Tuesday, January 15, 2008

காவல் துறை ஊழல் - அர்சிரிகா சிங் -1

ஊழல் என்றால் என்ன?
காவல் அதிகாரத்தை தனிப் பட்ட அல்லது காவல் துறை அமைப்பின் நலனுக்கு அலுவல் ரீதியாக ஒரு காவல் துறை அதிகாரி பயன்படுத்தும் போக்கு, ஊழல் என்று வரையறை செய்து கொள்ளலாம். எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய செய்தி அல்ல இது. பல சிக்கலான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு அம்சத்தில் அனைவருக்கும் புலப்படக் கூடியது, உலக நாடுகளின் பல பகுதிகளிலும் 'விரிவடைந்து சிறக்கிறது'.
எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக,

1.அக நிலையில் நடக்கும் ஊழல்
2.புற நிலையில் நடக்கும் ஊழல்

என பிரித்து ஆராயலாம்.

முதலாவதாக, காவல்துறையின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்குள் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,அக நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

அடுத்து, காவல் துறையின் அதிகாரி ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பொதுமக்களிடம் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,புற நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

காவல்துறை ஊழலில் மிக முக்கிய கூறாக, அதிகார மீறல் அமைகிறது. தன் இலக்கிலிருந்து வழுவி குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக, ஊக்குவிக்கச் செய்கிறது. துறை நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கு நிலையிலும், ஊழல் மலிந்து திறமையான, வலிமையான செயல்பாட்டிற்கு தடையாக விளங்குகிறது.

முகாமையான காரணங்களில் ஒன்றாக, தொழில்சார்ந்த திறமையுடன் செயல்படாது , பெரும்பாலும் காவல்துறையினர் அரசியல்மயமாகி நிற்பது ஆகும். அரசியல்வாதிகளால் ஈர்க்கப்பட்டு, பலகீனமான, ஊழலில் திளைத்த அதிகாரிகள், ப தவி அமர்த்தம், மாற்றல் ஆகியவற்றிற்கு உடன் பட்டு, தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொது நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

- தமிழ் வடிவம் -

No comments: