தண்டனை அடைந்தவர்களில், மோதல் கொலை சிறப்பு தேர்ச்சியாளார் என்றழைக்கப்படும், சட்டிசுகர் பிரிசேழ் திவாரி மற்றும் நாசர் சித்திக் ஆகிய இருவரும், குடியரசுத் தலைவர் விருதும், சிறப்பு பதவி உயர்வும் அளிக்கப்பட்டவர்கள், என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மக்கள் சிவில் உரிமைக் கழகம், சட்டிசுகார் கிளை அமைத்த, இந்த உண்மை அறியும் குழுவிற்கு, டாக்டர்.பினாய்க் சென் மற்றும் வழக்கறிஞர் அமர்நாத் பாண்டே உறுபினர்களாக இருந்தனர்.சர்குசா மாவட்டத்தில் முதல் போலி மோதல் வழக்கில், உண்மை அறியும் குழு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் பலியானவர்கள் சாதரண கிராமவாசிகள், தமது கைகளை மேலே தூக்கிய பிறகு, கொடூரமாக திவாரி மற்றும் சித்திக் தலைமையிலான காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதை, தெளிவாக எண்பித்தது.
அமர்நாத் பாண்டே , மூத்த வழக்கறிஞரும் இந்திய கம்யூனிசுடு கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். இவர், மோதல் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுத்திட அரசாங்கத்திடம் முறையிட்டு பலன் ஏதும் இல்லாத காரணத்தினால், சம்பந்தப்பட்ட வழக்கு மன்றத்தில் புகார் பதிவு செய்தார். எதிர் நிலையாக அரசாங்கம் ஆனது, குற்றவாளிகளான காவல் துறையினருக்கு பதக்கங்கள் அளித்து, மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வு இழப்பு ஏற்படுத்தியது.
2 comments:
வாழ்த்துக்கள்!
அது என்னாங்கோ "சட்டிசுகார்" மற்றும் கம்யூனி"சு"டு?
Post a Comment