மும்பாய்: மரின் டிரைவ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர், சுனில் மொரே, பதின் பருவ பெண்ணை, 21, ஏப்ரல், 2005ல், மேற்படி காவல் நிலையத்தில் கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக, 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டார்.உருவாய் 26,500 அபராத தொகையாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
சண்டிகார்: போதை மருந்துகள் கடத்தும் கும்பலிடம் இலஞ்சம் வாங்கிய காவல்துறையினர் குறித்து , செய்தி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டதை தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தொடர்புடைய நான்கு காவலர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிந்தனர்.இரு காவலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த, பிரபல குற்ற வழக்குகள்,நமது நாட்டின் நீதித்துறை அமைப்பு பற்றியும், தொடரும் ஊழல் நிலைமை குறித்தும் பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
No comments:
Post a Comment