தினம் எழுத முடியவில்லை. ஏதோ
வேலைகள் பின்னிழுக்க, கட்டிப்போட,
உந்தன் பக்கம் திரும்பவில்லை ! திருப்பம்
இல்லை! அலைமோதும்
உள்ளம்.எண்ணங்கள் ஏ ராளம் .
அவ்வளவும் நாட் குறிப்பில் இறக்கிட ஆவல்
மிகவே!
ஆயினும், அது சல்லிசு இல்லை என்று எமக்கு
தெரியும்.
நிறை பார்க்க, நிறுத்துப் பார்க்க, சலித்துப்
பார்க்க வேண்டியவை, தொகையாய் உம்முன்
தோற்றமளிக்கும்.
சில நேர்வில் முந்தி நிற்கும்.முட்டிப்
பார்க்கும்.எட்டிப் போகும்.சில வேளை தட்டிப்
பார்க்கும், திறக்காத கதவுகள், தாழ் க் கோல்
தொலைந்து.
No comments:
Post a Comment