பொழுதுகளின் போக்கு
அறியும்
காலச் சக்கர சுழற்சியின்
திசை வேகம்
நிதான நிலையில்
நின்று விளங்கும்
மரம், செடி, கொடிகள்
மாண்பறி
பறவைகள்
பக்குவ ஒலி கேட்கும்
மழை, இருட்டு, வெய்யில்
மாறிடும்
வாடைக் காற்று
கூடிடும்
சில்லிடும் சூழல்
சிவந்திடும் மேனி
உண்பதற்கு ஒரு நூறு
வகைகள்
அடுக்களையில்
அடுக்கம் காணும்
முடுக்காய் உண்ணும்
வேளை சேர்க்கும்
அணி அணியாய்
பணியாற்ற விரைந்திடும்
வாகன மனிதர் அதிகாலை
தொடங்கி
நடுநிசி வரை அக்கறை(ரை)
உழைப் பில்
ஆற்றலுடன் அன்றாடம்
கிழமை நாள்களில்
ஒன்றிரண்டு ஒழிவில்
துப்புரவு பணி சேர்த்திடுவர்
ஒப்புரவு சிரமேற் கொள்வர்.........
No comments:
Post a Comment