Thursday, March 1, 2018

திரிசங்கு

வாழ்க்கையின் தொடக்கமே தடுமாற்றமாயின், தடம் மாற்றம் தவிர்க்க இயலாதது.தனி மனிதனாக, தன்னிச்சையாக தீர்மானிக்கும் துணிவின்மை.குடும்பத்தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது/உடன்படுவது. ஏதோ சில புரிந்து கொள்ளாத நிர்ணயிப்புகளை நிபந்தனைகளாக முன்மொழிந்து சில நடைமுறைக்கு வந்தபோது வெற்றிக் களிப்பில்.

மெய்யாக,  குடும்ப வாழ்க்கை, மண வாழ்க்கைக்கு அவசியமென, உகந்த நிர்ணயிப்புகள் குறித்த, புரிதல் இன்றி, பல பத்தாண்டுகள் கழிந்த பின், பின்னோக்கிய பரிசீலனையில் பளிச்சிடுகிறது உண்மை. தவிர்க்க இயலா விதியின் கீழ், தடமாற்றமின்றி, எண்ணங்களை மடைமாற்றி வாழ்கிறேன்.

இதன் பிறகு என்ன செய்வது? இயலாமை நடையில் இன்முகம் பிதுக்கி, நாள்கள் கடத்துவத. நகரிகம் கருதி, பண்பென்று வேறு பொருள் கொள்ள முகமூடி தரிப்பு.

வாழ்க்கை கூத்தில், வண்ண, வண்ண விளக்கொளியில், வரிசங்க முழக்கத்தில் திரிசங்கு பயணம். தினம் ஒரு குணம், தீர்க்கமற்ற மனம்.

No comments: