருத்த, தடித்த,நீளமான கத்தரிக்காய், ஒவ்வொன்று கால் கிலோவிற்கு குறையாமல்; கோசு நிறை பெரிது, எடை இலகுவாக;வெள்ளை உருளை அனைத்து காய் கறிகளும், ஒரு கிழமைக்கு உகந்த கொள்முதல் 20 'ஈரோ'க்குள் (பிரஞ்சு பணம் ஒரு ஈரோ உரு.85).

நமது ஊர் சந்தை கொள்முதல் ஒப்பீட்டில், சிக்கனமாகவே எமக்குத் தோன்றியது.நடுத்தர/கீழ் நடுத்தர வகுப்பினரின் வரவு செலவிற்கு ஏற்ற/உகந்த சந்தை.

பீச் பழம் தேர்வு செய்யும் தருணம், கொள, கொளவென்று இருந்தது.கடைக்கார பெரியவர், இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் என்று எச்சரிக்கை தந்தார்., பக்கத்தில் தக்காளி வடிவ பழத்தை சுட்டினார்.

இவர் கடை பின்னால், ஒரு வெள்ளை நிற 'வேன்', பிரெஞ்சு எழுத்துகளில் பளிச்சிட, "கேட்டலோனியா", என்கின்ற வார்த்தைகள், என்னை நிமிர வைத்தது.

"ஸ்பெயின்" நாட்டில், தன்னாட்சி உரிமைக்காக,, சனநாயக முறையில், வெகுண்டெழுந்து போராடிய மக்களின், உரிமை உணர்வு, எமது நினவலையில் நீண்டது.காய்கறிகள் ஸ்பெயினிலிருந்து விற்பனைக்கு, வருகின்ற விவரம் கேட்டறிந்தேன்.'பிளாஸ்டிக்' குவளைகள் இத்தாலியில் இருந்து விற்பனைக்கு விநியோகம் ஆவதையும் அறிந்தேன்.

சந்தையை இரண்டு, மூன்று சுற்றுகள். உடல் நடைகூட்ட, உள்ளம் சிந்தனை விரைவூட்ட, உணர்வுகள் ஊட்டம் பெற, திரும்பும் வழியில், ஒரு பெண்மணி, கையில் துண்டறிக்கையுடன், விநியோகம் செய்திட, உடன் ஒத்த ஒருவரும் கைகளில் துண்டறிக்கையுடன்.

பாலாவக் கண்டவுடன் அவர் பேசத் தொடங்கினார்.சில மணித்துளிகள் கழிந்த பிறகே, அது உசாவல் என்றறிந்தேன்.தொடக்கத்தில் நம்மூர் மத பிரசாரம் போல் நமக்குத் தோன்றியது.

நானும் ஒரு துண்டறிக்கையை வாங்கி, தத்து, பித்து என்று படிக்க முயன்று புரிந்து கொண்டது, முதாலளித்துவத்திற்கு எதிரான ஒரு கட்சி/அமைப்பு என்பதை"முதலாளியத்திற்கு எதிரான ஒரு புதிய கட்சி", என்பது எமக்கு புரிந்த மொழி பெயர்ப்பு, பிரஞ்சு மொழியில்,"nouveau parti anti-capitaliste",
என்று அச்சிடப்பட்டிருந்தது.

 என் ஆர்வம் அறிந்த பாலா, நடுத்தர வயதைக் கடந்த அப்பெண்மணி, பேராசிரியை என்றும், அவர் பெயர், 'கிளமோன்',பள்ளியில் கிளர்ச்சி எண்ணம் உடையவர் என்றறியப்பட்டவர்.பாடம் நடத்தும் சமயம், பொதுப் பிரச்னை குறித்து தொட்டு விட்டால், மணிக்கணக்கில், மாணவர்கள் பாடத்தை பிடிக்காமல், சில சந்தர்ப்பங்களில் அவரைக் கிண்டி விட்டு, கிளரி விட்டு, வேடிக்கைப் பார்ப்பார்கள் என்றான்.

படிக்கும் மாணவருக்கு "பூர்சு" என்கின்ற உதவித் தொகையை பிரஞ்சு அரசாங்கம் குறைத்தபோது, ஆயுதம் வாங்குவதற்கு நிதி இருக்கிறது.கல்விக்கு உதவிட நிதி இல்லை, என அரசைக் கண்டிக்கும் போராட்டத்தை நடத்தியவர், என்று அவரது அருமை, பெருமைகளை, அடுக்கிக் கொண்டே, காரில், வீடு திரும்பினோம்.

பிரஞ்சுமொழி சரளம் இருந்தால், அவரிடம் என் மனவுணர்வுகளை நேரிடையாக பரிமாறிக் கொண்டிருந்திருக்க இயலும். ஆதங்கம் அலை மோத, இரண்டாவது ஞாயிற்று சந்தை பட்டறிவு, இப்படியாக என்னுள் பலமான ஓட்டம்!

Wednesday, May 9, 2018

பதில் யாது?

சிலை எடுப்பு அரசியல் சிறப்பு சேர்க்காது!
பொது நிலையில் செயற்பாடு உடையவர் இறப்பை, பகுத்தறிவில் சறுக்கி பதிவு செய்வது, மேலதிக சிறப்பியல்புகளை கூட்டுவது; மரணம் குறித்த பார்வையின் பழமைவாத, தொடர்ச்சியை மெருகேற்றுகிறது.

விமர்சனம் என்பதை விரோதமாக, குரோதமாக விளங்கிக் கொள்ளும் மனநிலை; நமக்கும் இறப்பு ஏற்பட்டால் இது போன்ற பாராட்டு/ நினைவேந்தல்/ சிலை எடுப்பு, நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்கின்ற அவா அழுத்தம், விவாதத்தில் உள்ளுறையாக அமைகிறது.

குடும்பம் என்னும் அமைப்பின்/ நிறுவனத்தின் கொந்தளிப்பு /குலைவு, தனிமனித சீற்றம், ஆவேசம், நிலைமையை சமாளித்திட இயலாது, தன்முனைப்பு அணுகுமுறையில்;

 பெண்ணுரிமையை புறந்தள்ளி; குழந்தைகள் உரிமையைக் குலைத்து; தப்பித்துக் கொள்ளும்.தாக்குப் பிடிக்க இயலாத மனோநிலை, மனச்சிதைவு சமூக வினையாட்டாளர் வசமாகி, வாழ்வை வலிந்து முடித்துக் கொள்ளும் போது, இவ்வகை தன் பார்வை அவசியம்.

 நெருக்கடிகள் தாண்டி வாழ வேண்டிய தேவை சமூக விதியாகும் நேர்வில், சமூகப் பிரச்னைகளில் நடைபோடும், தடம் பதிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் எவ்வாறு உழைத்திட வேண்டும்/ முடியும் என்கின்ற பகிரங்க/ வெளிப்படையான விமர்சனத்திற்கு, நம்மிடம் உள்ள பதில் யாது?

Wednesday, April 4, 2018

பழங்குடி மொழி காத்திடும் பூர்வீகக் குடிகள்

ஏப்ரல் 3 ந்தேதி, டைம்சு ஆப் இந்தியாவில் வெளியான, அழிவின்  விளிம்பில் உள்ள  பழங்குடி மொழிகளைப் பாதுகாத்திடும் பூர்வீகக் குடிகள்.


அலு குரும்பா, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது, நீலகிரியில், சற்றேறக்குறைய 1000 பேர் பேசக்கூடிய ஒரு மொழியாகும்.இந்த ஏப்ரல் மாதத்தில் அதற்கு எழுத்திலக்கணம் மற்றும் சொற்றொடரியல் அமையவிருக்கிறது.இம்மொழி பேசும்,  33 வயது, மலைவாழ் சமூகத்தின்.ஆர்.விசுவநாதன்,பாரதியார் பல்கலைக்கழக மாணவர். இதற்கான ஆய்வு செயல்பாட்டிற்கு முனைவர் பட்டம் பெறுகிறார்.

" நாங்கள் கன்னட கிளைமொழியை பயன்படுத்துகிறோம், எழுத்து வடிவம் கிடையாது.எமது மொழியை எழுத தமிழ் மொழியை பயன்படுத்தியுள்ளோம். எமது பணி, அருங்காட்சியக பொருளாக இம் மலைவாழ் மக்களைப் பற்றி, பின்னாளில் அறிந்து கொள்ள இயலும்' என்கிறார் ஆய்வாளர்.

"எமது இளம் பழங்குடியின் வயது 20 ஆகும். வாழ்நாள் எதிர்பார்ப்பு எம் மக்களுக்கு, 60 ஆண்டுகளைத் தாண்டவில்லை.வேலைக்காக நகரங்களுக்கான மக்களின் புலப்பெயர்ச்சி, மக்கள் தொகை படிப்படியாக சரிவு" ஆகியவைகளும் மொழி அழிவிற்கு காரணம் என்கிறார் தமது ஆய்வுக் கட்டுரையில், கோத்தகிரி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இவர்.

காலனியாதிக்கம், இடப்பெயர்ச்சி, மற்றும் நோய்க் கொடுமைகளிலிருந்து மீண்டு, வரி வடிவம் இல்லாது,பேச்சு வழக்கில், நினைவு நிலையிலேயே வாழ்வது என்பது சாதரணமான சாதனை அன்று.

 வாய்மொழி வழக்கு என்பது, அலுகுரும்பா, தோடா, கோடா, எரவல்லா மற்றும் பேடா பழங்குடி மொழிகளுக்குரிய  பாரம்பரியம் ஆகும்.மொழி வகைகள் மற்றும் கிளைமொழிகள் காலத்தின் தாக்கம், புலப்பெயர்ச்சி, பிரதான மொழிகளின், ஊடுருவல்,விசுவாசிகளின் தளம் இழப்பு ஆகிய காரணிகள் இம்மொழிகளை வாயடைத்து விட்டன.

அணமையில் வெளியான ஆய்வில், திராவிட மொழிக் குடும்பம், 80 வகையான மொழிகள், 220 மில்லியன்(22 கோடி) மக்கள் தொகுதியினரால் தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன.4500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்றும் இம்மொழிகளில் எத்தனை நீடிக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

இந்திய மக்கள் மொழி அளவைத்துறை, கணேஷ்தேவி, இந்தியாவின் வாழும் மொழிகள் குறித்து பதிவு செய்பவர், வீழ்ச்சியில் உள்ள மொழிகள் யாவும், "கணினி ரீதியில் இறந்துவிட்டன", "தமிழ்நாட்டில், 17 மொழிகள் அவ்வாறு இறந்துவிட்டன, அவற்றில் சில பேட்டா குரும்பா மற்றும் எரவல்லா" என்கிறார்.

மேலும், ஒரு மொழியின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன, கல்வி அமைப்பில் மொழி பயன்பாடின்றி இருப்பது முதல் அதை பேசும் மக்கள் புலம்பெயர்வது வரை உள்ளதும் ஆகும்.

 மைசூரில் உள்ள, மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர், வி.ஞானசுந்தரம், எரவல்லா மொழி குறித்து ஆய்வு செய்து அம்மொழியின் கடைசி பேச்சுக்குரியவர் முருகேசன் உள்ளிட்டோரை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியவர், " மொழிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்....ஆனால் ஆய்வு என்பது ஒன்று, மொழி பேசுவது என்பது வேறு" என்று பதிவு செய்கிறார்.




Thursday, March 29, 2018

திண்ணை வரை விடுதலை!





உறவுகளுடன் வாழ்ந்தால் பூக்கோலம்தான்! கரவுகளுடன் வாழ்ந்தால் சாக்கோலமா? உறவுகளை தொலைத்து உருப்பட முடியுமா? வளர்க்கப்பட்ட சூழல், வசம் தொலைந்த சுயம், வளைய வருமா?

 அங்கு செல்லாதே! இங்கு செல்லாதே! அடுக்கடுக்கான கட்டளைகள், சிறார் பருவத்தின் சிறகை கத்தரிக்க, தத்தி, தாவி தெருக்கதவைக் கடந்து திண்ணை வரை விடுதலை வெளிச்சம்;

காற்று புன் முறுவலுடன் வரவேற்க; கிட்டாத சிநேகிதம் எட்டிப் பார்க்க; சில கணம் சிட்டென பறந்தோடி; பொழுதுபோக்க; அழைக்கிறார் உள்ளிருந்து,' எங்கே சென்றாய்?

' வேனிற்காலம், வேர்க்குரு வாரிக்கொட்டும்; அம்மை ஆள் தேடும்!' குடும்ப எச்சரிக்கை ஒலிப்பானுக்கிடையில், விளையாட்டும் வினை சேர்க்கும்.

ஆட்டம் போட்ட அலுப்பில், பாட்டியின் அரவணைப்பில், விடுகதைகள் தாலாட்ட;  நீதிக்கதைகள்பாலூட்ட; தாழ்வாரக் காற்று தாளம் இசைக்க; வெண்ணிலா வெளிச்சம் தூக்கம் சேர்த்திடும் வெறுந்தரையில்!

Saturday, March 24, 2018

பின்னணி என்ன?

புதுச்சேரியில் கம்பி வட சேவை (கேபிள் தொலைக்காட்சி) வழங்கும் நிறுவனங்கள் சந்தாவாக உருவா.100 வீதம் வாடிகையாளர் வசம் வசூலித்து வருவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்தி பத்திரிக்கையில் வெளியிடப் பட்டிருந்தது.மேலும், கம்பி வட சேவை அமைப்புகள் சந்தா தொகையை-கட்டணத்தை- உயர்த்த அனுமதி கேட்டிருந்ததாக அதற்கு அரசாங்கம் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இதில், ஒரு உண்மை யாதெனில், ஒவ்வொரு வாடிக்கையாளர் வசமும் சந்தா தொகையாக, மாதம் ஒன்றுக்கு உருவா.200 வீதம் வசூல் செய்யும் போது, உருவா.100 வசூல் செய்வதாக தவறான தகவல் அளிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, இணைப்புகளின் எண்ணிக்கையும் குறைத்து காண்பிக்கப்படுகிறது.

பெரும்பாலும், கம்பிவட சேவை நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் அல்லது அரசியல் அதிகாரத்திற்கு மிகுந்த நெருக்கம் உள்ளவர்களால் நடத்தப்படுவதால் இதுபோன்ற, முறைகேடுகள் துணிவாக நடைபெறுகின்றன.

நகராட்சிகளும், கொம்யூன் பஞ்சாயத்துகளும் 10% விழுக்காடு, "கேளிக்கை வரி", அவரவர் அளிக்கும் கேபிள் இணைப்புக் கணக்கை சரியானதாக எடுத்துக் கொண்டு, சோதனை ஏதும் செய்திடாமல்,மிகக் குறைவாகவே வசூல் செய்கின்றன.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில், டிக்கெட் முத்திரை இடுவது, சோதனை செய்து, சரியான எண்ணிக்கையை, காட்சிகளின் அடிப்படையில் இறுதி செய்து," கேளிக்கை வரி" வசூல் செய்திடும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள், கம்பி வட சேவையில் அரசாங்கத்திற்கு வெகு காலமாக வரி இழப்பை பல இலட்சங்களில் அல்லது கோடிக்கணக்கில் ஏற்படுத்தியுள்ளன.

 மேலும், சினிமா திரையரங்குகளை வரி பாக்கிக்காக சீல் வைத்திடும் அதிகாரம், கேபிள் தொலைக்காடசி ஒலிபரப்பு நிறுவனங்களிடம் தயக்கம் காட்டுவதின் பின்னணி என்ன?

Tuesday, March 20, 2018

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு!

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு- எதிர்த்து திரையரங்கினர் போராட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு காலத்தில், சிறியதும் பெரியதுமாக, 30க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் இருந்தன.ஒரு காலத்தில் 'கெப்லே தியேட்டர்'; 'தகர கொட்டா'; 'டென்ட்டு கொட்டா' என்று எமது தந்தை கூற கேள்விப் பட்டிருக்கிறேன்.

 நான் அறிந்தது 'கந்தன் கொட்டா'; 'நியூடோன் டாக்கீஸ்'; 'கண்ணம்மை டாக்கீஸ்'; 'சிவகாமி டாக்கீஸ்'; 'வீனஸ் தியேட்டர்'; 'ராஜா டாக்கீஸ்' போன்றவைகள்.இராமன் திரையரங்கம்; 'ஜெயராம் திரையரங்கம்'; 'ஜீவா ருக்மணி' பிற்காலத்திய சேர்க்கைகள்.

 1980களில்,'ஆனந்தா மற்றும் லிட்டில் ஆனந்தா'- இரட்டை திரையரங்குகள் பலராலும் பேசப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து சினிமாத்தொழில் நலிவுற்றதால், தாக்குப் பிடிக்க இயலாமல் பல திரையரங்கங்கள் மூடுவிழா கண்டன, தொழில் மாற்றம் பெற்று, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இலாபகரத் தொழிலுக்கு உருமாற்றம் பெற்றன.

இவ்வகையில் 20 திரையரங்குகள் மூடப்பட்டன. நிலைமையை உணர்ந்த அப்போதைய அரசாங்கம், தமிழ்த் தலைப்பிட்ட தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தலைப்பிட்ட தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டும் 'கேளிக்கை வரி' விலக்கு தொடர்ந்து அளித்தது.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் 25% விழுக்காடு கேளிக்கை வரியாக சினிமாத் தொழிலுக்கு நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தது.இதில் 10% விழுக்காடு 'திரையரங்க பராமரிப்பு' செலவிற்கு போக, மீதம் திரையரங்கங்கள் செலுத்தி, நாள் ஒன்றுக்கு பல இலட்சங்கள் புதுவை அரசுக்கு வருவாயாக அளித்து வந்தன.

இந்நிலையில், 1.07.2017 முதல், மத்திய அரசு விதித்த 'சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டம், 2017, புதுவை அரசாங்கம் சட்டப்பேரவையில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. அதன்படி, 100 உருவாய்க்கு குறைவான 'டிக்கெட் கட்டணத்திற்கு' 18% விழுக்காடு' கேளிக்கை வரியாகவும்; 100 உருவாய்க்கு மேல் உள்ள கட்டணத்திற்கு 28% விழுக்காடும்  கேளிக்கை வரியாக; விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திரையரங்குகள், மாநில அரசு விதிக்கும் 25% விழுக்காடு, மத்திய அரசு விதிக்கும் 28% விழுக்காடு, ஆக மொத்தம் 53% விழுக்காடு' கேளிக்கை வரியாக", ரசிகர்கள் தலையில் சுமத்தி, வசூல் செய்து வருகின்றது.

ஒரு குடும்பம் பொழுதுபோக்கு செலவாக, கூடுதலாக 28% விழுக்காடு கொட்டி அழவேண்டியிருக்கிறது. சம்பள உயர்வு; கூலி உயர்வு இத்தனை சதவீத உயர்வு காணாத நிலையில், மறைமுக வரி, இதுவரை இல்லாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலக வங்கியே அதன் அறிக்கையில், அதிகமாக மறைமுக வரி  வசூல் செய்யும் நாடு என்று சுட்டிக் காட்டி உள்ளது.

'ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி விதிப்புக் கொள்கை' முழக்கம் என்னவாச்சு? சினிமாத் தொழிலுக்கே, "இரட்டை வரி விதிப்பு" இப்படியாக இருக்கும் போது மற்ற தொழில்கள் குறித்து சொல்ல வேண்டியது அவசியமில்லை. மக்களை வரி விதிப்பில் உறிஞ்சிடும் வஞ்சகம் மிகக் கொடுமையானது!

 இந்த இரட்டை வரி விதிப்பை எதிர்த்து, ஒரே தருணத்தில், " கேளிக்கை வரியாக", மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் செலுத்த இயலாது, ஒரு வரி மட்டுமே செலுத்துவோம் என்கின்ற போராட்டம், ஒரு வகையில், நுகர்வோர் உரிமைக்கான போராட்டமாகவும், நாம் காண வேண்டியுள்ளது.

 பல நுகர்வோர் அமைப்புகள் இது குறித்து, அதிக அக்கறை எடுக்காமல், எம்மால் தெளிவு படுத்திய பிறகும், நுகர்வோர் விழா கொண்டாட்டங்களிலேயே மூழ்கி உள்ளது.

16, மார்ச், 2018 முதல், தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் திரையரங்கள் குறித்து அரசாங்கங்கள் கண்டு கொள்ளவில்லை!

துணைநிலை ஆளுநர் , முதலமைச்சர்,  உள்ளாட்சித் துறை அமைச்சர், துறை செயலர் ஆகியோரைச் சந்தித்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியும் உரிய சாதகமான உத்தரவு  கிடைக்கவில்லை!

அனைவரும்  விழிப்புணர்வு பெற்று, அணிதிரண்டு வெகு மக்களின் வாழ்வாதரத்தை பலமுனைகளிலும் நுட்பமாக அழித்திடும் சூழ்ச்சியை வெல்ல, போராட வேண்டும்!

Monday, March 12, 2018

எகத்தாளம்

எதற்கெடுத்தாலும் ஏளனம், எகத்தாளம், ஒரு சிலர் வெளிப்பாடு.
சுளிப்பும், வலிப்பும் அவர் தோற்றம்.சுடு சொற்கள், சட சடவென வெளிக்கிளம்பும்.

 அழகிய முகம் அட்டகோணமாக, பட,படப்புடன், நிதானம் இழந்து, செவி மடுக்கும். சிந்தனை குறைந்து சில நேரம்.

அடுத்தவர் கூறுவதை தடுத்தாள்வதே சரி என்னும் பக்குவம். பழக்க, வழக்கமாக, இவரது வாழ்க்கைப் பயணம்.

Sunday, March 11, 2018

விழிப்பு!

நேற்றிரவு வெகுநேர விழிப்பு. சல்லிக்கட்டு-ஏறு தழுவல், தமிழரின் வீர விளையாட்டு, திட்டமிட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் தடை, உயிர்வதை காரணம் காட்டி, 'பீட்டா' அமைப்பின் வழக்கில் உச்சநீதி மன்ற நடவடிக்கை.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், கட்சி அரசியல் கங்கணம் கட்டி, இவ்வாண்டு தை மாதம் உறுதியாக சல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊடகங்களில் உற்சாக உத்தரவாதம் அளிக்கும்.

ஆளும் கட்சி வீச்சுரை,'இன்று ரொக்கம் நாளை கடன்' என்னும் அறிவிப்பாக, வெகு மக்களை புதிய கோணங்களில் திசைத் திருப்பும், ஏமாற்றும். காவிரி படுகையில்- கடைமடைப் பகுதியில் வேளாண் மக்கள் எதிர்கொள்ளும் துயரம், கொடுமை எழுத்தில் அடங்கா! சொல்லியும் மாளாது

.பயிர் காக்க உயிர் தொலைத்த உத்தமர்கள் பெட்டிச் செய்தியாக சில நாள்.தரவுகளை காத்திட தர்மத்தை விலை கொடுக்கும் அரசுகள், அரசியல் பலன்கள் இழந்திட விரும்பாது, சில ஆயிரங்கள் இழப்பீடு, இன்னல் போக்குமா?

நாடாளுமன்றமும், நிர்வாக அமைப்பும், நீதிமன்றமும் ஒரு மாநில அடித்தள மக்களுக்கு ஆதரவாக செயல் முனைப்பு காட்டாது, உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு உரம் போட்டு, மக்கள் கவனத்தை திசைத் திருப்பும் நடவடிக்கையை வெகு நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றுகிறது.

வேளாண்மையை ஒழித்திட்ட முந்தைய அரசு,உழவுத்தொழிலை ஒழித்திடு இன்றைய அரசு, உணவு உற்பத்தி மக்கள் நுகர்வுக்காக அல்ல ஏற்றுமதிக்காக என திட்டமிட்டு, பணப்பயிர்களை, மண்ணுக்கு பொருந்தாத வேளாண் விளைச்சல் பயிர்களை நடைமுறைப் படுத்தி, நாசமாக்கியது மட்டுமில்லாமல் இறக்குமதியை நம்பி, உள்ளூர் விவசாயத்தை படிப்படியாக ஒழித்து

தொழிற்சாலைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, பன்னாட்டு பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சூறையாட, மனித வளங்களை கூலி உழைப்பாளிகளாக்கிட, நுட்பமாக, சாமர்த்தியமாக,  கை கோர்த்து களப் பணியாற்றி வருகிறது.

இவ் வடிப்படையில்தான், தேசிய இனங்களின் கலாச்சார அடையாளங்களை, ஒவ்வொன்றாக, மொழி அழிப்பு/சிதைப்பு, விளை நிலம் ஒழிப்பு, மரபு ரீதியிலான கால்நடைகளை ஒழித்தல்,, வீர விளையாட்டுகளை முடக்குதல், தடை செய்தல் போன்ற பல்வேறு பரிமாணங்களில், கலாச்சார வல்லாண்மையை, பன்முகத் தன்மையை பாழ்படுத்தும், நாசப்படுத்தும் நயவஞ்சக செயல்களை, வாக்கு வங்கி அரசியல், முழு பலத்துடன், வலதுசாரி தேசிய வெறியாக, நிறைவேற்றி வருகிறது

(சல்லிக்கட்டு போராட்ட சமயத்தில், 15 சனவரி, 2017இல் எழுதியது. தற்போது பதிவு காண்கிறது)

Tuesday, March 6, 2018

ஆடி இப்படியாக!

ஆடி மாத அனுபவம். ஓர் இரவு, இப்படியாக!

  ஆடி மாதம் ஆலயங்களில் அன்றாடம் பூசைகள்.கஞ்சி வார்த்தல், கூழ் ஊற்றல்; சாமி ஊர்வலம்; வீதி உலா; நிகழ்ச்சிகள் வரிசையாக. தேர் வலம், வாத்தியங்கள் வரிசை சேர்க்க.இளைஞர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

.இடையிடையே வாண வேடிக்கை, பட்டாசுகள் வெடி, என கோலாகலம், கும்மாளம்.பகலில் தொடங்கி, இரவு நீளும். நிசப்த இரவின் நிம்மதி நெளியும், மனம் சுளிக்கும்.ஒலி, ஒளி பெருக்கிகளின் ஒய்யாரம்,ஓலம் கூட்டிசைக்கும்.அமைதி ஆர்ப்பரிப்பிடம் கெஞ்சும்.நிம்மதி தேடிய உறக்கம் கெஞ்சும், சப்தங்களின் ஆட்சியிடம்.

இரவு கடந்தும்,விடியல் நெருங்கும் வேளை, துயில் இழந்த குயில், காகம், பட்சிகள் ,உயிரினங்கள் துடித்தெழும், அச்சம் ஆடிப்போய் அரவத்துடன் குழந்தை அளறல், வீல் ஒலிபோல், விபரீதம் ஏதோ என்றுணர்ந்து, வைகறை வருத்தத்துடன் மூடி, மூடித்திறந்த விழிகள் எரிச்சலுடன், கடைசி வெள்ளி இதுதான் என்றறிந்தோ, என்றறியாமலோ பொழுது புலரும் பொருமலுடன், இருமலும் சேர்த்து.

 பொல்லாங்கு மனிதரின் போக்கு சகித்து.

தேவையில்லை!

சத்தத்துடன் அவன்
சித்தத்துடன் நான்
அமைதியில் நான்
ஆர்ப்பரிப்பில் அவன்
சலசலப்பில் அவன்
சலனத்தில் நான்

சித்தம் தேவை!
 சத்தம் தேவையில்லை!

Monday, March 5, 2018

நினைப்பில்!

சனவரி மாதத்தில்(28) என நினைவு. ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன்.பழைய நண்பரின் மகன் நிகழ்ச்சி. எப்படியாவது செல்ல வேண்டும் என்ற நினைப்பில்! கூடுதல் பயனாக பல பழைய நட்பு வட்டங்களையும் சந்திக்க இயலும் என்கின்ற ஆசையும்,ஆவலும் முந்தித் தள்ள விரைந்தேன்.

எதிர்பார்த்தபடியே பலரை சந்திக்க முடிந்தது. முகமன் கூற முடிந்தது.,சிலரிடம் உரையாடவும் வாய்த்தது. ஒரு சிலர் அக்கறையுடன், உடல் நலம் குறித்து உசாவினர். பொது நிகழ்ச்சியில் தற்போது சில சந்தர்ப்பங்களில் உங்களை சந்திக்க முடிகிறது என்கின்ற அவர்களின் விருப்ப உணர்வும் வெளிப்பட்டது.

சிலரிடம் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழையுங்கள் என்றும் கூற முடிந்தது.பத்திரிக்கையாளர் ஞானி அவர்களின் மறைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருக்கலாமே! எனும் விருப்பார்வத்தையும் வெளியிட முடிந்தது.

பள்ளி நண்பன் குப்புராசுவிடம்,' பரிக்க்ஷா' வீதி நாடக இயக்க செல்வாக்கில், தாக்கத்தில், புதுச்சேரியில் 80களில் தொலைபேசித்துறை தோழர்கள்,சி.டி..பத்பநாபன் முன் முயற்சியில் பாவண்ணன்,மகேந்திரன்,மதியழகன், அன்பழகன்,வில்லியனூர் தோழர்கள் அருனன், சரவணன், மாலதி இன்னும் பலர் பங்குகொள்ள, ஒத்துழைப்புடன், 'விழிப்பு வீதி நாடக இயக்கம்' என்கின்ற பெயரில், பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறோம்.

 'கூடங்குளம் அணு உலைத்திட்டம்',கருத்துருவான போதே அதற்கு கண்டனக்குரல் எழுப்பிய முதல் நிலம், புதுச்சேரி ஆகும்."அணு ஆபத்து தடுப்பு இயக்கம்" என்கின்ற பதாகையுடன், மேலங்கி அணிந்து, ஊர்வலமாக சென்று, புதுச்சேரி ஒதியஞ்சாலைத் திடலில் கூட்டம் நடந்தது.

நெடுமாறன், மணியரசன், அந்தன்கோமசு, அழகிரி ,ஞானி போன்றவர்கள் பங்குகொண்ட பெருந்திரள் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.இவை குறித்து எல்லாம் பழைய நினவுகளின் பதிவுகளை அசை போட இயன்றது.

இவை குறித்து விரிவாக பதிவு செய்யும் முனைப்பு,  ஒருங்கிணைப்பு யாவுமின்றி, தனி ஆவர்த்தனமாக, தன்முனைப்பு போக்கில் புதுச்சேரியில் சில பத்தாண்டுகளாக மேலோங்கி நிலவி வரும், ஆரோக்கியமற்ற  சூழல் விரிவாகியுள்ள  நேர்வு குறித்தும் எங்கள் விசனம் விரிந்தது

.மனநிறைவுடன், பேராசிரியர்.இளங்கோ அவர்களின் மகன் திருமண வரவேற்பு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. தனித்தீவாக இல்லாமல், தீவுக்கூட்டமாக செயல்பட, தோழர்.இரா.சுகுமாரன், பத்திரிக்கையாளர்.பி.எஸ்.பாண்டியன் போன்றோரிடம் என் விருப்பத்தை பகிர்ந்து கொண்டேன் .

Sunday, March 4, 2018

சமத்துவமின்மைக்கு எதிராக!


இந்திய சமூகச் செயற்பாட்டுப் பேரவை, புதுச்சேரி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்ட வாரம் 19 முதல் 26 சனவரி, 2018ஐ முன்னிட்டு,

 சமத்துவமின்மைக்கு எதிராக உலகெங்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்தியாவில் தமது வாழ்விடங்களிலிருந்து கொடூரமாக விவசாயிகள், நகர ஏழை மக்கள், மற்றும் தெரு வியாபாரிகள் அகற்றப்படுவதை நாம் தடுத்திடுவோம்.

சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவோம் என்கின்ற முழக்கத்தை முன்னிறுத்தி, புதுச்சேரி, தலமை அஞ்சல் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்,  27, சனவரி அன்று காலை 10 மணி அளவில்  நடைபெற்றது.

அமைப்பாளர் சீனு.தமிழ்மணி, தோழர்.மோகனசுந்தரம், சி பிஎம் எல்.தோழர்.பாலசுப்ரமணியன், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வன், சமூகச் செயற்பாட்டாளர், முத்துக்கண்ணு மற்றும் பல சனநாயக அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உலக பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்காக சுவிட்சர்லாந்து டவோஸ் மலை வாச தலத்தில் வசதி படைத்த பகட்டுக் கூட்டாளி நாடுகள் சமத்துவமின்மையை அதிகரித்திடவே முகாமிட்டிருக்கின்றனர். சமத்துவமின்மையை மக்கள்தான் ஒழிக்க இயலும்.

சமமான உலகம் கோரி மக்கள் அணி திரள்கின்றனர் எல்லைகளைக் கடந்து, என்கின்ற உணர்வு பூர்வமான எண்ண ஓட்டங்களை, யதார்த்த நிலையிலிருந்து அனுபவித்திடும் துன்ப நிலைகளில் பாடம் பெற்று, உலக வணிகப் பேராசை, சுரண்டலுக்கு அடிபணியோம், என்பதை உரக்க உணர்த்திய  வெகுதிரள் போராட்டமாக  ஆர்ப்பாட்டம் அமைந்தது.

Friday, March 2, 2018

நிரல்கள்

சிதறிய கனவுகள்
சிறைப்பட்ட உணர்வுகள்.

கறைபட்ட எண்ணங்கள்
குறை சேர்த்த குழப்பங்கள்.

நிறைகெட்ட செயல்கள்
கொந்தளிக்கும் நிரல்கள்.

சிட்டம் கட்ட!

முன்னிலைப் படுத்தியவன் அல்ல
என்னிலை ஏற்றம் கருதியவன் அல்ல.

உன்னிலை உணர்த்த
பொதுநிலை உணர்த்த,

பல நிலை கடந்தவன்,
பதவியைத் துறந்தவன்.

தன்நிலை இழுக்க
தன்னழுத்தம் சேர்க்க,

தமிழ் அமைப்பு
தலை சேர்ந்தவன் அல்ல,

பட்டறிவில் புடம் போட்டு
பக்குவம் பல அறிந்து,

இயக்கப் போர்வை துறந்து
தனியானேன்.

கூட்டம் தவிர்த்து
கூர்ந்தறிந்தேன் தொலைவில்.

வட்டத்திற்குள் வட்டம்
சிட்டம் கட்ட,

சிறுபான்மைக் கூட்டம்
சிதறிப்போக,

பெரும்பான்மை பொருள் தேடி
பொருமிய மனிதர்,

போக்கின் பொழுதுகள்
யாவும் அறிந்தேன்.

போக்கில்லை
அவருக்கு.

இறுகிய மனநிலை
ஈர்த்திடும்
அணி சேர்க்கை.


சொல்லாடல் சுரங்கத்தில்
மல்லாடல் மைந்தர்கள்.

சுகமான தருணங்களில்
அகமான ஆர்வலர்கள்.

வினையாடல் விட்டொழிந்த
வீணர்கள் ,
வினோத துரோணர்கள்.

விடுதலையில்லை!

வாழ்நாள் சிறைவாசிகள்!
கருத்தியலின் அடிமைகள்!!

Thursday, March 1, 2018

திரிசங்கு

வாழ்க்கையின் தொடக்கமே தடுமாற்றமாயின், தடம் மாற்றம் தவிர்க்க இயலாதது.தனி மனிதனாக, தன்னிச்சையாக தீர்மானிக்கும் துணிவின்மை.குடும்பத்தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது/உடன்படுவது. ஏதோ சில புரிந்து கொள்ளாத நிர்ணயிப்புகளை நிபந்தனைகளாக முன்மொழிந்து சில நடைமுறைக்கு வந்தபோது வெற்றிக் களிப்பில்.

மெய்யாக,  குடும்ப வாழ்க்கை, மண வாழ்க்கைக்கு அவசியமென, உகந்த நிர்ணயிப்புகள் குறித்த, புரிதல் இன்றி, பல பத்தாண்டுகள் கழிந்த பின், பின்னோக்கிய பரிசீலனையில் பளிச்சிடுகிறது உண்மை. தவிர்க்க இயலா விதியின் கீழ், தடமாற்றமின்றி, எண்ணங்களை மடைமாற்றி வாழ்கிறேன்.

இதன் பிறகு என்ன செய்வது? இயலாமை நடையில் இன்முகம் பிதுக்கி, நாள்கள் கடத்துவத. நகரிகம் கருதி, பண்பென்று வேறு பொருள் கொள்ள முகமூடி தரிப்பு.

வாழ்க்கை கூத்தில், வண்ண, வண்ண விளக்கொளியில், வரிசங்க முழக்கத்தில் திரிசங்கு பயணம். தினம் ஒரு குணம், தீர்க்கமற்ற மனம்.

அடியார்!

முகமூடி அணிகிறார்,
தினம் ஒரு வண்ணத்தில்
திரிகிறார்!

திசைமாரி, பசை தேடி
அவதார ஆண்டவனின்,
அடியார்!

அவரையும் தாண்டி
 ரூபம் எடுக்கிறார்!

சுய ரூபம் தொலைத்து!
,
நன்மை ஒழிந்து
 தீமை வெல்ல,

தலைகீழ் நீதி
தரணிக்கு அளித்திட ,

புதியதோர்
 விதி செய்கிறார்!

புண்ணியக்கோடி!.