15.12.2018ல் "இலக்கியச்சோலை கவியரங்கத்தில்" வாசித்த கவிதை
எண்ணத் திரைகள் ஏழு விலக்கிட
ஏற்றத் தாழ்வு பழுது நீக்கிட,
ஊருக்கும்,உலகுக்கும் உள்ளொளி ஏற்றி
அன்பே வாழ்வின் அடிப்படை என்று,
வெண் முரசம் கொட்டினான் நாட்டுக்கவி
அன்று.
நால் வகுப்பும் தொழில் வகுப்பே
தோல் வகுப்பல்ல என்றான்.
தொண்டர் என்றோர் வகுப்பில்லை,
தொழில் செய்யா சோம்பலுக்கு விடிவில்லை
என்றான்.
பெண்ணுரிமையே, மண்ணுரிமை என்றான்
பேதமை அகற்றும் கல்வியே மனித உரிமை
என்றான்.
சுரண்டல் ஒழித்திடும் மண் விடுதலை வேண்டினான்,
அறிவும், நல் ஆன்மீகமும் நாட்டினான்,
நானில சமத்துவம் நாட்டின் முன்னேற்றம்
கூட்டினான்.
அன்பின் வழியது சாத்தியம் வேறில்லை
உணர்த்தினான்.
எண்ணத் திரைகள் ஏழு விலக்கிட
ஏற்றத் தாழ்வு பழுது நீக்கிட,
ஊருக்கும்,உலகுக்கும் உள்ளொளி ஏற்றி
அன்பே வாழ்வின் அடிப்படை என்று,
வெண் முரசம் கொட்டினான் நாட்டுக்கவி
அன்று.
நால் வகுப்பும் தொழில் வகுப்பே
தோல் வகுப்பல்ல என்றான்.
தொண்டர் என்றோர் வகுப்பில்லை,
தொழில் செய்யா சோம்பலுக்கு விடிவில்லை
என்றான்.
பெண்ணுரிமையே, மண்ணுரிமை என்றான்
பேதமை அகற்றும் கல்வியே மனித உரிமை
என்றான்.
சுரண்டல் ஒழித்திடும் மண் விடுதலை வேண்டினான்,
அறிவும், நல் ஆன்மீகமும் நாட்டினான்,
நானில சமத்துவம் நாட்டின் முன்னேற்றம்
கூட்டினான்.
அன்பின் வழியது சாத்தியம் வேறில்லை
உணர்த்தினான்.
No comments:
Post a Comment