கோடையில் தவிக்கும் வாய்
தகிக்கும் மெய்
வரிசைக் கட்டும்
நீர்க் குடங்கள்
நெருக்கித் தள்ளும்
கூட்டம்
விசும்பின் பொழிவில்
விக்கி நிற்கும்
சிக்கி தவிக்கும்
உபரி நீர் உருப்படியாய்
தேக்கி வைக்க
ஆறு இல்லை
ஏரி இல்லை
குளம் இல்லை
வாய்க்கால் வரப்பு இல்லை
தார்ச் சாலைகள் உண்டு
பாலங்கள் உண்டு
கழிவு நீர் கால்வாய் உண்டு
No comments:
Post a Comment