சாவுக்கா பூத்தோம்!
எம்மை எப்படி!
அப்படி அழைப்பீர்!
கடற்கரை சாலைகளில்!
சன்னியாசித் தோப்பில்!
பாப்பம்மா இடுகாட்டில்!
வெண்மை நிறத்தில்!
வெளிர்,
முளரி நிறத்தில்!
அலை, அலையாக!
அது சாவுப் பூ!
பறிக்காதே!
என்பார்
கல்லறை
வாணரப் பேட்டையில்!
காட்சிப் பொருளாக!
எட்டிப் போய்!
எம்மை !
தொட்டியில் கூட
வைக்கவில்லை!
வாழ வைக்கும்
எம்மை!
விலக்கி வைத்தீர்!
எசமானுக்கு புரிகிறது!
'வேப்பிலையை
தம் மாப்பிள்ளை'
என்றவர்!
இரத்தப் புற்றுக்கு
எம்மிடம் !
சாரம் இருக்கிறது
என்று!
No comments:
Post a Comment