Tuesday, December 4, 2007

இந்தியா- வளர்ச்சிக் குறியீட்டு எண்!

இந்தியா, அய்க்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128க்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது, இது நல்ல செய்தி அல்ல. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 1990லிருந்து, ஆன்டுதோறும் மனித வளர்ச்சி அறிக்கையை தயாரித்து வருகிறது. வளர்ச்சித் திட்டத்திற்குப்பின் மக்களை மையப்படுத்தும் நோக்கத்திற்கு, முக்கியம் அளித்து இவ்வறிக்கையை தயாரித்து வருகிறது.

1. வாழ்நாள் நீட்டிப்பு
2. முதியோர் கல்வி அளித்தல்
3. மக்களின் வாழ்க்கைத்தரம்,

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவ்வறிக்கை தயார் செய்து, இறுதி செய்யப்படுகிறது.

இந்திய அரசு கல்விக்கு 1991ல் 12.2% சத வீதம் செலவு செய்தது. 2005ல் 10.7% சதவீதமாக இது குறைந்துள்ளது. 58% சதவீத குழந்தைகள் மட்டுமே காச நோய் தடுப்பு ஊசி அளிக்கப்பட்டுள்ளது. 22% சதவீதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் வயிற்றுப்போக்கு அளிக்கப்படும் வாய் வழி மருந்து அளிக்கப்படுகிறது.

பசுமையக வளி வெளிப்படுதுதல் பிரச்சனையிலும், இந்தியா அதிக அளவு வெளிப்படுத்துதல் காரணமாக மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128 க்கு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 2050க்குள் பசுமையக வளி/ காற்று வெளிப்படுத்துதலை 1990ன் அளவிற்கு ஒப்பிடும்போது 50% சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் 80% சத வீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2020க்குள் 20 லிருந்து 30% விழுக்காடு வரை குறைத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி அடையும் நாடுகள் 20% சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. அய்க்கிய அமெரிக்க நாடு, ஆண்டு தோறும் நபர் ஒன்றுக்கு, 20 டன் அளவு பசுமையக வளியை வெளிப்படுத்துகிறது. மிக அதிக அளவிலான பசுமையக வளியினை வெளியிடுகிறது. இந்தியா ஆண்டு தோறும், நபர் ஒன்றுக்கு 1 டன் பசுமையக வளியை வெளியிடுகிறது.

No comments: