கட்டிடத் தொழிலாளி
மாநிலங்களைக் கடந்து
உழைப்பை விற்கிறார்
ஒப்பந்தக் கூலியாக
ஓங்கி உயரும் வளாகம்
வணிகம்
ஒடுங்கிப் போகும் உடலும்
உழைப்பும்
குடும்பத்தைப் பிரிந்து
குழந்தைகளை மறந்து
வறுமை விரட்டிட
வயிற்றுப் பிழைப்பு நடத்திட
கட்டிட வேலை
காலை மாலை இல்லை
இரவில் பொங்கி
இடிபாடுகளில்
தங்கி
ஈட்டும் நோட்டும்
கைக்கு கிடைக்க வில்லை
வேலை இல்லை
தங்கிட இடமும் இல்லை
பாக்கி பணமும்
இலட்சம் வாரக் கணக்கில்
இல்லை
காவல்துறைக்கு புகாரும்
கடிதேகவில்லை
கழட்டி விட்டார்
விரட்டி விட்டார்
தொழிலாளர் துறை ஆணையரும்
இது எம் வரம்பில் இல்லை
மாநில எல்லையில் மனு செய்யுங்கள்
என்றார்
மனுநீதி நாட்டில்!
மனித நீதி ஏட்டில்!
No comments:
Post a Comment