பருவ மழை பலமாய்
வளம் அளிக்க வகையாய்
தவிக்கும் சாலைகள்
தடுமாறும் சாக்கடைகள்
படகாகும் வாகன ங்கள்
குள ங்களைத் தேடும் நீரோட்டம்
தேம்பி அழும் குழந்தை போல்
தெருவில்
வாய்க்கால்கள் கால்வாசி
முகவரி இழந்த அஞ்சலாய்
கண்மாய்கள் மனைகளாய்
இழந்த தேசமாய் ஏரிகள்
உறவைத் தொலைத்து
கழிந்த ஒற்றைப் பனை யாய்
தாங்கும் திறன் குறைந்து
தவிப்பில் தள்ளாடும்
துணை தேடி ஊருக்குள்
வழமையாக ஆலோசனை
தயாரிப்புகள் தேர்விற்கு
முதல் நாள் முடுக்கமாய்
முணகிடும் மக்கள்
முடக்கத்தில்
No comments:
Post a Comment